search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    • நீல நொச்சி, கரு நொச்சி, வெள்ளை நொச்சி என பல வகை நொச்சிகள் உள்ளது. ஆனால், எல்லவற்றிற்குமான மருத்துவ குணம் ஒன்றுதான்.
    • நிலவேம்பிற்கு சிறியாநங்கை என்ற பெயரும் உண்டு. பார்ப்பதற்கு மிளகாய்ச்செடி போன்று இருக்கும்.

    நமது வீடுகளில் செடி வளர்ப்பது என்பது அனைவருக்கும் பிடித்த ஒரு செயல் ஆகும். அதுவும் பெண்களுக்கு மிகவும் பிடித்த செயலாகும். நம் பாட்டி காலத்தில் வீடுகளில் மூலிகை செடிகளை வளர்ப்பது வழக்கம். ஆனால் நாம் அழகு சார்ந்த செடிகளையே தற்போது வளர்க்கிறோம். முன்பெல்லாம் உடல் நிலை சரியில்லை என்றால் வீட்டிலேயே மூலிகை செடிகளை வைத்து கசாயம் வைத்தோ அல்லது பத்து போட்டோ சரிசெய்து விடுவார்கள்.

    ஆனால் விஞ்ஞானம் வளர வளர அனைவரும் ஆங்கில மருத்துவ முறையை பின்பற்ற தொடங்கிவிட்டோம். இப்போதும் ஒரு சில மூலிகைகளை வைத்து நமது வீடுகளிலேயே சளி, இருமல், காய்ச்சல், அடிப்பட்ட காயங்களுக்கு மருந்து என நாமே சில விஷயங்களை செய்யலாம். அப்படி எந்த மூலிகை செடிகள் நமது வீட்டில் வளர்க்கலாம் என்பதை பார்போம் வாங்க...

    நொச்சி

    நீல நொச்சி, கரு நொச்சி, வெள்ளை நொச்சி என பல வகை நொச்சிகள் உள்ளது. ஆனால், எல்லவற்றிற்குமான மருத்துவ குணம் ஒன்றுதான். நொச்சி இலை, மஞ்சள் சேர்த்து ஆவி பிடிக்க எல்லா தலைவலியும் குறையும்.

    ஆடாதொடை: பேருகால கர்ப்பிணிகள் 8வது மாதம் முதல் இதன் வேரை கஷாயம் செய்து தினமும் குடித்து வந்தால் சுகப்பிரசவமாவது உறுதி. ஆடாதொடை இலையை நிழலில் காயவைத்து, பொடி செய்து காலை, மாலை பாலில் சேர்த்து குடித்து வந்தால் காரணமில்லாமல் வரும் இரத்த அழுத்தம், படபடப்பு குறையும்.

    தூதுவளை

    தூதுவளையுடன் மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் வறட்டு இருமல் குறையும். தூதுவளை பழத்தை வத்தலாக காயவைத்து, வதக்கி சாப்பிட்டால் கண் குறைபாடுகள் நீங்கும். தூதுவளையில் கால்சியம் சத்துக்கள் அதிகமுள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும்.

    கற்பூரவல்லி

    கற்பூரவல்லி என்ற பெயரும் உண்டு. இதன் தண்டு, இலைச்சாறை காலை, மாலை குடித்து வந்தால் தொண்டை சதை வளர்ச்சி குணமாகும். இதன் பருமனான இலைகளை வாழைக்காய் பஜ்ஜி போல பஜ்ஜி மாவில் கலந்து பஜ்ஜியாக சுட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.


    அருகம்புல்

    அருகம்புல், வெற்றிலை, மிளகு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவதோடு ரத்த ஓட்டமும் சீராகும். தோல் நோய்களும் குணமடையும். இவையெல்லாம் தொட்டிகளில் வைத்து வளர்க்க வேண்டியவை.

    நிலவேம்பு

    நிலவேம்பிற்கு சிறியாநங்கை என்ற பெயரும் உண்டு. பார்ப்பதற்கு மிளகாய்ச்செடி போன்று இருக்கும். நிலவேம்பு இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டால் விஷக்கடிகள் இறங்கும்.

    நிலவேம்பு இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து 30 கிராம் பொடியுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை கால் லிட்டர் அளவுக்கு வற்ற வைத்து கஷாயமாக குடித்தால் தீராத காய்ச்சலும் தீரும்.


    சோற்றுக் கற்றாழை

    கற்றாழையில் உள்ள நுங்கு போன்ற சதையை எடுத்து சுத்தமான தண்ணீரில் அலசி சமமான அளவில் பனங்கற்கண்டினை சேர்த்து காலை, மாலை இருவேளைகளில் சாப்பிட்டால் அந்த பிரச்னைகள் பறந்துப் போகும். செரிமான சக்தியை அதிகரித்து பசியை தூண்டும். மலச்சிக்கலை போக்கும்.

    மஞ்சள் கரிசாலாங்கண்ணி

    இது தலை முடிக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதைக் கீரையாக சாப்பிட்டால் கல்லீரல் வலுப்படும்.

    துளசி

    துளசியுடன் மிளகு, வெற்றிலை மற்றும் வேம்பு பட்டை ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் காய்ச்சல் குணமாகும். துளசி இலையை சாறு எடுத்து தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி குணமாகும். துளசி இலையை சாதரணமாக மென்றுத் தின்றால் ஜீரண சக்தி அதிகரிப்பதோடு, பசியும் அதிகரிக்கும்.

    • வீட்டிலேயே உடலுக்கு எந்த விதி பாதிப்பும் ஏற்படாமல் சுவையான சிக்கன் பிரைடு ரைஸ் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்
    • பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து நன்றாக 3 நிமிடம் வதக்கவும்.

