திரைப்படங்களில் பாட மாட்டேன் என அடம்பிடித்த அர்ஜித் சிங்.. மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

தமிழில், 'நான் உன் அழகினிலே', 'அடடா என்ன அழகு' உள்ளிட்ட பாடல்களைப் பாடி உள்ளார்.
திரைப்படங்களில் பாட மாட்டேன் என அடம்பிடித்த அர்ஜித் சிங்.. மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!
Published on

இந்தி திரைத்துறையின் முன்னணி பாடகராக இருந்து வருபவர் அர்ஜித் சிங்.

38 வயதே ஆகும் அர்ஜித் சிங் கடந்த 15 ஆண்டுகளாகத் திரைப்படங்களில் பாடி வருகிறார். இந்தியில் ஆஷிக் 2 படத்தின் 'தும் ஹி ஹோ' பாடல் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்றார்.

தமிழில், 'நான் உன் அழகினிலே', 'அடடா என்ன அழகு' உள்ளிட்ட பாடல்களைப் பாடி உள்ளார்.

கடந்த ஆண்டு இந்திய அரசு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவித்தது.

ஆனால் இனி திரைப்படங்களில் பாடப்போவதில்லை என அர்ஜித் சிங் அண்மையில் அறிவித்தார்.

அப்போது அவர் வெளியிட்ட பதிவில், "உண்மையைச் சொல்லப்போனால், எனக்குத் திரையிசைப் பாடல்களில் ஒருவித சலிப்பு ஏற்பட்டுவிட்டது.

எனது வளர்ச்சிக்கு புதிய வகை இசையை ஆராய வேண்டிய தேவை உள்ளது. ஒரே மாதிரியான இசையில் எனக்கு ஆர்வம் குறைந்துவிட்டது.

பின்னணிப் பாடகர் பணியிலிருந்து விலகினாலும், இசையைத் நான் கைவிடவில்லை.

இனி ஒரு இண்டிபெண்டண்ட் ஆர்ட்டிஸ்ட் ஆக இசையை உருவாக்குவதிலும், இந்திய கிளாசிகல் இசையில் கவனம் செலுத்தவும் விருபுகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், அமீர் கானுக்காக அர்ஜித் சிங் தனது முடிவை மாற்றியுள்ளார்.

ஆமீர் கான் தன் தயாரிப்பில் உருவாகும் 'ஏக் தின்' என்கிற திரைப்படத்தின் அறிமுக பாடலைப் பாட மும்பையிலிருந்து மேற்கு வங்கம் சென்று அங்கு சொந்த கிராமத்திலிருந்த அரிஜித் சிங்கைச் சந்தித்தார்.

சந்திப்பின்போது, தொடர்ந்து பாடுங்கள் என கோரிக்கை வைத்ததுடன் தன் படத்திற்காக பாட வைத்துள்ளார். அவர்கள் சந்தித்துக்கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com