என் மலர்

    திருவண்ணாமலை - Page 2

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாஜக.வை கண்டித்து கோஷம் எழுப்பினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செங்கம்:

    செங்கத்தில் காங்கிரஸ் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல்காந்திக்கு எதிராக 2019- ஆம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் குஜராத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

    இதை தொடர்ந்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் செங்கம் ஜி.குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் செங்கம் புதிய பஸ் நிலையம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தின் போது மோடி அரசை கண்டித்தும், பாஜக.வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் குணசேகரன், சுப்பிரமணி, காமராஜ், ராஜு உள்பட தொண்டர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆரணியில் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபு தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ ராஜா பாபு மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் செல்வம் மாவட்ட துணை தலைவர் சாந்தகுமார் நகர பொருளாளர் பிள்ளையார் நிர்வாகிகள் பாபு சம்மந்தம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தாய் கண்டித்ததால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி அருகே அன்மருதை கிராமத்தை சேர்ந்த கோவில் பூசாரி இளங்கோ ஜோதி தம்பதியினருக்கு திவாகர் (வயது 15) என்ற மகனும் ஹரிபிரியா என்ற மகளும் உள்ளனர்.

    திவாகர் அன்மருதை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று செலவிற்கு திவாகர் வீட்டில் பணத்தை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை திவாகரின் தாயாார் கண்டித்ததாக தெரிகிறது.

    இதனால் மனமுடைந்த திவாகர் வீட்டில் பின்புறத்தில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தான்.

    அக்கம் பக்கத்தினர் திவாகரனை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் திவாகர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து பெரணமல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து திவாகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெங்களூரை சேர்ந்தவர்
    • காதலியிடம் தீவிர விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக் கப்பட்டனர்.

    அரசு விடு முறை தினம் என்பதால், வழக்கத்தைவிட பக்தர் கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. எனவே, ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், தெற்கு கோபுரம் வாசல் வழியாக கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், தெற்கு கோபுரம் எனப்படும் திரு மஞ்சன கோபுரம் வழி யாக கோவிலுக்குள் ஒரு இளம்பெண்ணுடன் வந்த வாலிபர், சிறிது நேரம் அங்கும் இங்குமாக சுற்றித்தி ரிந்தார். மதுபோதையில் இருந்த அந்த வாலிபரின் கையில் கத்தி இருந்ததால் பக்தர்கள் அதிர்ச்சிய டைந்தனர்.

    மேலும், திடீரென கோவில் 4-ம் பிரகாரத்தில் உள்ள இணை ஆணையரின் நிர்வாக அலுவலகத் துக்குள் நுழைந்து ரகளை யில் ஈடுபட்டார்.

    மேலும், அலுவலக கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார், அதோடு, அலுவலக அறைக்குள் நுழைந்த அந்த வாலிபர், ஆணையரின் இருக்கையில் அமர்ந்து கொண்டார். அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருந்த வாலிபரின் அதிரடி யால் அங்கிருந்த ஊழியர் கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர்.

    ஆனால், கத்தியை காட்டி மிரட்டியபடி நிர்வாக அலுவலகத்துக்கு அருகே உள்ள அர்ச்சகர் பயிற்சி பள்ளி கட்டிடத்துக்குள் நுழைந்தார். அங்கிருந்த சுவற்றின் மீது ஏறி, பயிற்சிபள்ளியின் மேற்கூரையை உடைந்து உள்ளே குதித்து, அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தினார்.

    இது குறித்த தகவல் பரவியதும், போலீசார் விரைந்து வந்தனர். கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்களின் உதவி யுடன் அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக தாக்கினர்.

    பின்னர், கைகளை யும், கால்களையும் கட்டி னர். அதைத்தொடர்ந்து, போலீசார் நடத்திய விசார ணையில், பெங்களூரு காவல்பை சந்திரா தொட்டா நகரை ச்சேர்ந்த பிரேம்குமார் மகன் பிரத்தம் (வயது 23) என்பது தெரியவந் தது.

