சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, பள்ளிக்கூடம் உள்ளிட்ட ஏராளமான தமிழ், மலையாளம் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் நரேன்.
நெஞ்சிருக்கும் வரை படத்தில் “ஒருமுறை பிறந்தேன்” என்ற பாடலின் மூலம் பல ரசிகர்களின் மனம் கவர்ந்த இவர் சமீபத்தில் வெளியான கைதி, விக்ரம் போன்ற படங்களிலும் நடித்திருந்தார்
இந்த நிலையில் நடிகர் நரேன் இன்று தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் வெளியே வந்த அவரை சூழ்ந்த ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களுடன் நின்று குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்.