

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் கைவினை கலைஞர்கள் புதுமையான ராமர் சிலை ஒன்றை உருவாக்கினர்.
ஒரு லட்சம் மதிப்பிலான 1,5,10 நாணயங்களை கொண்டு 25 கைவினை கலைஞர்கள் 20 நாட்கள் கடுமையாக உழைத்து 18 அடி உயரமுள்ள இந்த சிலையை உருவாக்கினர்.
இந்த ராமர் சிலை ஆசிய உலக சாதனை புத்தகத்திலும் இந்திய உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.
லக்னோவில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் உத்தரப்பிரதேச துணை முதல் மந்திரி பிரஜெஸ் பதக் நேற்று திறந்து வைத்தார்.