பச்சை மிளகாய் - 1, மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை :
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ப்ரோக்கோலியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். பின் கேரட்டை வட்டமான துண்டுகளாக வெட்டிக்கொள்ள, கொத்தமல்லி, இஞ்சி, ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பார்லியை நன்றாக சுத்தம் செய்து போதுமான அளவில் தண்ணீர் ஊற்றி நன்றாக அவித்து கொள்ளவும்.
காடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பூண்டு, இஞ்சி, ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில், சிக்கனை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். அடுத்து அதில் கேரட், ப்ரோக்கோலியை சேர்த்து வதக்கவும்.
காய்கள், சிக்கன் வெந்ததும் அதில், வேகவைத்த பார்லியை தண்ணீருடன் ஊற்றி உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
சூப் நன்கு கொதித்தவுடன் அடுப்பை அனைத்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.