    அலுவலகம் சென்று வரும் பெண்களும், ஆண்களுக்கும் மிகவும் சவாலாக இருப்பது சாப்பாடுதான். சில நேரங்களில் வேலை பளு காரணமாக ஹோட்டல்களில் சாப்பிடும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால் ஹோட்டல்களில் உபயோகிக்கும் மசாலா, சிக்கன், எண்ணெய் போன்றவற்றால் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும் என்று கவலையும் அடைகிறார்கள். உங்களுக்காக ஈஸியா வீட்டிலேயே உடலுக்கு எந்த விதி பாதிப்பும் ஏற்படாமல் சுவையான சிக்கன் பிரைடு ரைஸ் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம் வாங்க...

    தேவையான பொருட்கள்:

    முட்டை - 3

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    பூண்டு பொடியாக நறுக்கியது - ஒரு டேபிள் ஸ்பூன்

    எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம்

    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

    சோயா சாஸ் - 3 டீஸ்பூன்

    வினிகர் - ஒரு டீஸ்பூன்

    கேரட் - 1

    குடைமிளகாய் சிகப்பு மற்றும் மஞ்சள் - 1 ஒன்று

    வடித்த சாதம் - 2 கப்

    வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன்


    செய்முறை:

    • முதலில் scramble egg செய்ய ஒரு கடாயில் எண்ணெய் முட்டை உப்பு சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக கலக்கவும். பின்னர் அதை தனியாக ஒரு பக்கம் எடுத்து வைத்து கொள்ளவும்.

    • சிக்கனை 65 மசாலா சேர்ந்து பொரித்து எடுத்துக் கொள்ளவும். பொரித்த சிக்கன்களை சிறுசிறு துண்டுகலாக வெட்டிக் கொள்ளவும்.

    • கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய சிக்கன் சேர்த்து வதக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து நன்றாக 3 நிமிடம் வதக்கவும்.

    • அதனுடன் சோயா சாஸ், கேரட், குடமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

    • குடைமிளகாய் கேரட் வெந்ததும் வடித்த சாதம் சேர்த்து உப்பு மிளகுத்தூள் சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்

    • பின் scramble egg வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    • இதோ சுவையான சிக்கன் பிரைடு ரைஸ் வீட்டிலே ரெடி.

    இதுபோல் வீட்டிலேயே நாம் கண்ணெதிரே செய்து சாப்பிடும் உணவுகளால் நமது உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.

    • சியா விதைகளில் அதிகளவில் புரதச்சத்து உள்ளது.
    • பழங்களையும் பாலையும் கலந்து ஸ்மூதி செய்யும்போது அதில் சிறிதளவு சியா விதைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.

    சியா விதைகள் பார்ப்பதற்குச் சிறியதாக இருக்கும். அவை கறுப்பு, வெள்ளை, பழுப்பு ஆகிய நிறங்களில் இருக்கும். சியா விதைகளைத் தண்ணீரில் ஊற வைக்கும்போது களிமம் அதன் மேல் உருவாகும். சியா விதைகள் பல்வேறு நன்மைகள் கொண்டவை.

    பொதுவாக, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மீன் வகைகள், கொட்டைகள், விதைகள் போன்ற உணவு வகைகளில் அதிகம் இருக்கும். சியா விதைகளிலும் 'ஒமேகா 3' கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளது. மூளைச் செயல்பாடு, இருதய நலம் ஆகியவற்றுக்கு சியா விதைகள் மிகவும் நல்லது.

    நம் உடலில் இருக்கும் நார்ச்சத்து அளவை அதிகரிக்க சியா விதைகளை உட்கொள்ளலாம். நார்ச்சத்து அதிகம் கொண்டுள்ள உணவு வகைகளைச் சாப்பிடும்போது புற்றுநோய், இதய நோய், 'டைப் 2' நீரிழிவு, செரிமானக் கோளாறு போன்றவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.

    சியா விதைகளில் அதிகளவில்புரதச்சத்து உள்ளது. நம் உடலுக்குத் தேவையான அனைத்து அமினோ அமிலங்களும் நிறைந்த உணவு வகைகளில் ஒன்று சியா விதை.

    இதற்கிடையே சியா விதைகளை உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடிய வழிகளும் உண்டு.

    இரண்டு தேக்கரண்டி சியா விதைகளை அரை கப் பாலில் சேர்த்து அதை ஒரு ஜாடியில் நன்றாக மூட வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து ஜாடியை நன்றாகக் குலுக்கி அதைக் குளிர்சாதனப் பெட்டியில் குறைந்தது 15 நிமிடங்களாவது வைத்து விட்டு சாப்பிட்டு வரலாம்.

    40 கிராம் சியா விதைகளை ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்து அதை 30 நிமிடத்திற்கு ஊற வைத்துக் குடிக்கலாம்.

    பழங்களையும் பாலையும் கலந்து ஸ்மூதி செய்யும்போது அதில் சிறிதளவு சியா விதைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.

    பொதுவாக கேக் வகைகளில் கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். சிறிதளவு சியா விதைகளைச் சேர்த்துக்கொண்டால் கேக்கில் இருக்கும் நார்ச்சத்து, புரதம், ஒமேகா 3 அளவு ஆகியவை அதிகரிக்கும்.

    பொதுவாக பழ ஊறல் செய்யும் போது அதில் அதிகளவில் சர்க்கரை சேர்க்கப்படும். அதற்குப் பதிலாக சியா விதைகளை சேர்த்து சர்க்கரைக்குப் பதிலாக தேனைச் சேர்க்கலாம்.

    முட்டை சாப்பிட விரும்பாதவர்கள் அதற்குப் பதிலாக சியா விதைகளைச் சாப்பிடலாம். 15 கிராம் சியா விதைகளை மூன்று தேக்கரண்டி தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவது ஒரு முட்டைக்குச் சமம்.

    இருப்பினும், சியா விதைகளை உட்கொள்ளும் ஒருசிலருக்குச் செரிமானப் பிரச்சினைகள் ஏற்படுவதும் உண்டு. அதனால், சிறிதளவு சியா விதைகளை உட்கொண்டு, பக்கவிளைவுகள் ஏற்படுகின்றனவா என்பதை முதலில் பார்ப்பது சிறப்பு.

    • உடலுக்கு தேவையான புரதத்துக்கும் தயிர் அவசியமானது.
    • உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பது பற்றி பார்ப்போம்.

