பெரிய ஹீரோக்கள் காதல் கதைகளில் நடிக்க தயாராக இல்லை - கவுதம் வாசுதேவ் மேனன்

திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவை கொண்டாடினார்.புதிய நடிகரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளேன்.
பெரிய ஹீரோக்கள் காதல் கதைகளில் நடிக்க தயாராக இல்லை - கவுதம் வாசுதேவ் மேனன்
Published on

தமிழ் திரையுலகில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் கவுதம் வாசுதேவ் மேனன். இயக்கம் மட்டுமின்றி பல திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இடையில் திரைப்படங்களை தயாரிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். சமீபத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவை கொண்டாடினார்.

இதனிடையே சமீபத்திய பேட்டியளித்த கவுதம் வாசுதேவ் மேனன், "எனது அடுத்த படத்திற்காக ஒரு காதல் கதையைத் தயார் செய்து வைத்திருக்கிறேன். இப்போது பெரிய ஹீரோக்கள் யாரும் காதல் கதைகளில் நடிக்கத் தயாராக இல்லை. அதனால், நான் இளம் நடிகர்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன், மேலும் அதில் ஒரு புதிய நடிகரை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளேன்.

நானும் சிலம்பரசனும் கூட இதற்கு முன்பு 'நதிகளிலே நீராடும் சூரியன்' படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் அந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் இல்லாததால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதனால் நாங்கள் 'வெந்து தணிந்தது காடு' படத்தை செய்தோம்.

இப்போது நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்தக் காதல் கதை, இரண்டு பேருக்கு இடையேயான ஒரு தூய்மையான நாடகமாகும். ஜென்-இசட் தலைமுறையினரின் காதல் வித்தியாசமானது என்று பலர் சொல்கிறார்கள், ஆனால் காதலின் மொழி இப்போது மாறிவிட்டது என்று நான் நினைக்கவில்லை," என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com