search icon
என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • சுயம்புலிங்கத்தை தரிசிப்பதற்காக பக்தர்கள் மலையேற்றம் செய்வது வழக்கம்.
    • பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மலையேற்றத்துக்கு வனத்துறையினர் அனுமதி.

    கோவை மாவட்டம் பூண்டி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரி மலை உள்ளது. இங்குள்ள 7-வது மலையில் சுயம்புலிங்கம் கோவில் உள்ளது.

    சுமார் 5.5 கிலோ மீட்டர் தூரம் மலையேற்றம் செய்தால் இந்த கோவிலை அடையலாம். சுயம்புலிங்கத்தை தரிசிப்பதற்காக பக்தர்கள் மலையேற்றம் செய்வது வழக்கம்.

    ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மலையேற்றத்துக்கு வனத்துறையினர் அனுமதி அளிக்கிறார்கள்.

    இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி முதல் மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் மலையேறி வந்தனர். சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர்.

    வெள்ளியங்கிரி மலையேற்றத்துக்கு வனத்துறையினர் அளித்த அனுமதி இன்றுடன் நிறைவு பெறுகிறது. அதன் பிறகு மலையேற பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என கோவை மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது.

    • யானைக்கு கல்லீரல் பாதிப்பு இருக்கலாம் என மருத்துவர்ள் தகவல் தெரிவித்துள்ளனர்.
    • பெண் காட்டு யானை சற்று உடல்நலம் தேரி உணவு உட்கொண்டு வந்தது.

    கோவை மருதமலை வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பெண் யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண் காட்டு யானை சற்று உடல்நலம் தேரி உணவு உட்கொண்டு வந்தது. தொடர் சிகிச்சை, கிரேன் உதவியுடன் எழுந்து நிற்க வைக்கப்பட்ட யானை, உணவை தானே உட்கொண்டு வந்தது.

    இந்நிலையில், பெண் யானைக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தாய் யானையை அதன் 4 மாத குட்டி யானை சுற்றி சுற்றி வரும் காட்சி காண்பவர்களை பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    யானைக்கு கல்லீரல் பாதிப்பு இருக்கலாம் என மருத்துவர்ள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    தாயிடம் பால் குடிக்க முயலும் குட்டி யானைக்கு லாக்டோஜன், இளநீர் ஆகியவற்றை வனத்துறையினர் அளித்து வருகின்றனர். இருப்பினும், தாய் யானையை அதன் 4 மாத குட்டி யானை சுற்றி சுற்றி வந்து பரிதவிக்கும் காட்சி காண்பவர்களை பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • காயம் அடைந்த குழந்தையை அவரது பெற்றோர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
    • குழந்தை மூளைச்சாவு அடைந்த தகவலை கேட்டதும் பெற்றோர் கதறி அழுதனர்.

    கோவை:

    கோவையை சேர்ந்தவர் சரவணன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்க்கிறார்.

    இவர்களுக்கு பிறந்து 11 மாதம் ஆன ஆதிரா என்ற பெண் குழந்தை இருந்தது. சம்பவத்தன்று குழந்தை நாற்காலியில் அமர்ந்து விளையாடிக் கொண்டு இருந்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக அந்த குழந்தை கீழே விழுந்தது. இதில் காயம் அடைந்த குழந்தையை அவரது பெற்றோர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த குழந்தை ஆதிரா நேற்று மூளைச்சாவு அடைந்தாள்.

    குழந்தை மூளைச்சாவு அடைந்த தகவலை கேட்டதும் பெற்றோர் கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. அவர்களை நண்பர்கள் மற்றும் டாக்டர்கள் சமாதானப்படுத்தினர்.

    மேலும் அவர்களுக்கு உடல் உறுப்பு தானம் செய்வதனால் ஏற்படும் நன்மை குறித்து விரிவாக விளக்கினர். இதனை ஏற்று, குழந்தையின் பெற்றோரும், குழந்தையின் உடல் உறுப்புகளை செய்ய முன்வந்தனர்.

