இன்றைய ராசிபலன் 15.12.2025: இந்த ராசிக்காரர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்

இன்றைய ராசிபலன் 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
இன்றைய ராசிபலன் 15.12.2025: இந்த ராசிக்காரர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்
Published on

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். பாசத்தோடு பழகியவர்களின் உதவி கிட்டும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்

நம்பிக்கைகள் நடைபெறும் நாள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு அகலும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

மிதுனம்

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்களிடம் பக்குவமாகப் பேசுவது நல்லது. நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்துசேரும்.

கடகம்

தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும் நாள். தொலைதூரப் பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

சிம்மம்

வாட்டங்கள் அகன்று வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும்.

கன்னி

வழக்குகள் சாதகமாக முடியும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். உடன்பிறப்புகள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

துலாம்

நண்பர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். வருமோ, வராதோ என்றுநினைத்த பணவரவு ஒன்று கைக்கு கிடைக்கலாம்.

விருச்சிகம்

முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகள் உங்களைத் தேடி வருவர். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகள் உண்டு.

தனுசு

முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். கடன் பிரச்சனைகளைச் சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிப்பீர்கள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.

மகரம்

மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதையும் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உங்களிடம் கொடுத்த பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.

கும்பம்

பொருள் சேர்க்கை ஏற்படும் நாள். நண்பர்கள் மூலம் நல்ல சம்பவம் ஒன்று நடைபெறும். புதிய நிறுவனங்களில் உத்தியோகத்திற்கான அழைப்புகள் வரலாம்.

மீனம்

காரிய தாமதம் ஏற்படும் நாள். கொடுக்கல் வாங்கல்களில் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும். சோம்பல் காரணமாகத் திட்டமிட்ட காரியம் ஒன்றை மாற்றியமைப்பீர்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com