பிடித்தால் உடனே  ஓகே  தான்...ராஷி கண்ணா சொன்ன ரகசியம்

பிடித்தால் உடனே ஓகே தான்...ராஷி கண்ணா சொன்ன ரகசியம்

Published on
தென் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷி கண்ணா, தற்போது தெலுங்கு சினிமாவில் பிசியாக இருக்கிறார்.
ராஷி கண்ணா தமிழில் ‘இமைக்கா நொடிகள்', ‘அடங்க மறு', ‘துக்ளக் தர்பார்', ‘அரண்மனை-4', ‘திருச்சிற்றம்பலம்', ‘சர்தார்', ‘அகத்தியா' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் ‘தெலுசு கதா' படத்தில் நடித்திருந்த ராஷி கண்ணா, அடுத்து பவன் கல்யாணின் ‘உஸ்தாத் பகத் சிங்' படத்தில் நடித்து வருகிறார்.
புதிய படங்களின் கதைகளையும் கேட்டு வருகிறார்.
இதற்கிடையில் எந்த மாதிரியான கதைகள் பிடிக்கும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ராஷி கண்ணா பதிலளித்துள்ளார்.
‘‘நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நமக்கு வாய்ப்பு கிடைத்தால், அந்தப் படம் நம் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும்.
ஒரு நடிகையாக நிரூபிக்க இன்னொரு வாய்ப்பை எனக்கு கொடுக்கும்.
வணிக ரீதியான படங்கள் மிகவும் பிடிக்கும். அதனால் உடனடியாக ஓ.கே. சொல்லிவிடுவேன். இதுபோன்ற படங்களில் நிறைய நடிக்கவும் விரும்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com