ரவிகுமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் நடித்து வெளியான படம் "இன்று நேற்று நாளை"
டைம் டிராவலை மையமாக வைத்து காமெடி பாணியில் எடுக்கப்பட்ட இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது
இந்நிலையில் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க உள்ளது
இதன் துவக்க விழா தற்போது நடைபெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்