
இந்த பத்திரிகையில் கற்கை, சரித்திரம், பொதுவான கல்வி, பயிர்ச் செய்கை, அரசாட்சி மாற்றம் முதலானவை பற்றியும், புதினச் செய்திகள் பற்றியும் அச்சடிக்கப்பட்டிருந்தது. இதன் முதல் ஆசிரியர்களாக ஹென்றி மார்ட்டின், சேத் பேசன் ஆகிய இரு யாழ்ப்பாணத் தமிழர் ஆவர். இதில் எழுதப்பட்ட ஆசிரியத் தலையங்கங்கள் பலவும் ஹென்றி மார்ட்டினாலேயே எழுதப்பட்டதாக தெரிகிறது. பஞ்சதந்திர கதைகளையும் இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இப்பத்திரிகையில் வெளியிட்டார்.
இதற்கு முன்னர் இலங்கையில் தொடங்கப்பட்ட பத்திரிகைகள் அனைத்துக்கும் ஆங்கிலேயரே ஆசிரியர்களாக இருந்து வந்தனர். இதனால் இலங்கையரால் வெளியிடப்பட்ட முதல் பத்திரிகை என்ற பெயரும் உதயதாரகைக்கே உரியது. கரோல் விசுவநாத பிள்ளை, ஆணல்ட் சதாசிவம் பிள்ளை ஆகியோரும் உதயதாரகையில் ஆசிரியராக பணிபுரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.