    உண்ணும் உணவில் தயிர் தவிர்க்கமுடியாத அங்கமாக இருக்கிறது. தயிரை ருசிக்க ஆர்வம் காண்பிக்காதவர்கள் கூட ரைத்தா, லஸ்சி, பச்சடி வடிவில் உட்கொள்கிறார்கள். தயிரில் புரோபயாடிக்குகள் நிறைவாக உள்ளன. அதில் இருக்கும் நன்மை தரும் பாக்டீரியாக்கள் குடல் ஆரோக்கியத்தையும், செரிமானத்தையும் மேம்படுத்தும். எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும், உடலுக்கு தேவையான புரதத்துக்கும் தயிர் அவசியமானது.

    தயிரை எப்போது சாப்பிடுவது சரியானது என்ற குழப்பம் பலரிடம் இருக்கிறது. அதனை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் அவரவர் உடல் நலனை பொறுத்து உண்ணும் நேரத்தை தீர்மானிப்பது நல்லது.

    குறிப்பாக சளி, இருமல், சுவாச கோளாறுகள் சார்ந்த பிரச்சினை இருப்பவர்கள் தயிர் உண்ணும் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். எந்தெந்த நேரத்தில் தயிர் சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பது பற்றி பார்ப்போம்.

    காலை: சுகாதார வல்லுனர்கள், ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி, காலையில் தயிர் சாப்பிட்டுவிட்டு அன்றைய நாளை தொடங்குவது வளர்சிதை மாற்றத்தை தூண்டும். தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் செரிமானத்தை சீராக்கவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

    பழங்கள் அல்லது முழு தானியங்களுடன் தயிர் கலந்து காலை உணவாக உட்கொள்வது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் அளிக்கும். அன்றைய நாள் முழுவதையும் திருப்தியுடன் உணரவைக்கும்.

    மதியம்: மதிய உணவில் அவசியமாக தயிரை சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் மதியம் தயிர் சாப்பிடுவது அன்றைய நாளில் இழந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை நிரப்ப உதவும்.

    பொதுவாக மதிய வேளை நெருங்கும்போது நமது உடலில் ஆற்றலின் அளவு குறைய தொடங்கும். சாப்பாட்டுடன் தயிர் சாப்பிடும்போது ஊட்டச்சத்து இழப்பை ஈடு செய்துவிடும்.

    அத்துடன் திடீர் பசியை போக்க உதவும். அதனால் மாலை வேளையில் நொறுக்குத்தீனிகளை அதிகம் சாப்பிட தோன்றாது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பேணுவதற்கும் தயிர் வித்திடும்.

    இரவு: ஆயுர்வேத வல்லுனர்களின் கூற்றுப்படி இரவு உணவுடனோ அல்லது இரவு உணவை சாப்பிட்டு முடித்த பிறகோ தயிர் சாப்பிடுவது ஊட்டச்சத்துக்களை சீராக பராமரிக்க உதவும். குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் செய்யும்.

    அதேவேளையில் சளி, சுவாசம் சார்ந்த பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் இரவில் தயிரை தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் தயிருடன் அன்றைய நாளை நிறைவு செய்வது செரிமானத்திற்கு நன்மை சேர்க்கும்.

    கால்சியம், புரத தேவைகளை ஈடு செய்யும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படச் செய்யும்.

    • 3 மாதங்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம்.
    • ரத்த தானம் செய்வதால் உடலுக்கு பாதிப்போ, பலவீனமோ ஏற்படாது.

    விபத்தின்போதோ, அறுவை சிகிச்சையின்போதோ, வேறு ஏதேனும் வகையில் ஒருவருக்கு ரத்த இழப்பு ஏற்படும்போது அவரது உயிரை காக்கவும், இழந்த ரத்தத்தை ஈடு செய்யவும் பிறரிடம் இருந்து ரத்தம் தானமாக பெறப்படுகிறது. உயிரை காக்கும் அருங்கொடையான ரத்த தானம் செய்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14-ந் தேதி ரத்ததான தினம் அனுசரிக்கப்படுகிறது.

    அன்றைய நாளில் மட்டும் ரத்த தானம் செய்வதற்கு ஆர்வம் காட்டாமல், ஆரோக்கியமான மனிதர் 3 மாதங்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம்.

    மனித உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் உள்ளது. அதில் 470 மில்லி லிட்டர் வரை ரத்தத்தை தானமாக வழங்கலாம். ரத்த தானம் செய்வதால் உடலுக்கு பாதிப்போ, பலவீனமோ ஏற்படாது. ஏராளமான நன்மைகளைத்தான் வழங்கும். அவற்றுள் சில...


    1. மாரடைப்பை தடுக்கும்

    உடலில் இரும்புச்சத்து அதிகமாக குவிந்து விட்டால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது. தொடர்ந்து ரத்த தானம் செய்து வருவது உடலில் இரும்பு சத்தை குறைக்கவும், அதனை சீராக நிர்வகிக்கவும் உதவும். எனவே அடிக்கடி ரத்த தானம் செய்வது மாரடைப்பு அபாயத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    2. புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்

    உடலில் அதிக அளவு இரும்புச்சத்து புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும். ரத்த தானம் செய்வது இரும்பு அளவை பராமரிக்க உதவும். புற்றுநோய் செல்கள் உருவாகும் அபாயத்தையும் குறைக்கும். அதிலும் அடிக்கடி ரத்த தானம் செய்வது கல்லீரல், வயிறு, நுரையீரல், பெருங்குடல் மற்றும் தொண்டை புற்றுநோய் போன்ற முக்கியமான புற்றுநோய்களை நெருங்க விடாது.

