கவிஞர் நா. முத்துக்குமார் – மறைந்தாலும் மனங்களில் நிலைத்திருக்கும் வரிகள்

தமிழில் 1,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா மற்றும் நா. முத்துக்குமார் தான். இவர்கள் இணைந்து 400-க்கும் மேற்பட்ட பாடல்களை உருவாக்கினர்.
கவிஞர் நா. முத்துக்குமார் – மறைந்தாலும் மனங்களில் நிலைத்திருக்கும் வரிகள்
Published on

தமிழ் திரையுலகின் எளிமையும் ஆழமும் கலந்த பாடல்களை பரிசளித்த கவிஞர், பாடலாசிரியர் நா. முத்துக்குமார்  அவரின் மறைவு நாளில் ரசிகர்களாலும், திரைப்பட உலகினராலும் நினைவுகூறப்படுகிறார்.

பெரும் ஞானம் கொண்ட உணர்வுகளை, மிக எளிய தமிழ்ச் சொற்களில் பாடலாக வடிப்பது. 2001-ஆம் ஆண்டு சீமான் இயக்கிய *வீர நடை* திரைப்படம் வழியாக பாடலாசிரியராக அறிமுகமானார். அதற்கு முன், இயக்குநர் பாலுமகேந்திரா-வின் உதவி இயக்குநராக நான்கு ஆண்டுகள் பணியாற்றியிருந்தார். அங்கே தான் இயக்குநர்களான வெற்றிமாறன் மற்றும் ராம் ஆகியோருடன் வாழ்நாள் நட்பு உருவானது.

திரையுலகில் தனது பயணத்தில், தமிழில் 1,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளார்.

யுவன் – முத்துக்குமார் காம்போ

தமிழ் சினிமாவின் எவர்கிரீன* ஹிட் பாடல்களை வழங்கிய கூட்டணி என்றால், அது யுவன் ஷங்கர் ராஜா மற்றும் நா. முத்துக்குமார் தான். இவர்கள் இணைந்து 400-க்கும் மேற்பட்ட பாடல்களை உருவாக்கினர். நந்தா திரைப்படத்தில் முதன்முறையாக யுவன் இசைக்கு முத்துக்குமார் பாடல் எழுதினார்.

'ஒரு நாளில்', 'என் காதல் சொல்ல', 'நினைத்து நினைத்து பார்த்தேன்', 'தேவதையை கண்டேன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'பறவையே எங்கு இருக்கிறாய்' போன்ற பல ஹிட் பாடல்களின் பின்னணியில் முத்துக்குமாரின் வரிகள் உள்ளன. கடைசியாக, யுவன் இசையில் *தரமணி* படத்திற்கு பாடல்கள் எழுதினார்.

இயக்குநர் **செல்வராகவன்** இயக்கிய *காதல் கொண்டேன்*, *7ஜி ரெயின்போ காலனி*, *புதுப்பேட்டை* படங்களில் உள்ள ஒவ்வொரு பாடலும் பெரும் வெற்றி பெற்றது.

இயக்குநர் ராம் இயக்கிய அனைத்து படங்களுக்கும் முத்துக்குமார் பாடல் எழுதியுள்ளார். குறிப்பாக *கற்றது தமிழ்* மற்றும் *தங்க மீன்கள்* பாடல்கள் இன்றும் மக்களிடையே வாழ்கின்றன.

மறைவுக்குப் பின் மரியாதை

2016-ஆம் ஆண்டு, வெறும் 41 வயதில், மஞ்சள்காமாலை நோயால் நா. முத்துக்குமார் காலமானார். அவரது இழப்பை தமிழ் திரையுலகம் இன்னும் மறக்கவில்லை; அவர் விட்டுச் சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை.

அவரின் வரிகள் துவண்டுபோனவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் சக்தி கொண்டவை. தனிமையில் வாடுவோருக்கு தோழனாக இருந்து, அவர்களின் மனங்களை நிம்மதிப்படுத்துகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com