search icon
என் மலர்tooltip icon

    சென்னை

    • நேற்று காலை 6.50 மணிக்கு 172 பயணிகளுடன் சென்னையில் இருந்து டெல்லி-க்கு புறப்பட்டது இண்டிகோ விமானமான 6E-5314.
    • ஒரே வாரத்தில் இண்டிகோ நிறுவனத்துக்கு இது இரண்டாவது மிரட்டலாகும்.

    நேற்று காலை 6.50 மணிக்கு 172 பயணிகளுடன் சென்னையில் இருந்து டெல்லி-க்கு புறப்பட்டது இண்டிகோ விமானமான 6E-5314. அதைத்தொடர்ந்து விமானத்தில் ஒரு ரிமோட் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. இதனை அந்த விமானத்தின் விமானி மும்பை ஏர் டிராபிக் கண்ட்ரோலுக்கு தகவலை கூறினார்.

    இக்காரணத்தினால் விமானத்தை உடனடியாக அவசரமாக மும்பை நிலையத்தில் தலையிறக்கப்பட்டது. அதன் பிறகு அவசரமாக அனைத்து பயணிகளையும் விமானத்தில் இருந்து அப்புறபடுத்தி வெடிகுண்டு எதேனும் இருக்கிறதா என பாம்ப் ஸ்குவாட்-ஐ வைத்து பரிசோதித்தனர் ஆனால் விமானத்தில் சந்தேகிக்கும் அளவு எதுவும் தென்படவில்லை.

    ஒரே வாரத்தில் இண்டிகோ நிறுவனத்துக்கு இது இரண்டாவது மிரட்டலாகும். மே 28 ஆம் தேதி டெல்லியில் இருந்து வாரணாசிக்கு புறப்பட்ட விமானத்திலையும் இதேப் போல் வெடி குண்டு மிரட்டல் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    • வாராந்திர சிறப்பு ரெயில் கேரள மாா்க்கமாக இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழகம் வழியாக இயக்கப்பட உள்ளது.
    • மறுமாா்க்கமாக ஜூன் 10, 24 ஆகிய தேதிகளில் எழும்பூரில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருநெல்வேலியில் இருந்து வாரந்தோறும் வியாழக்கிழமை மாலை 6.45 மணிக்கு எழும்பூருக்கு புறப்படும் சிறப்பு ரெயிலும் (எண்: 06070) மறுமாா்க்கத்தில் எழும்பூரில் இருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு திருநெல்வேலிக்கு புறப்படும் ரெயிலும் (எண்: 06069) ஜூன் 6-ந் தேதி முதல் ஜூன் 28-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல், நாகர்கோவில்-சென்னை எழும்பூா் இடையே இயங்கும் வாராந்திர சிறப்பு ரெயில் (எண்: 06019/06020) கேரள மாா்க்கமாக இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழகம் வழியாக இயக்கப்பட உள்ளது.

    அதன்படி, நாகா்கோவிலில் இருந்து ஜூன் 9, 23 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு வள்ளியூா், திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக இந்த ரெயில் எழும்பூருக்கு மறுநாள் காலை 11.15 மணிக்கு வந்தடையும்.

    மறுமாா்க்கமாக ஜூன் 10, 24 ஆகிய தேதிகளில் எழும்பூரில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் அதே வழியாக மறுநாள் காலை 3.15 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை புறநகரில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் ஆகிய சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
    • உள்ளூர் கார்கள் ஒரு சுங்கச்சாவடியை கடக்க மாதம் ரூ.340 உத்தேச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த 1992-ம் ஆண்டு அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்நிலையில் மார்ச் 31 நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.

    அந்தவகையில் தமிழகத்தில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட வேண்டிய சுங்க கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்த கட்டண உயர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

    அதன்படி சென்னை புறநகரில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் ஆகிய சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    பரனூர் சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன் மற்றும் 3 சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.70, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.110, மாதாந்திர கட்டணம் ரூ.2,395. இலகுரக சரக்கு வாகனங்கள் சிற்றுந்துகளுக்கு ஒருமுறை பயணம் செய்ய ரூ.115, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.175, பஸ், சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.245, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.365 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    3 அச்சுகள் கொண்ட வர்த்தக வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.265, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.400 கட்டணம் ஆகும். 4 சக்கர, 6 சக்கர சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.380, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.570 கட்டணம். கடும் கனரக கட்டுமான வாகனங்கள் 7 மற்றும் கூடுதல் சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.465, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.695 கட்டணம் ஆகும்.