    3. கல்லீரலை காக்கும்

    ரத்த ஓட்டத்தில் கலந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுத்தன்மை கொண்ட பொருட்களை நீக்குவதே கல்லீரலின் முக்கியமான செயல்பாடாகும். ஆனால் கல்லீரலில் ஆக்சிஜனேற்றப்பட்ட இரும்புச்சத்து அதிகம் இருந்தால் அதனால் திறம்பட செயல்பட முடியாது. மேலும் அதிகப்படியான இரும்புச்சத்து செல் சேதத்துக்கும் வழிவகுக்கும். அதனால் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படும். ரத்த தானம் செய்வதன் மூலம் உடலில் இருக்கும் அதிகப்படியான இரும்பை அகற்றுவதோடு கல்லீரலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.

    4. உடல் எடை குறைப்பு

    உடல் எடையை குறைப்பதிலும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்து வதிலும் ரத்த தானம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது 450 மில்லி லிட்டர் ரத்த தானம் செய்வது உடலில் 650 கலோரிகளை எரிக்கச் செய்யும். வழக்கமான உடற்பயிற்சி மற்றும் தினசரி உணவில் சத்தான உணவுகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் எடையை சீராக பராமரிக்கலாம். மீண்டும் ரத்தம் உற்பத்தியாகுவதற்கும் வழிவகை செய்துவிடலாம்.

    5. புதிய ரத்த அணு உற்பத்தி

    ரத்த தானம் செய்வது புதிய ரத்த அணுக்களின் உற்பத்தியையும் ஊக்குவிக்கும். ரத்த தானம் செய்ததும் 48 மணி நேரத்திற்குள் எலும்பு மஜ்ஜையின் உதவியுடன் உடல் அமைப்பு துரிதமாக செயல்படத் தொடங்கும். 30 முதல் 60 நாட்களுக்குள் ரத்த சிவப்பணுக்கள் மாற்றப்பட்டு புதிய ரத்த அணுக்கள் உருவாக தொடங்கிவிடும்.

    • பெரும்பாலானவர்களின் விருப்பத்தேர்வாக நடைப்பயிற்சி இருக்கிறது.
    • சிலர் ஜாக்கிங் பயிற்சி மேற்கொள்கிறார்கள்.

    உடற்பயிற்சிகளில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. அவற்றுள் எளிமையாக செய்யக்கூடிய பயிற்சிகளையே பலரும் விரும்புகிறார்கள். பெரும்பாலானவர்களின் விருப்பத்தேர்வாக நடைப்பயிற்சி இருக்கிறது. சிலர் ஜாக்கிங் பயிற்சி மேற்கொள்கிறார்கள்.

    நடக்க, ஓட முடியாதவர்கள், அத்தகைய பயிற்சிகள் மீது ஆர்வம் காட்டாதவர்கள் இருந்த இடத்தில் இருந்தே மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். அத்துடன் யோகாசனம் செய்பவர்களும் இருக்கிறார்கள். இவற்றுள் எந்த பயிற்சி மேற்கொள்வது சிறப்பானது என்று பார்ப்போம்.

    * நடைப்பயிற்சி செய்வது எளிதானது என்பதால் எல்லா வயதினருமே தினமும் அதனை மேற்கொள்ளலாம். அது மூட்டுகளுக்கும் பலம் சேர்க்கும்.

    * தவறாமல் நடைப்பயிற்சி செய்வது உடல் எடையை கட்டுப்படுத்தவும், இதய நோய் அபாயத்தை குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

    * நடைப்பயிற்சி செய்தபடி இயற்கை சூழ்ந்த இடங்களில் உலவுவது மனநிலையை மேம்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கும்.

    யாருக்கு சிறந்தது?

    * உடற்பயிற்சி செய்வதற்கு ஆர்வம் காட்டுபவர்கள் முதல் முயற்சியாக நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். மூட்டுவலி உள்ளவர்களும் நடைப்பயிற்சியை தேர்ந்தெடுக்கலாம்.

    * உடலுக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல் இலகுவான உடல் செயல்பாடுகளை விரும்பும் நபர்கள் நடைப்பயிற்சி செய்து வரலாம்.

    * பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு செலவிடும் நேரத்தின் ஒரு அங்கமாக உடல் நலன் மீது அக்கறை கொள்ள ஆர்வம் காட்டுபவர்களும் நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

    ஜாக்கிங் நன்மைகள்

    * தினமும் ஜாக்கிங் பயிற்சி செய்து வருவது அதிக கலோரிகளை எரிக்க உதவும். இதய அமைப்பின் செயல்பாட்டை ஊக்குவிக்கும்.

    * உடல் எடையை குறைப்பதற்கும், உடல் எடையை சீராக பராமரிப்பதற்கும் ஜாக்கிங் உதவும்.

    * ஜாக்கிங் செய்யும் வழக்கத்தை தொடர்வது எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்கும். குறிப்பாக எலும்பு அடர்த்தியை அதிகரிக்க செய்யும்.

    யாருக்கு சிறந்தது?

    * மிகவும் கடினமான ஏரோபிக் உடற்பயிற்சி முறையை நாடுபவர்களுக்கு ஜாக்கிங் பயிற்சி சிறந்தது.

    * உடலில் சக்தியை அதிகரிக்க விரும்புபவர்கள் ஜாக்கிங் பயிற்சியை தேர்ந்தெடுக்கலாம்.

    * ஓடுவது உள்பட பிற வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புபவர்கள் ஜாக்கிங்கை தேர்ந்தெடுக்கலாம்.

    யோகா நன்மைகள்:

    * தினமும் யோகா செய்து வருவது உடல் நெகிழ்வுத்தன்மை அடைய உதவும்.

    * யோகாவின்போது சுவாச செயல்பாடுகள் மேம்பட்டு உடலையும், மனதையும் தளர்வடைய செய்யும். மன அழுத்தத்தை குறைக்கவும் வித்திடும்.

    * பல யோகாசன 'போஸ்கள்' முக்கிய தசைகளை பலப்படுத்த உதவுகின்றன.

    யாருக்கு சிறந்தது?

    * மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை ஒருங்கிணைக்க முயற்சிப்பவர்கள் யோகாசனத்தை நாடலாம்.

    * பதற்றத்தை தணிக்கவும், நெருக்கடியான சூழலில் மீண்டும் பதற்றம் ஏற்படாமல் நிலைமையை சுமுகமாக கையாளவும் நினைப்பவர்கள் யோகாசனம் செய்து வருவது பலன் கொடுக்கும்.

