Today Rasipalan: இன்றைய ராசிபலன்-30.08.25

இன்றைய ராசிபலன் 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
Today Rasipalan: இன்றைய ராசிபலன்-30.08.25
Published on

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வாகன வழியில் திடீர் செலவுகள் உண்டு. எடுத்த காரியங்களை நிறைவேற்ற பெரும் பிரயாசை எடுக்கும் சூழ்நிலை அமையும்.

ரிஷபம்

லாபகரமான நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். கடல் பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மிதுனம்

ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கடகம்

பதவியில் உள்ளவர்களால் உதவி கிடைத்து மகிழும் நாள். உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் உதவி கேட்டு வருவர். பழைய பிரச்சனைகள் தீரும். உத்தியோக முயற்சி கைகூடும்.

சிம்மம்

பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்புகள் கிட்டும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.

கன்னி

குடும்பச் சுமை கூடும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் திருப்தி தரும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு உண்டு.

துலாம்

நல்ல வாய்ப்புகள் நாடி வரும் நாள். உயர்ந்த மனிதர்களின் சந்திப்புக் கிட்டும். வாங்கல், கொடுக்கல்கள் திருப்தி தரும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள்.

விருச்சிகம்

வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். நாடாளும் நபர்களின் நட்பு கிட்டும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்துசேர்ப்பர்.

தனுசு

நினைத்தது நிறைவேறும் நாள். பழுதடைந்த பழைய வாகனத்தை மாற்றம் செய்யும் எண்ணம் உருவாகும். சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.

மகரம்

உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். உத்தியோக முயற்சி கைகூடும்.

கும்பம்

எதிர்பார்த்த லாபம் தொழிலில் கிடைக்கும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். விவாக பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.

மீனம்

காலை நேரத்தில் கலக்கம் ஏற்படும் நாள். உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதன் மூலம் உறவுகள் பகையாகும். உத்தியோகத்தில் தலைமையின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com