கோவாவில் ஷிர்கான் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி

பெண்கள், குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
கோவாவில் ஷிர்கான் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி
Published on

கோவாவில் உள்ள ஷிர்கான் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

கோவாவில் உள்ள ஷிர்கான் கோவிலில் நேற்று இரவு வருடாந்திர ஜாத்ரா (ஊர்வலம்) நடைபெற்றது. அப்போது அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடியதால் நெரிசல் ஏற்பட்டது. இதனால் நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பெண்கள், குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடனடியாக காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முறையான அடிப்படை வசதிகள் செய்யாததே இச்சம்பவத்திற்கு காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com