    எது சிறந்த உடற்பயிற்சி என்பது அவரவரின் தனிப்பட்ட உடல் நலம், மருத்துவ சிகிச்சை, உடற்தகுதி உள்ளிட்டவற்றை சார்ந்தது. எந்த உடற்பயிற்சி ஏற்புடையதாக இருக்கும் என்பது பற்றி உங்களது குடும்ப மருத்துவர் மற்றும் உடற்பயிற்சி நிபுணரிடம் கலந்தாலோசித்து அதன்படி செயல்படுவது உடல் நலனுக்கு வலிமை சேர்க்கும்.

    • பல்வேறு நுண் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.
    • அரிசிப் பொரியில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு அரு மருந்தாக செயல்படும்.

    அரிசியை பொரிப்பதன் மூலம் தயார் செய்யப்படும் அரிசிப் பொரியை உட்கொள்ளலாமா? என்ற தயக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. அரிசிப் பொரியும் ஊட்டச்சத்துமிக்க பொருள்தான். அதில் நார்ச்சத்து, புரதம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின்கள் ஏ, சி உள்பட பல்வேறு நுண் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அதனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இவை. 

    * அரிசிப் பொரியில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு அரு மருந்தாக செயல்படும்.

    * இது குறைந்த கலோரி கொண்டது. அதனால் உடல் எடையை குறைக்கும் நபர்களுக்கு சிறந்த தேர்வாக அமையும். இதிலிருக்கும் நார்ச்சத்தும், அத்தியாவசியமான ஊட்டச்சத்து கலவைகளும் பசியை கட்டுப்படுத்த உதவும். அதனால் அதிகம் சாப்பிடுவதை தடுத்து, விரைவாக உடல் எடை குறைவதற்கு வித்திடும்.

    * மனித உடலின் முக்கிய அங்கமாக விளங்கும் எலும்புகளை வலுப்படுத்துவதற்கும் அரிசிப் பொரி உதவும். அதிலிருக்கும் கால்சியம், இரும்பு, வைட்டமின் டி, தியாமின், ரிபோபிளேவின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் எலும்புகளிலுள்ள செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். மீளுருவாக்கமும் செய்யும். ஒட்டுமொத்த உடல் கட்டமைப்பு வளர்ச்சிக்கும் உதவும்.

    * அரிசிப் பொரியில் சோடியம் குறைவாகவே இருக்கும். அதனை உட்கொள்வது ரத்த அழுத்தத்தை சீராக பராமரிப்பதற்கு உதவும். உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம் இரண்டையும் நிர்வகிக்க உதவும். இதய செயல்பாட்டையும் மேம்படுத்தும். மாரடைப்பு, ரத்த குழாய்களில் அடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும்.

    * அரிசிப் பொரியில் ஏராளமான ஆன்டி ஆக்சிடென்டுகள், தாதுக்கள், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் செய்கின்றன. தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை எதிர்த்து போராடுவதற்கும், வயிற்றை பாதிக்கும் நோய்த்தொற்றுகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குவதற்கும் உதவுகின்றன. சளி, தொண்டை புண் மற்றும் சுவாசம் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் துணைபுரிகின்றன.

    * செரிமானத்தை ஊக்குவிக்கவும் அரிசிப் பொரி சிறந்த சிற்றுண்டியாக பரிமாறப்படுகிறது. வயிறு மற்றும் குடலில் சேரும் உணவுத்துகள்களை உடைத்து ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கு தூண்டிவிடும்.

    * அரிசிப் பொரியில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் சருமத்தை பொலிவாகவும் வைத்திருக்க உதவும். குறிப்பாக சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் சூரியக்கதிர்களால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும். தோல் சுருக்கம், கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படுவதை தடுப்பதோடு விரைவில் வயதான அறிகுறிகள் எட்டிப்பார்ப்பதையும் தள்ளிப்போடும்.

    * அரிசிப் பொரியுடன் மசாலாப் பொருட்களை கலந்து சிற்றுண்டியாக தயார் செய்து சாப்பிடலாம். அரிசிப் பொரி ஏராளமான நன்மைகளை வழங்கினாலும் அதனை அளவோடுதான் உட்கொள்ள வேண்டும். 150 கிராமுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. அதை விட அதிகமாக உட்கொள்வது உடல் பருமன் பிரச்சினைக்கு வித்திடும். இரவுப்பொழுதில் உட்கொள்வது தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்திவிடும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தோற்றத்தில் பிரகாசிக்க செய்ய வேண்டிய விஷயங்கள்
    • தினமும் 7 முதல் 8 மணிநேரம் தூங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

    திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு விட்டாலே பெண்கள் முகத்தில் ஒருவித பூரிப்பு குடிகொள்ளும். 'கல்யாணக் களை' வந்துவிட்டதாக சொல்வார்கள். அந்த பூரிப்பை மணமேடை வரை தக்கவைத்து பொலிவுடன் ஜொலிக்கவும், கட்டுடல் தோற்றத்தில் பிரகாசிக்கவும் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

    நீரேற்றம்

    திருமண நாள் நெருங்கும்போது உற்சாகம் பெருகும். அது முகத்தில் பிரகாசிக்கவும், சருமத்திற்கு பளபளப்பு சேர்க்கவும் உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பது அவசியமானது. காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகுவது வளர்சிதை மாற்றத்தை தொடங்குவதற்கு வழிவகுக்கும். உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கும். செரிமானத்துக்கும் உதவும். உடல் இலகுவாகவும், ஆற்றலுடனும் இருப்பதை உணர்வீர்கள்.

    உணவுக் கட்டுப்பாடு

    உணவோ, உணவு பதார்த்தங்களோ, நொறுக்குத்தீனிகளோ, பழங்களோ எதுவாக இருந்தாலும் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பெரிய தட்டுகளை பயன்படுத்துவதற்கு பதிலாக சிறிய தட்டுகள், கிண்ணங்களை பயன் படுத்தலாம். அது இயல்பாகவே அதிக அளவில் சாப்பிடுவதை தவிர்க்க உதவும். திருமணத்திற்கு தயாராவதற்குரிய இலக்குகளை நோக்கி பயணிக்க உதவிடும்.

