உடல் எடை தொடர்பான கேள்வி: உங்கள் ஆதரவிற்கு நன்றி - நடிகை கௌரி கிஷன் அறிக்கை

கௌரி கிஷனின் துணிச்சல் இணையத்தில் பாராட்டுகளை பெற்றது.நடிகர் சங்கமும் கௌரி கிஷனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது.
உடல் எடை தொடர்பான கேள்வி: உங்கள் ஆதரவிற்கு நன்றி - நடிகை கௌரி கிஷன் அறிக்கை
Published on

அபின் ஹரிஹரன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன் மற்றும் 96 பட நடிகை கௌரி கிஷன் நடிப்பில் அதர்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் நாளை திரைக்கு வர உள்ளது.

இப்படத்தின் முந்தைய செய்தியாளர் சந்திப்பு கடந்த 30 ஆம் தேதி நடைபெற்றது. படத்தின் பாடலில் நடிகையை தூக்கினீர்களே நடிகையின் எடை என்ன? என கதாநாயகனிடம் யூடியூபர்கள் கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக மற்ற தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய கௌரி கிஷன் இதுபோன்ற ஸ்டுப்பிட்டான கேள்விகள் எழுப்பப்படுகிறது. இதுபோன்ற கேள்விகள் சரியான கேள்விகள் அல்ல என அந்த விமர்சனம் தொடர்பாக பேசியிருந்தார்.

இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற அதர்ஸ் பட செய்தியாளர் சந்திப்பில், நடிகை கௌரி கிஷனை டார்கெட் செய்யும் அளவிற்கு யூ டியூபர்கள் இருவர் மாறி மாறி கேள்விகளை எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த நடிகை கௌரி கிஷன் உடல் எடை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி என்னை உருவக் கேலியை செய்ததற்கு சமம். கதாநாயகனிடம் என்னைப் பற்றி கேட்டாலும் என்னுடைய எடை தொடர்பாகவே எழுப்பப்பட்ட கேள்வி எனவே அந்த கேள்வி தொடர்பாக நான் விமர்சனம் செய்திருந்தேன் என நிதானமாக பதில் அளித்தார்.

கௌரி கிஷனின் இந்த துணிச்சல் இணையத்தில் பாராட்டுகளை பெற்றது. பல நடிகர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். நடிகர் சங்கமும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கௌரி கிஷன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், "இந்த வார தொடக்கத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது, எனக்கும் ஒரு யூடியூபருக்கும் இடையே ஒரு வாக்குவாதம் ஏற்பட்டு எதிர்பாராத விதமாக பதட்டமாக மாறியது.

ஒரு நபரின் உடல் அல்லது தோற்றத்தை குறிவைக்கும் கருத்துகள் அல்லது கேட்கப்படும் கேள்விகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த சூழலிலும் சரியானது கிடையாது. அதே சமயம் சம்பந்தப்பட்ட யூடியூபரை குறிவைத்து விமர்சிக்க வேண்டாம்.

விமர்சனங்கள் எனது தொழிலின் ஒரு பகுதியாக இருப்பதை புரிந்திருக்கிறேன். ஆனால் ஒருவரின் உடல் அமைப்பு அல்லது தோற்றத்தை குறிவைக்கும் கேள்விகள் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதே கேள்வியை ஒரு நடிகரிடம் கேட்பார்களா? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அந்த தருணத்தில் உறுதியுடன் நின்றது எனது கடமை என நினைக்கிறேன். இது எனக்காக மட்டுமல்ல. இதேபோன்ற அனுபவங்களை சந்தித்த அனைவருக்குமானது.

படம் பற்றும் என்னுடைய நடிப்பை பற்றியும் கேட்கப்படும் கேள்விகளை தான் நான் விரும்புகிறேன். ஒரு கடினமான சூழ்நிலையில் என் நிலைப்பாட்டில் நான் உறுதியாக நிற்க முடிந்ததற்கு எனக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

எனக்கு நடந்தது ஒன்றும் புதிதல்ல. அது பல இடங்களில் நடந்து வருகிறது. பாடி ஷேமிங் செய்வதை இது இயல்பாக்குகிறது. நமது அசௌகரியத்தை வெளிப்படுத்தவும், தவறு செய்யும்போது கேள்வி கேட்கவும் நமக்கு உரிமை உண்டு.

மேலும் எனக்குக் கிடைத்த அனைத்து ஆதரவிற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது நான் எதிர்பார்க்காதது. உங்கள் ஆதரவிற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம், அம்மா சங்கம் (மலையாள திரைப்படத் துறை), தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகியவற்றிற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மற்றும் உங்கள் அசைக்க முடியாத ஆதரவிற்கு பொதுமக்களுக்கு நன்றி. எனது சக ஊழியர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து எனக்கு ஆதரவு அளித்த தொழில்துறையில் உள்ள அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com