    உள்ளூர் கார்கள் ஒரு சுங்கச்சாவடியை கடக்க மாதம் ரூ.340 உத்தேச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்றுடன் முடிந்துள்ளது.
    • தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இதில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 33 முதல் 37 இடங்களில் வெற்றி பெறும் என தகவல் வெளியானது.

    நியூஸ் 18 கருத்துக் கணிப்பு

    தமிழகத்தில் திமுக 20 முதல் 22 இடங்கள் கைப்பற்றும்

    காங்கிரஸ் 6-8 இடம்

    பாஜக 1-3

    அதிமுக 0-2

    இந்தியா டுடே

    தமிழகத்தில் திமுக 20-22

    காங்கிரஸ் 6-8

    அ.தி.மு.க. 2

    இந்தியா கூட்டணி 33-37

    ஏபிபி- சி வோட்டர் (ABP - C Voter)

    தி.மு.க. கூட்டணி 37-39

    அ.தி.மு.க. 1

    பா.ஜ.க. 1

    • 18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர் ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
    • இந்த விதிமுறை ஜூன் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    சென்னை:

    18 வயது நிரம்பாத சிறார்கள் வாகனங்கள் ஓட்டுவதால் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளது. அதனால் 18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர் ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி.) ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

    மேலும், பிடிபடும் சிறுவர்களுக்கு ரூ.25,000 அபராதமும், 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த விதிமுறை ஜூன் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில், தமிழகத்தில் அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    போக்குவரத்து துறை சார்பில் முறையாக அரசாணை வெளியிடாததால் சட்டத்தை அமல்படுத்துவதில் காலதாமதமாவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஜூன் 4க்கு பிறகு இந்த நடைமுறைக்கு அமலுக்கு வாய்ப்பு உள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

    • அரசியலில் எதிர்க்கட்சி ஜெயிக்காது. ஆளுங்கட்சி தோற்று போகும்.
    • தமிழ்நாட்டில் தான் அனுப்பியாச்சே. வாலும் ஆடாது. மேலேயும் மக்கள் அனுப்பியாச்சு.

    சென்னை:

    சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் உரிமை போராளியின் பெருமைமிகு கண்காட்சி இன்று தொடங்கியது. இதில் திரைப்பட நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்துகொண்டு கலைஞரின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார்.

    தொடர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜ் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

    * நிறைய ஷூட்டிங் பார்த்திருப்பீர்கள். கன்னியாகுமரி ஷூட்டிங் பற்றி?

    நிறைய ஷூட்டிங் பார்த்திருக்கிறேன். மக்கள் வருவார்கள். இவரே ஆடியன்ஸை கூட்டி போகிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஆடியன்ஸ்.

    * ஜூன் 4-ந்தேதி பிரகாஷ் ராஜ், நாட்டு மக்கள் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும்?

    தமிழ்நாட்டில் தான் அனுப்பியாச்சே. வாலும் ஆடாது. மேலேயும் மக்கள் அனுப்பியாச்சு. அனுப்புன மாதிரி தான் தெரிகிறது.

    அரசியலில் எதிர்க்கட்சி ஜெயிக்காது. ஆளுங்கட்சி தோற்று போகும். தோற்றுப்போவதற்கான அனைத்து வேலைகளையும் அவர் செய்து விட்டார்.

    * காந்தி திரைப்படம் வந்த பிறகு தான் காந்தியை பற்றி உலகத்திற்கு தெரியும் என்று சொல்லியிருப்பது?

    ஆமாம். அவர் வந்த பிறகு தானே கன்னியாகுமரி இருப்பது எங்களுக்கு தெரியும். விவேகானந்தரை இப்போ தான் தெரியும் என்று கூறினார்.

    • நம்பகத்தன்மையான பாதுகாப்பான வசதியையும் வழங்கி வருகிறது.
    • மெட்ரோ ரெயில்களில் 84,21,072 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

    சென்னையின் பொதுப் போக்குவரத்தில் மெட்ரோ ரெயில் முக்கியப் பங்காற்றி வருகிறது. கார், ஆட்டோ கட்டணத்தை ஒப்பிடுகையில், குறைந்த கட்டணத்தில், விரைவாக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல மெட்ரோ ரெயில் பெரிதும் உதவுகிறது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பகத்தன்மையான பாதுகாப்பான வசதியையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரெயில்களில் 84,21,072 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    01.01.2024 முதல் 31.01.2024 வரை மொத்தம் 84,63,384 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    01.02.2024 முதல் 29.02.2024 வரை மொத்தம் 86,15,008 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    01.03.2024 முதல் 31.03.2024 வரை மொத்தம் 86,82,457 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    01.04.2024 முதல் 30.04.2024 வரை மொத்தம் 80,87,712 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    அதிகபட்சமாக 10.05.2024 அன்று 3,03,109 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    மே மாதத்தில் மட்டும் கியூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 36,97,773 பயணிகள் பலன் அடைந்துள்ளனர்.