    இதையடுத்து பெற்றோரின் சம்மதத்துடன், தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழந்தையின் உடலில் இருந்து இதயம், கிட்னி ஆகியவற்றை எடுத்தனர்.

    இந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும், 1 வயது பெண் குழந்தைக்கு இதயம் தேவைப்படுவது தெரியவந்தது. இதையடுத்து இங்குள்ள டாக்டர்கள், அங்குள்ள டாக்டர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

    அதனை தொடர்ந்து இதயத்தை கோவையில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை டாக்டர்கள் தொடங்கினர். அதன்படி கோவை தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையின் இதயம் ஆம்புலன்ஸ் மூலமாக கோவை விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டது.

    பின்னர் அங்கிருந்து விமானம் மூலமாக சென்னை கொண்டு செல்லப்பட்டு, அங்கு இருந்து ஆம்புலன்சில் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அதனை தொடர்ந்து டாக்டர்கள் இதயத்தை அங்கு சிகிச்சை பெற்று வந்த ஒரு வயது குழந்தைக்கு பொருத்தினர்.

    • சம்பவங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
    • சிறுத்தை நடமாட்டம் சி.சி.டி.வி.-யில் பதிவாகி உள்ளது.

    குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்பான வீடியோக்கள் சமீப காலங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. சி.சி.டி.வி.-யில் சிறுத்தை, காட்டு யானை என வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலையை கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகும் சம்பவங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டி அமைந்துள்ள கோயம்புத்தூர் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் சற்று அதிகமாகவே காணப்படும். அந்த வகையில், கோம்யபுத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது.

    இது தொடர்பான வீடியோவில் வீட்டு தடுப்பு சுவற்றின் மீது கோழி நின்று கொண்டிருக்கும் காட்சிகளும், அந்த வழியாக வந்த சிறுத்தை ஒன்று கோழியை பிடித்து செல்லும் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    • வெள்ளியங்கிரி கோவிலுக்கு மலையேற்றம் செல்ல பக்தர்களுக்கு கடந்த பிப்ரவரி 15-ந்தேதி முதல் அனுமதியளிக்கப்பட்டது.
    • இதுவரை 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாக சென்று சுவாமியை தரிசனம் செய்துவிட்டு சென்று உள்ளனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் பூண்டி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரி மலை உள்ளது. இங்குள்ள 7-வது மலையில் சுயம்புலிங்கம் கோவில் உள்ளது.

    சுமார் 5.5 கிலோ மீட்டர் தூரம் மலையேற்றம் செய்தால் இந்த கோவிலை அடையலாம். சுயம்புலிங்கத்தை தரிசிப்பதற்காக பக்தர்கள் மலையேற்றம் செய்வது வழக்கம்.

    ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மலையேற்றத்துக்கு வனத்துறையினர் அனுமதி அளிக்கிறார்கள்.

    இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி முதல் மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் மலையேறி வந்தனர். சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர்.

    வெள்ளியங்கிரி மலையேற்றத்துக்கு வனத்துறையினர் அளித்த அனுமதி நாளையுடன் (31-ந்தேதி) நிறைவுபெறுகிறது. அதன் பிறகு மலையேற பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

    இதுதொடர்பாக கோவை மாவட்ட வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மலை உச்சியில் அருள்பாலிக்கும் வெள்ளியங்கிரி கோவிலுக்கு மலையேற்றம் செல்ல பக்தர்களுக்கு கடந்த பிப்ரவரி 15-ந்தேதி முதல் அனுமதியளிக்கப்பட்டது.

    அங்கு இதுவரை 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாக சென்று சுவாமியை தரிசனம் செய்துவிட்டு சென்று உள்ளனர்.

    இதற்கிடையே மேற்குதொடர்ச்சிமலையில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக அங்குள்ள 5,6,7-வது மலை உச்சியில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது.

    மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகள் சேதம் அடைந்த நிலையில் உள்ளன.

