GOLD PRICE TODAY: ஒரே நாளில் 2-வது முறையாக உயர்ந்த தங்கம் விலை- குடும்ப தலைவிகள் அதிர்ச்சி

தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு இருப்பது குடும்ப தலைவிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் அதற்கு போட்டியாக வெள்ளியின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.
GOLD PRICE TODAY: ஒரே நாளில் 2-வது முறையாக உயர்ந்த தங்கம் விலை- குடும்ப தலைவிகள் அதிர்ச்சி
Published on

சென்னை:

தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் தங்கம் விலை ஆயிரக்கணக்கில் உயர்ந்து அவ்வப்போது வரலாற்று சாதனை படைத்து வருகிறது.

இந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.57,200-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு மாதமும் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

கடந்த அக்டோபர் மாதம் 17-ந்தேதி ஒரு பவுன் தங்கம் அதிகபட்சமாக ரூ.97,360க்கு விற்கப்பட்டது. இதையடுத்து தங்கம் விலை தீபாவளிக்குள் பவுன் ரூ.1 லட்சத்தை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தங்கம் விலை அதற்கு பிறகு உயரவில்லை.

தீபாவளி பண்டிகைக்கு பிறகு தங்கம் விலை தொடர்ந்து குறையத் தொடங்கியது. தீபாவளி பண்டிகை முடிந்த சில நாட்களில் ஒரு பவுன் தங்கம் ரூ.90 ஆயிரமாக குறைந்தது. இதனால் பெண்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

ஒரு மாதத்துக்கும் மேலாகவே தங்கம் விலை பவுன் ரூ.90 ஆயிரம் என்ற அளவிலேயே சற்று ஏற்ற இறக்கமாக காணப்பட்டது. கடந்த மாதம் 5-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.89,080-க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு விலை அதிகரிக்க தொடங்கியது.

இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக தங்கம் விலையில் திடீர் உயர்வு காணப்பட்டது. தினமும் விலை உயர்ந்து வந்தது. சென்னையில் கடந்த 5-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.96 ஆயிரமாக அதிகரித்தது. மறுநாள் 6-ந்தேதி ரூ.96,320 ஆக அதிகரித்தது. 3 நாட்கள் அதே விலையில் நீடித்தது.

கடந்த 9-ந்தேதி மீண்டும் பவுன் ரூ.96 ஆயிரமாக குறைந்தது. அதன் பிறகு நேற்று முன்தினம் முதல் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.96,240 ஆக அதிகரித்தது. நேற்று மேலும் உயர்ந்து ரூ.96,400-க்கு விற்கப்பட்டது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று புதிய உச்சம் தொட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.98 ஆயிரமாக அதிகரித்துள்ளது. வரலாற்றில் முதல் முறையாக தங்கம் ரூ.98 ஆயிரத்தை எட்டிப்பிடித்துள்ளது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,600 அதிகரித்து உள்ளது.நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.12,050-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.12,250-க்கு விற்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று 2-வது முறையாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.120 உயர்ந்து ரூ.12,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 960 உயர்ந்து 98,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு இருப்பது குடும்ப தலைவிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் ஒரு கிராம் தங்கம் ரூ.250-ம், ஒரு பவுன் ரூ.2 ஆயிரமும் அதிகரித்து உள்ளது. இந்த மாத இறுதிக்குள் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை எட்டிவிடும் என்று கருதப்ப டுகிறது.

தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் அதற்கு போட்டியாக வெள்ளியின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. கடந்த 5-ந்தேதி ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.196 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1 லட்சத்து 96 ஆகவும் இருந்தது. பின்னர் அது படிப்படியாக உயர்ந்து நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.209 ஆகவும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 9 ஆயிரம் ஆகவும் இருந்தது.

இன்று ஒரு கிராம் வெள்ளி மேலும் ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.216 ஆகவும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் ஆகவும் அதிகரித்து உள்ளது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.19-ம், ஒரு கிலோ ரூ.19 ஆயிரமும் அதிகரித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com