வயதானால் என்ன?- ஐம்பது வயதிலும் அழகாக இருக்க இந்த 5 போதும்!

தினமும் தயிர் அல்லது மோரை உணவில் சேர்த்துவர வேண்டும்.தினமும் தவறாமல் உட்கொண்டு வந்தால், சர்க்கரை நோயின் அபாயமும் குறையும் என்று தெரிவிக்கப்படுகிறது.
வயதானால் என்ன?- ஐம்பது வயதிலும் அழகாக இருக்க இந்த 5 போதும்!
Published on

வயதாவது, எவருக்குமே கவலையை ஏற்படுத்தும் விஷயம்தான். அதிலும் பெண்கள், வயது கூடுவதை வெறுப்பார்கள்...

ஆனால், 50 வயது ஆனாலும், பெண்கள் சில உணவுப்பொருட்களை உட்கொண்டு வருவதன் மூலம், அழகு மாறாமல் திகழலாம், வயதான தோற்றத்தைத் தவிர்க்கலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

அந்த உணவுகள் விவரம்...

பழங்கள்

தினமும் ஏதாவது இரண்டு பழங்களை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்படி உட்கொள்ளும்போது அது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்குவதோடு, சருமத்தின் ஆரோக்கியத்துக்கும் நன்மை பயக்கிறது. அதுவும் பப்பாளி, ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் சரும செல்களின் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின்களும், சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகளும் அதிகம் உள்ளன. எனவே நீண்ட காலம் இளமையாக, அழகாக இருக்க விரும்பும் பெண்கள், எந்தப் பழம் பிடிக்குமோ அதை தவறாமல் சாப்பிடுங்கள்.

கீரைகள்

பசலைக்கீரை, முருங்கைக்கீரை போன்ற கீரைகளில் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகமாக உள்ளன. இந்த கீரைகளை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அவை எலும்புகளை வலிமையாக வைத்துக்கொள்வதோடு உடலில் ஆற்றலும் நிலையாக இருக்கும். முக்கியமாக கீரைகளை அதிகம் உணவில் சேர்க்கும்போது, சருமத்தின் ஆரோக்கியமும் அழகும் மேம்படும்.

கொட்டைப்பருப்புகள், விதைகள்

பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற கொட்டைப்பருப்புகள், பூசணி, ஆளி விதைகள் போன்றவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகளும் புரதங்களும் அதிகம் உள்ளன. இவற்றை தினமும் உட்கொள்ளும் போது, இவை இதயத்தை வலிமையாக வைத்துக்கொள்வதோடு, சருமத்தை பொலிவாகவும் இருக்கச் செய்யும்.

தயிர் அல்லது மோர்

தயிர் அல்லது மோரில் புரோபயாடிக்குகள் அதிகம் உள்ளன. இவை செரிமானத்தை எளிமையாக்கும், குடல் ஆரோக்கியத்தைக் காக்கும் என்பது நிபுணர்கள் கருத்து. உடலில் செரிமான மண்டலம் சிறப்பாக செயல்பட்டு வந்தாலே, பாதி சரும பிரச்சனைகள் தீர்ந்துவிடும். எனவே தினமும் தயிர் அல்லது மோரை உணவில் சேர்த்துவர வேண்டும்.

சிறுதானியங்கள், முழுத் தானியங்கள்

தினசரி உணவில் சிறுதானியங்கள் மற்றும் முழுத் தானியங்களை சேர்த்து வந்தால், அவை உடலில் இன்சுலினை சீராக வைத்துக்கொள்ள உதவும். நீண்ட நேரம் உடலில் ஆற்றல் நிலைத்திருக்கும். அதுவும் இவற்றை தினமும் தவறாமல் உட்கொண்டு வந்தால், சர்க்கரை நோயின் அபாயமும் குறையும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே, பெண்கள் வயது கூடிக் கொண்டே செல்லும்போதும் இளமையாகவும், பொலிவான சருமத்துடன் அழகாகவும் தோன்ற வேண்டும் என்றால், மேலே தெரிவிக்கப்பட்டுள்ள 5 உணவுகளை அன்றாடம் உட்கொள்வது நல்லது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com