Today Rasipalan: இன்றைய ராசிபலன் - 22.09.2025

இன்றைய ராசிபலன்12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
Today Rasipalan: இன்றைய ராசிபலன் - 22.09.2025
Published on

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம்

ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். முக்கிய புள்ளிகளால் முன்னேற்றம் ஏற்படும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

ரிஷபம்

நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை இன்று திடீரென சந்திக்கும் வாய்ப்புக் கிட்டும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.

மிதுனம்

யோசித்து செயல்பட வேண்டிய நாள். தொழில் பங்குதாரர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சேமிப்பு கரையும்.

கடகம்

பராசக்தி வழிபாட்டால் பலன் கிடைக்கும் நாள். பயணங்கள் அனுகூலம் தருவதாக அமையும். உத்தியோக நலன் கருதி எடுத்த முயற்சிக்கு அதிகாரிகள் உறுதுணைபுரிவர்.

சிம்மம்

முயற்சிகள் கைகூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் தொடர்பால் முன்னேற்றம் காண்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வாங்கிய இடத்தால் ஏற்பட்ட பிரச்சனை அகலும்.

கன்னி

நம்பிக்கைகள் நடைபெறும் நாள். உள்ளம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறலாம். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். பிறருக்கு வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும்.

துலாம்

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். விருந்தினர்களின் வருகை உண்டு. தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும்.

விருச்சிகம்

கடவுள் வழிபாட்டில் கவனம் செலுத்தும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு உண்டு.

தனுசு

குழப்பங்கள் அகன்று குதூகலம் கூடும் நாள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் உருவாகும். மறைமுக போட்டிகளை முறியடிப்பீர்கள். ஆரோக்கிய பாதிப்புகள் அகலும்.

மகரம்

வருமான பற்றாக்குறை அகலும் நாள். இல்லத்தில் சுபகாரிய பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். அரைகுறையாக நின்ற பணி தொடரும்.

கும்பம்

பகை அதிகரிக்கும் நாள். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். எப்படியும் முடிந்து விடும் என நினைத்த வேலை ஒன்று முடியாமல் போகலாம்.

மீனம்

உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். இழுபறி நிலையில் இருந்த வழக்கு முடிவிற்கு வரும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com