பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த 'சூர்யா 46' படக்குழுவினர்

நடிகர் சூர்யா உள்ளிட்டோரை பழனி கோவில் அதிகாரிகள் வரவேற்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த 'சூர்யா 46' படக்குழுவினர்
Published on

தமிழ் கடவுள் முருகபெருமானின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். மேலும் வெளிமாநில முதல்-மந்திரிகள், நடிகர்கள் உள்பட பல்வேறு பிரபலங்கள் வந்து செல்கின்றனர்.

நடிகர் சூர்யாவின் புதிய படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதனையொட்டி அவர் இன்று பழனிக்கு வந்தார். அவருடன் அவரது சகோதரி பிருந்தா மற்றும் லக்கி பாஸ்கர் பட டைரக்டர் வெங்கட் அட்லூரி ஆகியோரும் வந்தனர்.

அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு சென்ற நடிகர் சூர்யா உள்ளிட்டோரை பழனி கோவில் அதிகாரிகள் வரவேற்றனர். இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற கால பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் இன்ப அதிர்ச்சியாக நடிகர் சூர்யாவை பார்த்து அவருடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com