உலக சினிமாவில் முதல்முறையாக இரண்டு நாய்களை மட்டுமே வைத்து ஒரு முழு நீள படத்தை எடுத்துள்ளனர்
கிளவர் என்று பெயரிபட்டுள்ள இந்த படத்தை கார்த்திகேயன் பிரதர்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் திப்பம்மாள் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ள செந்தில்குமார் சுப்ரமணியம் படத்தை பற்றி கூறுகையில்,
“முதல்முறையாக இரண்டு நாய்களை மட்டுமே நடிக்க வைத்து படத்தை எடுத்துள்ளேன் அம்மாவிடம் இருந்து குட்டி நாயை திருடிச் சென்ற சைக்கோவிடமிருந்து தனது குட்டியை எவ்வாறு அம்மா நாய் மீட்கிறது என்பதே கதை
திகிலும் திரில்லும் கலந்த விறுவிறுப்பான கதைக்களத்துடன் மக்கள் பார்த்து ரசிக்கும் வகையில் இப்படத்தை இயக்கியுள்ளேன். இது அடுத்த மாதம் திரைக்கு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.