யூ-ட்யூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ள சூர்யா அந்த பேட்டியில் மும்பையில் தனது குடும்பத்தினருடன் செட்டில் ஆனது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்
"18 - 19 வயதில் சென்னைக்கு குடிபெயர்ந்த ஜோதிகா, கிட்டத்தட்ட 27 வருடங்களாக சென்னையிலேயே வசித்தார். சென்னையில் என்னுடனும், என் குடும்பத்தோடுதான் அவர் அதிகம் இருந்துள்ளார்.
18 வயது வரை மும்பையில் இருந்த ஜோதிகா பின்னர் தனது குடும்பம், நண்பர்கள் என எல்லாவற்றையும் எங்களுக்காக விட்டு கொடுத்துள்ளார்.
27 வருடங்கள் கழித்து தன் பெற்றோருடன் ஒன்றாக நேரம் செலவிடுவதால் ஜோதிகா மகிழ்ச்சியாக உள்ளார். ஒரு ஆணுக்கு என்ன தேவையோ, அதுவே ஒரு பெண்ணுக்கும் தேவை என்பதை நான் இப்போது புரிந்து கொண்டேன்.
ஜோதிகா அவர் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதை நான் எதற்காக தடுக்க வேண்டும்? நான், எனக்காக என்ற மனநிலையை முதலில் மாற்ற வேண்டும்.
ஏன் எப்போதும் ஒரு ஆண் எடுப்பவனாகவே இருக்க வேண்டும்? இந்த கேள்விகள்தான், மும்பைக்கு எங்களை நகர வைத்தது. என்று தெரிவித்துள்ளார்.