பிரபாஸ், ராணா, சத்யராஜ், அனுஷ்கா நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பாகுபலி
பான் இந்தியா படமாக உருவான இப்படத்தின் இரண்டு பாகங்களும் இந்திய அளவில் 2000 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது
இந்நிலையில் பாகுபலி 3வது பாகம் உருவாக இருப்பதாக இயக்குனர் ராஜமௌலி உறுதி செய்துள்ளார்
இதுகுறித்து அவர் கூறும்போது, பாகுபலி 3வது பாகம் விரைவில் உருவாக இருப்பதாகவும், தயாரிப்பாளரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.