Food Poison-இல் முடிந்த பாலிவுட் படப்பிடிப்பு!.. உணவு சாப்பிட்ட 120 பேர் மருத்துவமனையில் அனுமதி

சுமார் 600 பேர் உணவை உண்டதாகவும், அவர்களில் 120 பேர் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.ரன்வீர் சிங்குடன், சஞ்சய் தத், மாதவன், அக்ஷய் கண்ணா மற்றும் அர்ஜுன் ராம்பால் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Food Poison-இல் முடிந்த பாலிவுட் படப்பிடிப்பு!.. உணவு சாப்பிட்ட 120 பேர் மருத்துவமனையில் அனுமதி
Published on

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துரந்தர்' (Dhurandhar).

இதன் படப்பிடிப்பு லடாக்கில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று படப்பிடிப்பு தளத்தில் வழங்கப்பட்ட மத்திய உணவை உண்ட சுமார் 120க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு Food Poison ஆகி, வாந்தி, வயிற்று வலி மற்றும் தலைவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர். .

சுமார் 600 பேர் உணவை உண்டதாகவும், அவர்களில் 120 பேர் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது அனைவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

உணவின் மாதிரிகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டுள்ளதாகவும், அறிக்கைகள் வெளியான பின்னரே முழுமையான தகவல்கள் தெரியவரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தில் ரன்வீர் சிங்குடன், சஞ்சய் தத், மாதவன், அக்ஷய் கண்ணா மற்றும் அர்ஜுன் ராம்பால் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் டிசம்பர் 5, 2025 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com