சூர்யா ஜோதிகா காதல் திருமணத்திற்கு இந்த பிரபல நடிகை தான் காரணம்! - மனம்திறந்த சிவகுமார்

சூர்யா - ஜோதிகா இருவரும் 2006ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர்.என்னால் எப்படி மகனின் காதலுக்கு நோ சொல்ல முடியும் என்று சிவகுமார் தெரிவித்தார்.
சூர்யா ஜோதிகா காதல் திருமணத்திற்கு இந்த பிரபல நடிகை தான் காரணம்! - மனம்திறந்த சிவகுமார்
Published on

சூர்யா - ஜோதிகா 1999ம் ஆண்டு வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைப்பத்தில் முதன் முதலாக இணைந்து நடித்தனர். அதை தொடர்ந்து இந்த ஜோடி உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி உள்ளிட்ட திரைப்படங்களை ஒன்றாக இணைந்து நடித்தனர்.

இதனையடுத்து சூர்யா - ஜோதிகா இருவரும் 2006ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், சூர்யா ஜோதிகாவை காதல் திருமணம் செய்து கொண்டதற்கு முக்கிய காரணம் ராதிகா தான் என்று சிவகுமார் பேசியுள்ளார்.

யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய சிவகுமார், "உயிரிலே கலந்தது' படப்பிடிப்பில் தனியாகவே இருந்த சூர்யாவை ஜோதிகாவிடம் `பேசு பேசு' என சொன்னவர் ராதிகா தான். திரைப்படங்களில் 150 கதாநாயகிகளை லவ் பண்ணுவது போல நடித்துள்ளேன். என்னால் எப்படி மகனின் காதலுக்கு நோ சொல்ல முடியும்'' என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com