எவர்கிரீன் திரைப்படமான "தாம் தூம்" ரீரிலீஸ் ஆவதில் மகிழ்ச்சி- ஜெயம் ரவி

16 ஆண்டுகளுக்குப் பிறகு தாம் தூம் திரைப்படம் நாளை திரையில் மீண்டும் வெளியாக இருக்கிறது.தமிழ்நாடு முழுவதும் சுமார் 50க்கும் மேற்பட்ட திரையரப்பட்ட உள்ளது.
எவர்கிரீன் திரைப்படமான "தாம் தூம்" ரீரிலீஸ் ஆவதில் மகிழ்ச்சி- ஜெயம் ரவி
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜெயம் ரவியின் பல படங்கள் சூப்பர் ஹிட்டாகி இருக்கிறது. அந்த வகையில் 2008 ஆம் ஆண்டு ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் தாம் தூம்.

இதில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக கங்கனா ரனாவத் நடித்திருந்தார். மேலும், ராய் லட்சுமி, ஜெயராம், ஶ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஆக்ஷன் மற்றும் ரொமாண்டிக் கலந்த இந்த படம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. குறிப்பாக, ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டி எங்கும் பரவி சூப்பர் ஹிட்டானது. இப்படத்தை மறைந்த இயக்குனர் ஜீவா இயக்கி இருந்தார்.

16 ஆண்டுகளுக்குப் பிறகு தாம் தூம் திரைப்படம் நாளை திரையில் மீண்டும் வெளியாக இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 50க்கும் மேற்பட்ட திரையரப்பட்ட உள்ளது.

தாம் தூம் திரைப்படம் நாளை ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ள நிலையில், ஜெயம் ரவி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், " எவர்கிரீன் என்டர்டெயின்னராஜ தாம் தூம் நாளை திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் ஆவதில் மகிழ்ச்சி.

உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் திரைப்படத்தை கண்டு மகிழுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com