Today Rasipalan- இன்றைய ராசிபலன் 16.10.2025: இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

இன்றைய ராசிபலன் 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
Today Rasipalan- இன்றைய ராசிபலன் 16.10.2025: இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும்
Published on

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். கூடுதல் லாபம் கிடைத்து குதூகலம் கூடும். வங்கி சேமிப்புகளை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

ரிஷபம்

செய்தொழிலில் புதியவர்களைச் சேர்த்து மகிழும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு உண்டு. பாதியில் நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள்.

மிதுனம்

நினைத்தது நிறைவேறும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். வாங்கல், கொடுக்கல் ஒழுங்காகும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

கடகம்

யோகமான நாள். வருங்கால முன்னேற்றம் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.

சிம்மம்

சுபகாரியப் பேச்சு முடிவாகும் நாள். சான்றோர்களின் சந்திப்பு உண்டு. உடன் இருப்பவர்களின் ஆதரவால் உற்சாகம் அடைவீர்கள். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும்.

கன்னி

சோர்வுகள் அகலும் நாள். வரன்கள் வாயில் தேடி வந்துசேரும். நண்பர்கள் நல்ல தவல்களைக் கொண்டுவந்து சேர்ப்பர். நவீன பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

துலாம்

நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொடுக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.

விருச்சிகம்

மன உறுதியோடு செயல்படும் நாள். உத்தியோகம் சம்பந்தமான எடுத்த புது முயற்சி கைகூடும். தொலைபேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும்.

தனுசு

மகிழ்ச்சி குறையாதிருக்க மற்றவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு குறையும்.

மகரம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

கும்பம்

புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். நிழல் போல தொடர்ந்த கடன் சுமை குறையும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

மீனம்

ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் நாள். புதியவர்களி டம் பழகும் பொழுது கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. உத்தியோகத்தில் அதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com