ரிலீசுக்கு முன்பே ரூ.50 கோடிகளை அள்ளிய டிமான்ட்டி காலனி 3 - ஓடிடி உரிமையை கைப்பற்றிய ஜீ5

டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பை ஜூலை மாதம் படக்குழு பூஜை விழாவுடன் தொடங்கியது. இப்படம் வரும் மே மாதம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
ரிலீசுக்கு முன்பே ரூ.50 கோடிகளை அள்ளிய டிமான்ட்டி காலனி 3 - ஓடிடி உரிமையை கைப்பற்றிய ஜீ5
Published on

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி 2015-ம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2-ம் பாகத்தை படக்குழு வெளியிட்டது. இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. உலகளவில் இப்படம் 80 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படக்குழு மூன்றாம் பாகத்தை இயக்க திட்டமிட்டது. படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து முடிந்த நிலையில் படப்பிடிப்பை ஜூலை மாதம் படக்குழு பூஜை விழாவுடன் தொடங்கியது. இந்த பாகத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்ட் மைன் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

இப்படம் வரும் மே மாதம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டிமான்ட்டி காலனி 3 படம் ரிலீசுக்கு முன்பே ரூ.50 கோடி வசூலித்துள்ளது.

படத்தில் ஆடியோ உரிமையை Tseries South நிறுவனம் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி உரிமையை ஜீ தமிழ் மற்றும் ஜீ5 நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com