பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்பராஜ் வித்தியாசமான கதைக் களங்களில் படம் எடுப்பதில் இவர் திறம் பெற்றவர்
சினிமாவையே கதைக்களமாக வைத்து படம் எடுப்பதில் வல்லமை பெற்ற இவர் சமீபத்தில் இயக்கிய ஜிகர்தண்டா2 படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது
இந்நிலையில் இவர் நடிகர் சூர்யாவை வைத்து சூர்யா 44 படத்தை இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை இவரும் சூர்யாவும் தமது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்
கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியில் உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்திலிருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.