search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் திடீர் ஆய்வு
    X

    ராமநாதபுரம் அரசு மருத்துவமனையை கலெக்டர் ஜானி டாம் வர்க்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் திடீர் ஆய்வு

    • பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூடுதல் கட்டிடப் பணிகளையும் பார்வையிட்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறித்தும், ராமநாதபுரம் ரெயில் நிலையம் அருகில் கீழக்கரைக்கு செல்லும் சாலையில் கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பாலப் பணிகள் குறித்தும் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் திடீர் ஆய்வு செய்தார்.

    ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடிநீர், கழிப்பறை, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூடுதல் கட்டிடப் பணிகளையும் பார்வையிட்டார்.

    பின்னர் தலைமை மருத்துவ அலுவலர், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் பொது மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் சுகாதார வளாகங்களை அமைப்பதற்கும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்தவும் அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து, பொதுப் பணித்துறையின் (நீர் வள ஆதார அமைப்பு) கீழ் உள்ள ராமநாதபுரம் பெரிய கண்மாய் தென்கலுங்கினையும் கலெக்டர் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் சேக்மன்சூர், பொதுப் பணித்துறை செயற் பொறியாளர் கார்த்திகேயன், உதவி செயற் பொறியாளர் ஜெயத்துரை, வட்டாட்சியர் முருகேசன், அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஞானக்குமார், மனோஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×