    எனவே பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளை முதல் வெள்ளியங்கிரி மலையேற்றம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

    மலையேற வருவோர் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்வதை தவிர்க்கும் வகையில் அவர்களிடம் ரூ.20 வைப்புத்தொகையாக பெறப்பட்டது. இருந்தபோதிலும் அவர்களில் 94 சதவீதம்பேர் வைப்பு தொகையை திரும்ப பெற்றுவிட்டனர்.

    மேலும் வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் தூய்மை ப்பணியில் ஈடுபட்டபோது அங்கு சுமார் 6 டன் அளவில் பிளாஸ்டிக் பொருட்களும், ஈரத்துணிகளும் சேகரித்து அப்புறப்படுத்தப்பட்டன.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பிரதமர் மோடி 3-வது முறையாக களம் இறங்கியுள்ள வாரணாசி தொகுதியிலும் 1-ந்தேதி தான் தேர்தல் நடக்க உள்ளது.
    • மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, டெல்லி, மத்திய பிரதேசம், பஞ்சாப், சண்டிகர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டுள்ளேன்.

    கோவை:

    இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? இந்தியாவை அடுத்து ஆளப்போகும் கட்சி எது என்பதை அறியும் 18-வது பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நடந்து வருகிறது.

    கடந்த 19-ந்தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 6 கட்டங்கள் முடிந்து விட்டன. பாராளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வருகிற 1-ந்தேதி நடக்கிறது.

    இதனையொட்டி இறுதி கட்ட தேர்தல் நடக்க உள்ள இடங்களில் நாளை மாலையுடன் பிரசாரம் நிறைவடைய உள்ளது. இதனையொட்டி அங்கு இறுதிகட்ட அனல் பறக்கும் பிரசாரத்தில் தலைவர்கள், வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    பிரதமர் மோடி 3-வது முறையாக களம் இறங்கியுள்ள வாரணாசி தொகுதியிலும் 1-ந்தேதி தான் தேர்தல் நடக்க உள்ளது. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வாகன பேரணி நடத்தி பிரசாரம் மேற்கொண்டார். மகளிர் அணி சார்பில் பிரமாண்ட மாநாடும் நடத்தப்பட்டது.

    பிரதமருக்கு ஆதரவாக மத்திய, மாநில மந்திரிகள், கட்சியினரும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் இருந்தும் பா.ஜ.க நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் பலரும் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வாரணாசி மட்டுமின்றி வடமாநிலங்கள் முழுவதும் தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் மற்றும் தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க முக்கிய நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், மகளிர் அணியினர், பா.ஜ.க தொண்டர்கள் அனைவரும் முகாமிட்டு, ஒவ்வொரு கிராமம், கிராமமாக சென்று பா.ஜ.கவுக்கு ஆதரவு திரட்டினர். வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டுள்ளனர்.

    அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பா.ஜ.கவுக்கு ஆதரவான அலைவீசுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து பா.ஜ.க மகளிர் அணி தேசிய தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் மாலைமலர் நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.


    அப்போது நாம் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி: வாரணாசி தொகுதி கள நிலவரம் எப்படி உள்ளது?

    பதில்: வாரணாசி தொகுதியின் களநிலவரம் நன்றாகவே உள்ளது. இங்கு பாரதிய ஜனதாவுக்கான ஆதரவு அலை அதிகமாக உள்ளது. பிரதமர் மோடியின் மீது அங்குள்ள மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். எல்லோருமே பிரதமருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இங்கு பிரதமர் இந்த முறை சாதனை வெற்றியை பதிவு செய்வார்.

    கேள்வி: வாரணாசி தொகுதியில் உள்ள தமிழர்கள் என்ன சொல்கிறார்கள்?

    பதில்: வாரணாசியில் தமிழர்கள் அதிகம் பேர் உள்ளனர். குறிப்பாக பண்டிட்கள், பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவர்கள் இங்கு உள்ளனர். 150 வருடத்திற்கும் மேலாக பாரம்பரியமாகவே இங்கும் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    பிரதமர் மோடி மீது இங்கு வாழ்ந்து வரக்கூடிய தமிழ் மக்கள் அனைவரும் மிகுந்த அன்பு கொண்டுள்ளனர். அவர்கள் மத்தியில் பிரதமர் மோடிக்கான ஆதரவே காணப்படுகிறது. அனைவரும் பா.ஜ.க.வுக்கே எங்கள் ஆதரவு என்று சொல்லி வருகிறார்கள்.