    பாதாம்

    தினசரி உணவில் பாதாம் சேர்த்துக்கொள்வது அவசியமானது. அதில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம், ஆன்டி ஆக்சிடென்டுகள் உட்பட 15 அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கின்றன. முக்கியமாக பாதாம் பருப்பில் காணப்படும் கொழுப்புகள், வைட்டமின் ஈ ஆகியவை சரும நலனை மேம்படுத்தும். இளமையாகவும், துடிப்பாகவும் தோற்றமளிக்க செய்யும். வயதான தோற்றம் எட்டிப்பார்ப்பதை தடுக்கும். நீண்ட நேரம் வயிற்றை முழுமையாக உணர செய்து அதிகம் சாப்பிட அனுமதிக்காது. உடல் எடையை சீராக பராமரிப்பதுடன் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் உதவும்.

    தூக்கம்

    உடலுக்குத் தேவையான ஓய்வை வழங்க தினமும் 7 முதல் 8 மணிநேரம் தூங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள். போதுமான நேரம் தூங்குவது பசிக்கு காரணமான ஹார்மோன்களை ஒழுங்குபடுத்தும். உணவை அதிகம் உண்பதற்கான சாத்தியக்கூறுகளை தடுக்கும். மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். புத்துணர்ச்சியுடனும், ஆற்றலுடனும் செயல்பட வைக்கும்.

    மன அழுத்தம்

    திருமண ஏற்பாடுகளில் முழுக் கவனம் செலுத்துவதும், திட்டமிடுதல்களை மேற்கொள்வதும் மன அழுத்தத்தைத் தரக்கூடியது. அதனை கட்டுப்படுத்த தியானம், யோகா அல்லது ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகளை மேற்கொண்டு வரலாம். அவை ஆரோக்கியத்தையும், தோற்றப் பொலிவையும் பராமரிக்க உதவும். மனம் அமைதியாகவும், சருமம் பொலிவாகவும் இருப்பதை உறுதிசெய்யும்.

    பொறுமை

    உடல் ஆரோக்கியம் மற்றும் அழகு இலக்குகளை அடைவதற்கு நிதானமும், பொறுமையும் தேவை. மனதை அலைபாயவிடாமல், தேவையற்ற சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டும். இத்தகைய வழி முறைகளை முறையாக கடைப்பிடிப்பது திருமண நாளில் உங்கள் தோற்றத்தை பிரகாசிக்க வைக்கும்.

    உடற்பயிற்சி

    உடற்பயிற்சியில் பளு தூக்குதல் போன்ற வலிமை பயிற்சிகளை இணைத்துக்கொள்வது தசையை வலுப்படுத்தி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். ஒட்டுமொத்த உடல் வலிமையையும் அதிகரிக்கச் செய்யும். உடல் தோரணையையும் மேம்படுத்தும்.

    சர்க்கரை உணவுகள்

    சர்க்கரை அதிகம் சேர்க்கப்படும் பலகாரங்கள், உணவுப்பொருட்கள் மற்றும் பானங்களை உட்கொள்வதை கட்டுப்படுத்த வேண்டும். அது எடை அதிகரிப்பு மற்றும் சரும பிரச்சினைகளை தடுக்க உதவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது.
    • ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை முழுவதுமாக குறைக்கிறது.

    உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது. பாதுகாப்பான முறையில் கெட்ட கொழுப்பைக் குறைக்கும் தன்மை உடையது. இதனால் உடல் எடையைக் குறைக்க டயட் இருப்பவர்கள் இந்த டீயை விரும்பி அருந்தலாம்.

    தேவையானப் பொருட்கள்:

    லெமன் கிராஸ், முருங்கை, புதினா, ஆளிவிதை/Flaxseed, பட்டை, சுக்கு, சோம்பு, சீரகம், கொள்ளு, தனியா இவை அனைத்து உங்கள் தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளவும்.

    லெமன் கிராஸ் டீயில் அப்படி என்ன ஸ்பெஷல்

    • உடல் எடையை குறைக்க உதவுகிறது

    • கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.

    • உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது.

    • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஆன்டி- ஆக்ஸிடண்ட்ஸ்கள் அதிகம் உள்ளது.

    • ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை முழுவதுமாக குறைக்கிறது.

    • ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீர் செய்து இன்சுலின் சுரப்பை சரி செய்கிறது.

    • செரிமானத்தை சீராக வைத்து மலச்சிக்கலை தடுக்கும்.

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் நீர் ஊற்றில் அதில் மேல கூறப்பட்டுள்ள பொருட்களை போட்டு கொதிக்க வைத்து அருந்தலாம். லெமன் கிராஸ் டீ பை கடைகளில் கிடைக்கும். அதை 2 டம்ளரில் உள்ள சுடுநீரில் நன்கு தோய்த்து அருந்தலாம். சிறிது தேன் கலந்து கொள்ளலாம்.

    குறிப்பு: சர்க்கரை, நாட்டு சர்க்கரை, வெல்லம் மற்றும் கருப்பட்டி சேர்க்க கூடாது.

    • பாம்பு போன்ற விஷக்கடி பாதிப்பை குறைக்க பயன்படுகிறது.
    • மூக்கில் இருந்து திடீரென வெளியாகும் ரத்தப்போக்கை நிறுத்தவும் பயன்படுகிறது.

    தமிழில் முள்ளுக்கீரை அல்லது முள்ளிக்கீரை என்று அழைக்கப்படும் 'அமராந்தஸ்' என்ற தாவரவியல் இனத்தை சேர்ந்த கீரை, முட்கள் நிறைந்த ஒரு மூலிகையாகும்.