    மேலும், அந்த வாலிப ருடன் வந்த இளம்பெண் பெங்களூரு நிக்சல்பாக் தேவி ரோடு பகுதியை சேர்ந்த ஜெனிபர் (21) என்ப தும், இருவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்த தும் விசாரணையில் தெரி யவந்துள்ளது.

    மேலும், ஜெனிபரிடம் நடத்திய விசாரணையில், 'பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு பைக்கில் வரும் வழியில், இரண்டு பைக்கிலும், ஒரு காரிலும் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத சிலர், எங்களை தாக்க முயன்றனர்.

    மயக்க மருந்து போன்ற ஸ்பிரே அடித்த னர். எனவே, அவர்களி டம் இருந்து தப்பிக்கவே. கோவிலுக்குள் வந்தோம்' என்றார். ஆனால், அவர் முன்னுக்குப் பின் முர ணாக தெரிவித்த பதில் போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    எனவே, இருவரும் தெரிவித்த முகவரிக்கு நேரில் சென்று, அவர் களுடைய பின்னணியை முழுமையாக விசாரிக்க போலீசார் முடிவு செய் துள்ளனர்.

    மேலும் இது தொடர்பாக, கோவில் நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், வாலிபர் பிரத்தத்தை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப் பையும் ஏற்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பீரோவை உடைத்து ரூ.70 ஆயிரம் கொள்ளை
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு அருகே உள்ள பறையம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சரத்குமார். இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி சுவேதா (வயது 22).

    இவர் தனது மாமனார், மாமியாருடன் பறையம்பட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சுவேதா, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்து ரூ.70 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு நகைகள் ஏதும் உள்ளதா என்று தேடிப் பார்த்தனர்.

    ஆனால் நகைகள் ஏதும் பீரோவில் இல்லை. இதனையடுத்து பக்கத்து அறையில் படுத்திருந்த சுவேதாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். அப்போது திடுக்கிட்டு எழுந்த சுவேதா கூச்சலிட்டார்.

    உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

    இது குறித்து தச்சம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் பீரோவில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர்.

    மோப்பநாய் வரவழைக்கப்பட்டு வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பக்தர்கள் மடக்கி பிடித்தனர்
    • போலீசில் விசாரணை

    திருவண்ணாமலை:

    தச்சம்பட்டு அருகே உள்ள அயல் ரெட்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் உள்ளது.

    அதே பகுதியை சேர்ந்த முருகன் (வயது 52) என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் நேற்று முன்தினம் கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென அம்மன் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை திருடிக்கொண்டு ஓடினார். இதனை கண்ட அங்கிருந்த பக்தர்கள் அவரை மடக்கி பிடித்து தச்சம்பட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர் கருவட்டாம்பாறை பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (வயது 22) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ஒரு பவுன் தங்க சங்கிலி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 3 பேர் காயம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு டவுன், டி.எஸ்.பழனிவேல் தெருவை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 74). ஓய்வு பெற்ற கோர்ட்டு ஊழியர்.

    அதே பகுதியில் வசிக்கும் 12 நபர்களுடன் வேனில் அறுபடைவீடு முருகன் கோவிலுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் சென்று விட்டு அதிகாலை 3.30 மணி அளவில் வந்தவாசி சாலையில் குளமந்தை பஸ் ஸ்டாப் அருகே வந்துகொண்டிருந்தனர்.

    அப்போது டிரைவர் தூக்க கலக்கத்தில் சாலை ஓர பனைமரத்தில் வேன் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முன் சீட்டில் இருந்த நரசிம்மன் கண்ணாடி உடைந்து கீழே விழுந்து, பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் வழியிலேயே நரசிம்மன் பரிதாபமாக இறந்தார்.வேனில் இருந்து வேதாச்சலம், வடிவேலன், சின்னம்மா ஆகியோர்க ளுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் செய்யாறு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து அனக்காவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. ஆய்வு
    • ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது

    செய்யாறு:

    செய்யாறு ஆற்காடு சாலையில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி அருகில் மாவட்ட ஊராட்சி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள நிழற்குடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஆற்காடு சாலையில் கல்லூரி அருகில் நிழற்குடம் கட்ட இடத்தை ஒ.ஜோதி எம்.எல்.ஏ. நேற்று ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், ஒன்றிய செயலாளர்கள் ஜெ.கே. சீனிவாசன், ஞானவேல் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஏ.டி.எம். கார்டை மாற்றி துணிகரம்
    • கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள 5புத்தூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் அஞ்சலிதேவி (வயது 59). இவர், ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வந்துள்ளார். பணம் எடுக்க தெரியாததால், ஏ.டி.எம். மையத் துக்கு வந்த வாலிபரிடம் பணம் எடுக்க சொல்லி ஏ.டி.எம். கார்டை கொடுத்துள்ளார்.

    அந்த வாலிபர் ஏ.டி.எம்.மில் இருந்து பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, அவர் வைத்திருந்த மற்றொரு ஏ.டி.எம். கார்டை அஞ்சலிதேவியிடம் கொடுத்துள்ளார்.

    இதனை கவனிக்காத அவர் அந்த கார்டை வாங்கிக்கொண்டு வந்து விட்டார்.

    பின்னர் அஞ்சலிதேவியின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்துள்ளது. அதில், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.70 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது என வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அஞ்சலிதேவி தான் வைத்திருந்த ஏ.டி. எம். கார்டுடன் கண்ணமங்கலம் பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்று கிளை மேலாளரிடம் இதுபற்றி தெரிவித்தார். அப் போது அவர் வைத்திருந்தது உங்களுடைய ஏ.டி.எம். கார்டு இல்லை என வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கண்ணமங்கலம் போலீசார் "ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கலெக்டர் வேண்டுகோள்
    • புதிய ரேசன் கடை திறப்பு விழா நடந்தது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள மேல்செட்டிப்பட்டு ஊராட்சியில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. மாநில தடகள சங்க துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் முன்னிலை வகித்தார்.

    கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி, ரேஷன் கடையை திறந்து வைத்து பயனாளிகளுக்கு உணவு பொருட்களை வழங்கி பேசியதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதை நான் தீர்ப்பதற்கு அமைச்சர் எ.வ.வேலுவை அணுகுவேன். அவர் எல்லா பிரச்சினைகளையும் உடனுக்குடன் தீர்த்து வைப்பதால் தான் நீங்கள் கேட்கிற கோரிக்கை நிறைவேற்றப்படுகிறது. அந்த வகையில் தான் இந்த ரேஷன் கடையும் திறக்கப்பட்டுள்ளது.

    நேரடி நெல் கொள்முதல் நிலையம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் கொள்முதல் என்பது குறைவாக உள்ளது. எனவே அதிக அளவில் நெல் தேவைப்படுவதால் விவசாயிகள் இன்னும் எந்தெந்த இடங்களில் வேண்டும் என்று கேட்கிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்.

    எனவே விவசாயிகள் வெளி மார்க்கெட்டில் நெல்லை விற்பனை செய்யாமல் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தங்கள் உற்பத்தி நெல்லை விற்பனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் முருகேஷ் பேசினார்.

    முன்னதாக கூட்டுறவு இணைப்பதிவாளர் நடராஜன் வரவேற்றார். நிகழ்ச்சியில் திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, மாவட்ட கவுன்சிலர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆரணி:

    ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள மேற்கு ஆரணி, ஆரணி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் பிரபு தலைமையில் நடைபெற்றது.

    இதில் வட்ட கிளைத் தலைவர் இல பாஸ்கரன் கிளை செயலாளர் பரசுராமன் ஊரக வளர்ச்சி சங்கம் வட்டார தலைவர் மணிமேகலை மற்றும் சுமார் 50-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.

    இறுதியில் வட்ட கிளை பொருளாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 3 வாகனங்கள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு கேசவபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் லோகேஷ் (25), சத்தியசீலன் (21)இவர்கள் 2 பேரும் படவேடு பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடியபோது பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து சந்தவாசல் போலீசில் ஒப்படைத்தனர்.

    பின்னர் 2 வாலிபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து போளூர் ஜேஎம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து 3 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.