    மேலும் பயண அட்டைகளை பயன்படுத்தி 32,10,776 பயணிகளும், டோக்கன்களை பயன்படுத்தி 52,055 பயணிகளும், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 5,307 பயணிகளும் மற்றும் சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 14,55,161 பயணிகளும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு கியூஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம்.

    மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துவரப்பட்ட வைகோ ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
    • வைகோவிற்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடந்த 25-ந்தேதி நெல்லையில் கால் தடுமாறி கீழே விழுந்தார். இதில், அவருக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக நெல்லையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில், தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துவரப்பட்ட வைகோ ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் நடைபெற்றது. இதையடுத்து வைகோவிற்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதை தொடர்ந்து வைகோவிற்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதில் அவர் குணமடைந்து வருகிறது.

    இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வைகோவை தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார். சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற சந்திப்பில் வைகோவின் உடல் நலம் குறித்து மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

    • கல்வி முறை, பாடத்திட்டங்கள், பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து அன்பில் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்.
    • 1699-ஆம் ஆண்டு கட்டப்பட்ட நூலகம் தற்போது இணையதள வசதியின் மூலம் வாசகர்களுக்கு பெரும்பாலான சேவைகளை வழங்கும் நவீன நூலகமாக திகழ்கிறது.

    சென்னை:

    தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டென்மார்க், சுவீடன், நார்வே ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த நாடுகளில் உள்ள கல்வி முறை, பாடத்திட்டங்கள், பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து அன்பில் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்.

    அந்த வகையில் தற்போது ஸ்காட்லாந்துக்கு சென்றுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அங்குள்ள தேசிய நூலகத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டார்.

    இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பிரிட்டன் கூட்டமைப்பின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான ஸ்காட்லாந்து தேசிய நூலகம் சென்றோம். 1699-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்நூலகம் தற்போது இணையதள வசதியின் மூலம் வாசகர்களுக்கு பெரும்பாலான சேவைகளை வழங்கும் நவீன நூலகமாக திகழ்கிறது.


    தொடர்ந்து ஸ்காட்லாந்தின் மைய நூலகத்தையும், குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் சிறுவர் நூலகத்தையும் பார்வையிட்டோம்.

    முத்தமிழறிஞர் கலைஞரின் ஆட்சியில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகமும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்

    திராவிட மாடல் ஆட்சியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகமும் ஸ்காட்லாந்து நாட்டின் நூலகங்களைப் போலவே காலம் பல கடந்து சாதனையாளர்கள் பலரை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை! என கூறியுள்ளார்.




    • சாதி அரசியல் செய்வதெல்லாம் பெரிதல்ல... கொள்கை பற்றால் தலைவர் ஆனவர் கருணாநிதி.
    • கருணாநிதி விதைத்த விதை தமிழர்கள் அனைவரின் மனதிலும் இருக்கிறது.

    சென்னை:

    சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா பற்றியும் கருணாநிதியாக நடித்தது குறித்தும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது:

    * கருணாநிதியாக நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது பெருமை. கருணாநிதியை பார்த்து கற்றுக்கொண்டதை இப்போது பேசுகிறேன்.

    * கருணாநிதி இருக்கும் வரை யாரும் இங்கு வாலாட்ட முடியவில்லை.

    * கலைஞர் நூற்றாண்டு என்பதைவிட ஒரு நூற்றாண்டு கலைஞரின் விழா என்பதே சரி.

    * கல்லக்குடி போராட்ட காட்சியில் நடித்தபோது வியர்த்து விட்டது.



    * கருணாநிதி ஒரு பன்முக தன்மையாளர்.

    * சாதி அரசியல் செய்வதெல்லாம் பெரிதல்ல... கொள்கை பற்றால் தலைவர் ஆனவர் கருணாநிதி.

    * என் வசனத்தை பேச சிவாஜிக்கு பிறகு பிரகாஷ் ராஜ் இருக்கிறார் என கருணாநிதி கூறினார்.

    * கருணாநிதி விதைத்த விதை தமிழர்கள் அனைவரின் மனதிலும் இருக்கிறது என்று கூறினார்.

    மேலும் கவிஞர் பா.விஜய் கூறுகையில், கலைஞரின் வசனங்களுக்கு மாற்று வசனம் யாரும் செய்ய முடியாதது. அது ஒரு சகாப்தம்.

    அரசியல் பயணத்தை பொறுத்தவரை இப்போது 2ம் கலைஞராக முதல்வர் செயல்பட்டு வருகிறார்.