    சிவப்பு நிற நிமிர்ந்த தண்டுகள், சில சமயங்களில் ஏறுவரிசை, 30-150 செ.மீ. நீளத்தில் கிளைத்திருக்கும். இலைகள் முட்டை வடிவில் இருந்து நீள்வட்டம், ஈட்டி-நீள் சதுரம், வடிவில் இருக்கும். மென்மையான இலை தண்டு 1 முதல் 9 செ.மீ. பூக்கள் பச்சை நிறத்திலும் காணப்படும். இந்தியாவில் பரவலாக காணப்படுகிறது.

    இந்த மூலிகை கீரையின் மருத்துவ குணங்கள் ஏராளம். சிறுநீர் நன்றாக வெளியேற உதவுகிறது. கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. முறிந்த எலும்பு சேர துணையாக இருக்கிறது. மலமிளக்கியாக செயல்படுவதுடன் உடலில் இருக்கும் சளியை வெளியேற்றுகிறது.

    வெப்பம் மற்றும் விஷத்தை நீக்குகிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது. பெண்களுக்கு அதிகமான மாதவிடாய் போக்கை கட்டுப்படுத்துகிறது. சில நாடுகளில் பாம்பு போன்ற விஷக்கடி பாதிப்பை குறைக்க இந்த கீரையை பயன்படுத்துகின்றனர்.

    சீனா, இந்தியா மற்றும் நேபாளத்தில் தோல் அழற்சிக்கான வெளிப்பூச்சு மருந்தாகவும் தீக்காய தீவிரத்தை குறைக்கவும் பயன்படுகிறது.

    இது தவிர மூலம், குடல் அழற்சி, பித்தப்பை அழற்சி, சீரண மண்டல பாதிப்பை குறைக்க பயன்படுகிறது. புற்றுநோய் கட்டிகளின் பெருக்கத்தை தடுக்க உதவுவதுடன், மூக்கில் இருந்து திடீரென வெளியாகும் ரத்தப்போக்கை நிறுத்தவும் பயன்படுகிறது.

    புரதம் மற்றும் கால்சியம் அதிகம். இதை மெக்சிகோ போன்ற நாடுகளில் உணவுப் பயிராகவும், ஆஸ்திரேலியாவில் கீரைக்கு மாற்றாகவும், சீனாவில் காய்கறியாகவும் பயன்படுத்துகிறார்களாம்...!. ஆனால், தமிழ்நாட்டில் மழை பெய்தால் எங்கு பார்த்தாலும் முளைத்து கிடக்கும் இந்த முள்ளுக்கீரையை பற்றி தெரியாமல் பலரும் பயன்படுத்தாமல் தவற விட்டுவிடுகிறார்கள் என்பதே உண்மை.

    • சில குழந்தைகள் மீன் வறுதால்தான் சாப்பிடுவார்கள்.
    • வேகவைத்து சாப்பிடுவதுதான் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

    குழந்தைகளுக்கு முட்டை, மீன் போன்றவற்றை கொடுப்பதில் தாய்மார்களுக்கு பெரும் சாவாலாக உள்ளது. மீன் மற்றும் முட்டையில் அதிகப்படியாக சத்துக்கள் உள்ளன. சில குழந்தைகள் மீன் வறுதால்தான் சாப்பிடுவார்கள். ஆனால் மீன் வறுவலில் அதிக எண்ணெய் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். எந்த உணவாக இருந்தாலும் அதை வேகவைத்து சாப்பிடுவதுதான் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். அந்த வகையில் மீன் மற்றும் முட்டையை எப்படி குழந்தைகளுக்கு எளிய முறையில் செய்து கொடுக்கலாம் என்பதை பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    முட்டை - 5

    சதை அதிகம் உள்ள மீன் - 3

    வெங்காயம் - 2

    தக்காளி - 2

    பச்சைமிளகாய் - 5

    கறிவேப்பிலை - 2 கொத்து

    எண்ணெய் - தேவையான அளவு

    சீரகம் - 1 ஸ்பூன்

    மிளகு தூள் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    • முதலில் நன்கு சதை பகுதி உள்ள மீனை சுத்தம் செய்து கொள்ளவும்

    • வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் அனைத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    • இட்லி வேக வைக்கும் பாத்திரத்தில் சுத்தம் செய்து வைத்திருந்த மீன்களை வைத்து நன்கு ஆவி வரும் வரை (15 நிமிடம்) வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

    • வேக வைத்த மீன்களை எடுத்து பொடி பொடியாக மீன் முள்களை நீக்கிவிட்டு உதிர்த்து கொள்ளவும்.

    • ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சீரகம், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கறிவேப்பை ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    • பின்னர் வதக்கிய இந்த கலவையுடன் உதிர்த்து வைத்துள்ள மீனை சேர்த்து நன்கு பிரட்டி எடுக்கவும்.

    • இதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்க்கவும்.

    • பின்னர் இந்த மீன் கலவையை தனியாக எடுத்து வைக்கவும்.

    • ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றவும்.

    • முட்டையுடன் தயாரித்து வைத்திருந்த முன் கலவையை சேர்த்து நன்கு டிப் செய்யவும்.

    • இதனுடன் முட்டைக்கு தேவையான உப்பு சேர்க்கவும்.

    • ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் நன்கு சூடு ஆனதும். சிறிது எண்ணெயை கல்லின் மீது பூசவும்.

    • பின்னர் முட்டை ஆம்லெட் செய்வதற்கான கலவையை எடுத்து கல்லில் ஊற்றவும்.

    • ஒரு புறம் வெந்தவுடன், மறுபுறம் திருப்பவும்.

    • இதோ இப்போது சுவையான ஃபிஷ் ஆம்லெட் ரெடி.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆரோக்கியமான உணவும் ஆகும்.

    • சருமத்தை நீரேற்றமாகவும் இளமையாகவும் வைத்திருக்கும் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது.
    • குங்குமடி எண்ணெயின் நன்மைகள் தோலின் பளபளப்பை மேலும் மேம்படுத்துகிறது.