    கேள்வி: நீங்கள் வாரணாசியில் எத்தனை நாள் பிரசாரம் மேற்கொண்டீர்கள்?

    பதில்: வாரணாசியில் நான் கடந்த 25 மற்றும் 26-ந் தேதிகளில் பிரசாரம் மேற்கொண்டேன். வாரணாசி தெற்கு, வாரணாசி வடக்கு உள்பட வாரணாசி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 3 சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டேன். நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பா.ஜ.கவுக்கான ஆதரவு அலையே காணப்பட்டது.

    இதுதவிர மகளிர் அணி சார்பில் தனியாக மாபெரும் மாநாட்டையும் நடத்தினோம். அந்த மாநாடு மிகப்பெரிய வெற்றி மாநாடாக அமைந்தது.

    கேள்வி: வேறு எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் நீங்கள் பிரசாரம் மேற்கொண்டீர்கள்? அங்கு பா.ஜ.கவுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

    பதில்: மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, டெல்லி, மத்திய பிரதேசம், பஞ்சாப், சண்டிகர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டுள்ளேன். இன்று இமாச்சல் பிரதேசத்தில் பிரசாரம் மேற்கொண்டுள்ளேன். நான் பிரசாரம் மேற்கொண்ட இடங்களில் எல்லாம் மக்களிடம் பா.ஜ.கவுக்கு மகத்தான ஆதரவு உள்ளது. மக்கள் அனைவரும் பா.ஜ.க ஆட்சியை விரும்புகிறார்கள்.

    கேள்வி: தமிழ்நாட்டில் இருந்து வேறு தலைவர்கள் யாராவது வாரணாசி பிரசாரத்துக்கு வந்துள்ளனரா?

    தமிழகத்தில் இருந்து பா.ஜ.க முக்கிய நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சிலர் வந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு பகுதியாக சென்று மக்களை நேரில் சந்தித்து பிரதமருக்கு வாக்கு சேகரித்து வருகிறார்கள். தற்போது பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் அவர்கள் மக்களை நேரடியாக சந்தித்து பிரதமருக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    கேள்வி: மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்வது குறித்து?

    பதில்: ஒவ்வொரு தேர்தல் முடிந்த பின்னரும் எப்போதும் பிரதமர் ஒரு இடத்திற்கு சென்று தியானம் மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் தற்போது அவர் தமிழகத்திற்கு வருகிறார். பிரதமர் தமிழகத்திற்கு வருவது சந்தோஷம். அதுவும் விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்வது சிறப்பு வாய்ந்தது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பி.ஏ.பி. திட்ட அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள நீராதாரங்கள் வறண்டதால், சோலையாறு அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்று போனதால் அணைநீர்மட்டம் 5 அடிக்கும் கீழ் சென்றது.
    • பி.ஏ.பி திட்ட தொகுப்பு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டத்தில் மேல் நீராறு, கீழ் நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் மற்றும் ஆழியாறு அணைகள் உள்ளன.

    மேலும் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள திருமூர்த்தி அணையும் உள்ளது.

    பி.ஏ.பி திட்ட அணைகளில் மலைப்பகுதியில் உள்ள அணைகளில் சேகரிக்கப்படும் தண்ணீர், சுரங்கப்பாதை, பீடர் கால்வாய் மற்றும் காண்டூர் கால்வாய் மூலம் சமவெளியில் உள்ள ஆழியாறு மற்றும் திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லப்பட்டு, பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.

    இதில் திருமூர்த்தி அணை பாசனத்தில் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களும், ஆழியாறு பாசனத்தில் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

    கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை கைகொடுக்காததால், பி.ஏ.பி திட்ட தொகுப்பு அணைகளின் நீர்மட்டம் கடுமையாக சரிந்தது.