    முதல்வரின் நட்பு, வழிநடத்தலால் திரைத்துறை முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று கூறினார்.

    • கடுமையான வெயிலோ, மழையோ இல்லாமல் இதமான சூழல் நிலவும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலோ, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலோ தேர்தலை நடத்த ஆணையம் திட்டமிட வேண்டும்.
    • வாக்கு எண்ணும் மையங்களில் போதிய மின்விசிறிகளை அமைக்கவும், அனைத்து முகவர்களும் அமருவதற்கு இருக்கைகளை அமைக்கவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    இந்தியாவில் மக்களவைத் தேர்தலில் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டிருந்த 25 பணியாளர்கள் உள்ளிட்ட 61 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. மக்களவைத் தேர்தலில் முறையான திட்டமிடல்கள் இருந்திருந்தால் இந்த உயிரிழப்புகளை தவிர்த்திருக்க முடியும். உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    வெப்பவாத பாதிப்பால் உத்தரப்பிரதேசத்தில் நேற்று உயிரிழந்த 17 பேரில் 15 பேரும், பீகாரில் உயிரிழந்த 14 பேரில் 10 பேரும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆவர். இவர்களில் பெரும்பான்மையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் ஆவர். ஒடிசா, அரியானாவிலும் கணிசமான எண்ணிக்கையில் வெப்பவாதத்தால் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு வெப்ப அலைகள் வீசிய நேரத்தில் வெளியில் நடமாடியதால் நீரிழப்பு ஏற்பட்டு அவர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்தாகக் கூறப்படுகிறது.

    கடுமையான வெப்ப அலை வீசிய நேற்று தேர்தல் பரப்புரை இருந்திருந்தால் உயிரிழப்புகள் இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்று வல்லுனர்கள் கூறியுள்ளனர். ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் வெப்ப அலைகள் உருவாவதற்கு முன்னதாகவே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டதால், இத்தகைய உயிரிழப்புகள் பெருமளவில் தடுக்கப்பட்டு விட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். வெப்ப அலையால் வெப்பவாத உயிரிழப்புகள் அதிகரித்ததற்கு மக்களவைத் தேர்தல்கள் இந்த நேரத்தில் நடத்தப்பட்டதும் ஒரு முதன்மைக் காரணம் என்பதை மறுக்க முடியாது.

    பொதுவாகவே தேர்தல்கள் எனப்படுபவை மக்களைச் சந்திப்பதையும், களத்தில் பணியாற்றுவதையும் அடிப்படையாகக் கொண்டவை. தாங்க முடியாத வெப்ப அலை வீசும் காலத்தில் தேர்தல்களை நடத்துவது அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும். எனவே, இனிவரும் காலங்களில் கோடைக்காலங்களில் தேர்தல்களை நடத்துவதை தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும். கடுமையான வெயிலோ, மழையோ இல்லாமல் இதமான சூழல் நிலவும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலோ, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலோ தேர்தலை நடத்த ஆணையம் திட்டமிட வேண்டும்.

    தமிழ்நாட்டிலும் கடுமையான வெப்பம் வாட்டி வரும் வேளையில் தான் வரும் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. ஆனால், வாக்கு எண்ணும் மையங்களில் போதிய எண்ணிக்கையில் மின்விசிறிகள் அமைக்கப்படவில்லை. ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் பதிவான வாக்குகளை எண்ண குறைந்தபட்சம் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு 7 மின்விசிறிகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் 30 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக வைத்துக் கொண்டால், பேரவைத் தொகுதிவாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 14 மேஜைகளில் 420 முகவர்களும், 30க்கும் மேற்பட்ட பணியாளர்களும் இருப்பார்கள். அவர்களுக்கு 7 மின்விசிறிகள் போதுமானவை அல்ல.

    வாக்கு எண்ணும் மையங்களில் காற்றோட்டமும், இதமான சூழலும் இல்லாவிட்டால் பணியாளர்களாலும், முகவர்களாலும் சரியாக பணி செய்ய முடியாது. இதைக் கருத்தில் கொண்டு வாக்கு எண்ணும் மையங்களில் போதிய மின்விசிறிகளை அமைக்கவும், அனைத்து முகவர்களும் அமருவதற்கு இருக்கைகளை அமைக்கவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    • ஆலோசனை கூட்டத்தில், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், கழக வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
    • வாக்கு எண்ணிக்கையின் போது தலைமை முகவர்கள், முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்று வருகிறது. கூட்டத்தில், தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    மேலும் ஆலோசனை கூட்டத்தில், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், கழக வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். வாக்கு எண்ணிக்கையின் போது தலைமை முகவர்கள், முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    ×