    தோல் பராமரிப்புக்கு வரும்போது, இயற்கை மற்றும் பாரம்பரிய வைத்தியம் சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது. குங்குமடி தைலம் என்பது நீண்ட வரலாற்றைக் கொண்ட அத்தகைய ஒரு தீர்வு. அதன் சக்தி வாய்ந்த மற்றும் ஊட்டமளிக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்ற குங்குமடி தைலம் ஒரு பிரபலமான ஆயுர்வேத எண்ணெய் கலவையாகும், இது சருமத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. இந்த கட்டுரையில், குங்குமடி தைலம் என்றால் என்ன, அதன் பொருட்கள் மற்றும் பண்புகள், அது வழங்கும் நன்மைகள், அதை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது மற்றும் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் ஆகியவற்றை ஆராய்வோம். தோல் பராமரிப்பு ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமான குங்குமடி தைலம் பலன்களைப் பற்றி ஆராய்வோம்.

    குங்குமடி தைலம் என்றால் என்ன?

    குங்குமடி தைலம், குங்குமடி எண்ணெய் என்றும் அழைக்கப்படுகிறது, இது பல்வேறு தாவரவியல் பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஆயுர்வேத மூலிகை எண்ணெய் கலவையாகும். இது பாரம்பரிய இந்திய மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தையும் தோற்றத்தையும் மேம்படுத்தும் திறனுக்காகப் புகழ்பெற்றது. முகப்பரு மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷன் போன்ற தோல் நிலைகளுக்கு சிகிச்சையளிப்பதில் இருந்து கதிரியக்க நிறத்தை ஊக்குவித்தல் மற்றும் வயதான அறிகுறிகளைக் குறைப்பது வரை குங்குமடி தைலத்தின் பயன்பாடுகள் வேறுபட்டவை. இந்த ஆயுர்வேத எண்ணெய் வளமான வரலாற்றைக் கொண்ட பல்துறை தோல் பராமரிப்பு தீர்வாகும்.


    பொருட்கள் மற்றும் பண்புகள்

    குங்குமப்பூ, சந்தனம், மஞ்சள், வெட்டிவேர் மற்றும் பல்வேறு ஆயுர்வேத மூலிகைகள் மற்றும் எண்ணெய்கள் போன்ற சக்திவாய்ந்த பொருட்களின் கலவையை குங்குமடி தைலம் கொண்டுள்ளது. ஒவ்வொரு மூலப்பொருளும் அதன் தனித்துவமான பண்புகளை வழங்குகிறது, இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் சருமத்தை பிரகாசமாக்கும் விளைவுகள், குங்குமடி தைலத்தை ஒரு சக்திவாய்ந்த தோல் பராமரிப்பு தீர்வாக மாற்றுகிறது . "குங்குமடி தைலத்தை ஒரே இரவில் பயன்படுத்தலாமா?" என்று பலர் ஆச்சரியப்படுகிறார்கள். ஒரே இரவில் பயன்படுத்தினால், அது உங்கள் சருமத்தை ஆழமாக ஊட்டமளித்து புத்துயிர் பெறச் செய்து, காலையில் பொலிவான நிறத்தை உங்களுக்கு வழங்குகிறது.

    குங்குமடி தைலத்தின் பலன்கள்

    குங்குமடி தைலம் சருமத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் தோற்றத்தையும் மேம்படுத்த உதவும் பல நன்மைகளை வழங்குகிறது. எண்ணெய் நிறமி மற்றும் கரும்புள்ளிகளை குறைக்கும் திறனுக்காக அறியப்படுகிறது, இதனால் சருமம் கதிரியக்கமாகவும், சீரான நிறமாகவும் இருக்கும். கூடுதலாக, இது சருமத்தை நீரேற்றமாகவும் இளமையாகவும் வைத்திருக்கும் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது.


    குங்குமடி தைலத்தின் முக்கிய நன்மைகளில் ஒன்று, சருமத்தை பிரகாசமாக்கும் மற்றும் சருமத்திற்கு இயற்கையான பொலிவை அளிக்கும் திறன் ஆகும். குங்குமப்பூ மற்றும் குங்குமப்பூ தைலத்தில் உள்ள மற்ற சருமத்தை பிரகாசமாக்கும் பொருட்களின் கலவையானது கரும்புள்ளிகள், நிறமி மற்றும் சீரற்ற தோல் நிறத்தின் தோற்றத்தைக் குறைக்க உதவுகிறது, இதன் விளைவாக மிகவும் ஒளிரும் மற்றும் இளமை நிறம் கிடைக்கும்.

    வயதான எதிர்ப்பு மற்றும் சுருக்கம் குறைப்பு

    குங்குமடி தைலம் முதுமையைத் தடுக்கும் சக்தி வாய்ந்தது. எண்ணெய்கள் மற்றும் மூலிகைகள் நிறைந்த கலவையானது சருமத்தை ஊட்டமளிக்கிறது மற்றும் ஈரப்பதமாக்குகிறது, மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் மற்றும் வயது புள்ளிகளின் தோற்றத்தை குறைக்கிறது. குங்குமடி தைலத்தின் வழக்கமான பயன்பாடு, உறுதியையும் நெகிழ்ச்சியையும் மேம்படுத்த உதவுகிறது, மேலும் சருமத்திற்கு இளமை மற்றும் புத்துணர்ச்சியூட்டும் தோற்றத்தை அளிக்கிறது.

    முகப்பரு மற்றும் தழும்பு கட்டுப்பாடு

    குங்குமடி தைலம் முகப்பருவைக் கட்டுப்படுத்துவதிலும், தழும்புகளைக் குறைப்பதிலும் பயனுள்ளதாக இருக்கிறது. அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் எரிச்சலூட்டும் சருமத்தை அமைதிப்படுத்தவும், சிவப்பைக் குறைக்கவும், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கவும் உதவுகிறது. வழக்கமான பயன்பாடு பிரேக்அவுட்களைக் குறைக்கவும், தெளிவான நிறத்தை மேம்படுத்தவும் உதவும். குங்குமடி எண்ணெயின் நன்மைகள் தோலின் பளபளப்பை மேலும் மேம்படுத்துகிறது.

    ×