    பி.ஏ.பி. திட்ட அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள நீராதாரங்கள் வறண்டதால், சோலையாறு அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்று போனதால் அணைநீர்மட்டம் 5 அடிக்கும் கீழ் சென்றது.

    இந்த நிலையில் வால்பாறையில் கடந்த 2 வாரங்களாக கோடை மழை கொட்டி தீர்த்தது. இதனால் வனப்பகுதியில் உள்ள ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    பி.ஏ.பி திட்ட தொகுப்பு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    நேற்றைய நிலவரப்படி சோலையாறு அணை நீர்மட்டம் 27.76 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 20 கனஅடி நீர் வந்தது. பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 11.60 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 146 கன அடியாகவும் இருந்தது.

    ஆழியாறு அணை நீர்மட்டம் 75.75 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 60 கன அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 31.10 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 40 கன அடியாகவும் இருந்தது.

    பி.ஏ.பி திட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கோடைமழை கொட்டி தீர்த்ததால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜூன் மாதம் முதல் வாரத்தில் பருவமழை தீவிரமடையும் என நம்புகிறோம். இதனால் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள அணைகளும் அதன் முழு கொள்ளளவை எட்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் என்ற விகிதத்தில் வாக்கு எண்ணுகை முகவர்கள் வேட்பாளர்களால் நியமிக்கப்பட வேண்டும்.
    • எந்ததொரு மின்னணு கருவியையும் எண்ணுகை மையத்துக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    கோவை:

    பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான கிராந்தி குமார் பாடி தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், பொள்ளாச்சி தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, பொள்ளாச்சி சப்-கலெக்டர் கேத்ரின் சரண்யா, மாநகர காவல் துணை ஆணையர் (வடக்கு ) ஸ்டாலின், மாநகராட்சி துணை ஆணையாளர்கள் செல்வசுரபி, சிவக்குமார், உதவி ஆணையர், நகர்ப்புற நிலவரி மற்றும் நகர்ப்புற நில உச்சவரம்பு இளவரசி, தனித்துணை கலெக்டர், சமூக பாதுகாப்பு திட்டம் சுரேஷ், கலெக்டரின் நேர் முக உதவியாளர் (தேர்தல்) செந்தில்வடிவு, வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், வட்டாட்சியர் (தேர்தல்),தணிகைவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பாராளுமன்ற பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள், கோவை பாராளுமன்ற தொகுதிக்கு அரசினர் பொறியியல் கல்லூரியிலும், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியிலும், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.மேலும் வருகிற 4-ந் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்காள்ள வேண்டிய வழிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட தபால் வாக்குகள் எண்ணுவதற்கு 7 மேஜைகளும், கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், சூலூர் 4 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எண்ணுவதற்கு தலா 14 மேஜைகள் வீதமும், பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு 18 மேஜைகளும் என மொத்தம் 101 வாக்கு எண்ணிக்கை மேஜைகளும் அமைக்க எற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது ஒதுக்கீடு செய்யப்பட்ட சட்டமன்ற தொகுதியினை தவிர வேறுசட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு முகவர்கள் சென்று பார்வையிட முடியாது. ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் என்ற விகிதத்தில் வாக்கு எண்ணுகை முகவர்கள் வேட்பாளர்களால் நியமிக்கப்பட வேண்டும். தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கையிலிருந்து வாக்கு எண்ணிக்கையினை பார்வையிடலாம்.

