தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் திரிஷா, பிராணிகள் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். விலங்குகள் நல அமைப்பிலும் பொறுப்பில் இருக்கிறார்.
தெருவோர நாய்களை பராமரித்து தத்தும் கொடுக்கிறார். கடந்த ஆண்டு தான் பாசத்தோடு வளர்த்த சோரோ என்ற நாய் இறந்து போனதை துக்கத்தோடு தெரிவித்து இருந்தார்
இந்தநிலையில் காதலர் தினத்தையொட்டி, தங்கள் வீட்டுக்கு புதுவரவு வந்திருப்பதை திரிஷா அறிவித்துள்ளார். அதன்படி, புதிய நாய்க்குட்டியை திரிஷா வாங்கியுள்ளார்.
இந்த நாய்க்குட்டிக்கு இஸ்சி என்று பெயரிட்டுள்ளனர். இதுதொடர்பான புகைப்படத்தையும் அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.