    வாக்குகள் எண்ணப்படுவதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக எண்ணுகை இட முகவர்கள், அவர்களின் நியமன கடிதங்கள், ஆளரி அடையாள அட்டை,தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளையும் கொண்டு வர வேண்டும். எண்ணுகை இட முகவர்கள் செல்போன், ஐ பேட், மடிக்கணினி அல்லது ஒலி அல்லது ஒளியைப் பதிவு செய்யத்தக்க அத்தகைய எந்ததொரு மின்னணு கருவியையும் எண்ணுகை மையத்துக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    வாக்கு எண்ணிக்கை மையம் அறையினுள் வேட்பாளர்களின் முகவர்கள் ஏதேனும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரெயிலில் பயணம் செய்ய பயணிகள் முன்பதிவு செய்யலாம்.
    • கோவையில் இருந்து இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு காலை 6.55 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

    கோவை:

    கோடை முடிந்து ஊர்களுக்கு திரும்ப வசதியாக கோவை-மங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    இதுகுறித்து சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வண்டி எண் 06041 மங்களூரு சென்ட்ரல்-கோவை வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற ஜூன் 1,8,15, 22,29 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமைகளில்) மங்களூருவில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.25 மணிக்கு கோவை வந்தடையும்.

    மறுமார்க்கமாக வண்டி எண் 06042 கோவை-மங்களூரு வாராந்திர சிறப்பு ரெயில் ஜூன் 1,8,15,22,29 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு காலை 6.55 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

    இந்த சிறப்பு ரெயில் காசர்கோடு, பையனூர், கண்ணூர், தலச்சேரி, வடக்கரா, கோழிக்கோடு, திரூர், சொரணூர், ஒட்டப்பாலம், பாலக்காடு, போத்தனூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் பயணம் செய்ய பயணிகள் முன்பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கோவை மாவட்டத்தில் நேரடியாகவும், மறைமுகமாவும் 30 ஆயிரம் பேர் இத்தொழிலில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
    • துபாய், சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வணிக ரீதியான வெட்கிரைண்டர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    கோவை:

    தொழில் நகரமான கோவை வெட்கிரைண்டர்கள் ஏற்றுமதியில் சிறந்து விளங்குகிறது.

    தமிழகம் மட்டுமின்றி தேசிய மற்றும் சர்வதேச அளவில் தேவைப்படும் அனைத்து வகையான கிரைண்டர்களும் கோவை மற்றும் சென்னையில் செயல்படும் தொழில் நிறுவனங்களில் இருந்துதான் அனுப்பப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் நேரடியாகவும், மறைமுகமாவும் 30 ஆயிரம் பேர் இத்தொழிலில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

    வீட்டு பயன்பாடுகளுக்கு மட்டுமின்றி ஓட்டல், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சமைக்க தேவையான வணிக ரீதியான பெரிய அளவிலான கிரைண்டர்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது ஏற்றுமதி சிறப்பாக உள்ளதாகவும், உள்நாட்டில் விற்பனை மந்தமாக உள்ளதாகவும் தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்த கோவையைச் சேர்ந்த ஏற்றுமதியாளர் ஒருவர் கூறியதாவது:-

    கோவையில் இருந்து துபாய், சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வணிக ரீதியான வெட்கிரைண்டர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஏற்றுமதியில் நிலையான வளர்ச்சி காணப்படுகிறது.

    துபாயில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் அங்கு பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வந்த வணிக ரீதியிலான கிரைண்டர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன. இதனால் உடனடியாக கோவை மாவட்டத்துக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

    கோவையில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து மட்டும் 20 கிலோ எடையிலான கிரைண்டர்கள் தயாரிக்கப்பட்டு ஒரு கண்டெய்னரில் அனுப்பி வைக்கப்பட்டன. தவிர நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளில் வழக்கமாக வரும் பணி ஆணைகள் நிலையாக உள்ளன.

    இவ்வாறு அவர் கூறனார்.

    • அனைத்து உறவினர்களையும் ஒன்று சேர்த்து செய்யும் சடங்களை செய்வதிலும் சிரமங்களை சந்தித்து வருகிறோம்.
    • எங்கள் கிராம மக்களுக்கு எதிராக செயல்படும் இவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    "ஈஷாவில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு மயானத்திற்கு எதிராக பொய் செய்திகளை பரப்பி, அப்பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் வெளியூர் நபர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ஈஷாவை சுற்றியுள்ள 6 கிராம மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று ஒன்றாக மனு அளித்தனர்.

    இது தொடர்பாக கிராம மக்கள் கூறியதாவது:

    தாணிக்கண்டி, மடக்காடு, முள்ளாங்காடு, பட்டியார் கோவில்பதி, முட்டத்துயல், செம்மேடு ஆகிய 6 கிராம மக்கள் சார்பாக நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளோம். இதில் 4 கிராமங்கள் பழங்குடி கிராமங்கள் ஆகும்.

    எங்கள் கிராமங்களில் சரியான மயான வசதி இல்லாததன் காரணமாக இறந்தவர்களுக்கான இறுதி சடங்குகளை செய்வதற்கு நாங்கள் 20 கி.மீ வரை செல்ல வேண்டி உள்ளது. இதனால், பொருளாதார ரீதியாக பல சிரமங்களை சந்தித்து வருகிறோம். அனைத்து உறவினர்களையும் ஒன்று சேர்த்து செய்யும் சடங்களை செய்வதிலும் சிரமங்களை சந்தித்து வருகிறோம்.

    எனவே, எங்கள் கிராமத்திற்கு அருகிலேயே நல்லதொரு மயானம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இதற்காக ஒவ்வொரு கிராம மக்களும் தனி தனியாக, மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோரிடம் மனுக்கள் அளித்துள்ளோம்.

    இதன் பயனாக, எங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள ஈஷா வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அவர்களுடைய செலவில், நவீன எரிவாயு மயானம் ஒன்று கட்டுப்பட்டு வரும் செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் என எங்களுடைய கிராமங்களுக்கு பல உதவிகளை ஈஷா செய்து வருகிறது.

    அதன் தொடச்சியாக, இப்போது அரசு அனுமதியுடன் நவீன எரிவாயு மயானமும் கட்டி வருகிறது. இந்த நல்ல செயலுக்கு 6 கிராம மக்களும் முழு ஆதரவு தெரிவித்துள்ளோம்.

    இந்த சூழலில், சிவஞானம், காமராஜ், சுப்பிரமணியன் மற்றும் இன்னும் சில வெளியூர் நபர்கள், அமைப்புகள் ஈஷாவில் கட்டுப்பட்டு வரும் எரிவாயு மயானப் பணிகளை தடுக்கும் செயல்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். அவர்கள் எங்கள் கிராமங்களுக்குள் அத்துமீறி நுழைந்து பொய் செய்திகளை பரப்பி ஊர் அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும், அந்த வெளியூர் நபர்கள் சில ஊடகங்களில் ஈஷாவிற்கு எதிராக அவதூறாக பேட்டியும் அளித்து வருகின்றனர்.

    எனவே, எங்கள் கிராம மக்களுக்கு எதிராக செயல்படும் இவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஈஷாவில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு மயானப் பணிகள் எவ்வித இடையூறும் இன்றி விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியரிடம் இன்று கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

    இவ்வாறு கிராம மக்கள் கூறினர்.

    • சவுக்கு சங்கர் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரித்தனர்.
    • பெலிக்ஸ் ஜெரால்ட் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

    கோவை:

    பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை தொடர்ந்து அவரது பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டார்.

    பெலிக்ஸ் ஜெரால்டை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை போலீசார் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று கோவை 4-வது ஜூடிசியல் கோர்ட்டில் நடந்தது.

    இதற்காக பெலிக்ஸ் ஜெரால்டு திருச்சியில் இருந்து கோவை அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். மனுவை விசாரித்த நீதிபதி சரவண பாபு, யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டிடம் ஒரு நாள் மட்டும் விசாரிக்க அனுமதி வழங்கினார். அதைத்தொடர்ந்து போலீசார் பெலிக்ஸ் ஜெரால்டை தனி இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.

    சவுக்கு சங்கர் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரித்தனர். அவர் அளித்த தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்தனர். விசாரணைக்கு பின் இன்று மாலை 4 மணிக்கு பெலிக்ஸ் ஜெரால்ட் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

    ×