search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே ஆப்பிள் நிறுவனம் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.


    ஆப்பிள் நிறுவனம் ஐபேட் தயாரிப்பை சீனாவிலிருந்து வியட்நாமிற்கு மாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் மாடல்களின் உற்பத்தியை சீனாவிற்கு வெளியே மாற்றுவது இதுவே முதல் முறை. ஆப்பிள் தனது ஐபாட் உற்பத்தியை வியட்நாமிற்கு மாற்றுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, ஷாங்காய் மற்றும் நாட்டின் பிற நகரங்களில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது தான் என கூறப்படுகிறது.

    சப்ளை தடைகளைத் தவிர்ப்பதற்காக அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டுகள் உள்ளிட்ட உதிரிபாகங்களினை கூடுதலாக  உருவாக்குமாறு ஆப்பிள் அதன் சப்ளையர்களைக் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஷாங்காய் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் வழக்கமான வணிகம் பாதிக்கின்றனவாம். அதன் காரணமாகவே ஆப்பிள் நிறுவனம் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

     ஆப்பிள் ஐபேட்

    சில காலமாக, ஆப்பிள் நிறுவனம் சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கப் பார்க்கிறது. அடுத்த சாத்தியமான சந்தைக்கு வியட்நாம் மிகவும் பொருத்தமான தேர்வாக உள்ளதால் அதன் உற்பத்தியை அங்கு மாற்ற ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    வியட்நாம் சீனாவை விட ஆப்பிளின் சிறந்த தேர்வாக இருப்பதற்கு முதன்மைக் காரணம், ஐபேட் உள்ளிட்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கான உழைப்பு மற்றும் பிற வளங்களைப் பெறுவது எளிது என்பது தான்.

    புதிய சார்ஜிங் அடாப்டருடன், 200W வேகமான சார்ஜிங்கை விவோ நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விவோ நிறுவனம் ஒரு புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது, இது 200W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    முன்னதாக அந்நிறுவனம், 100W வேகமான சார்ஜிங்கை வழங்குவதில் பணிபுரிந்து வருவதாகக் கூறப்பட்டது, ஆனால் இப்போது, ​​ஒரு புதிய சார்ஜிங் அடாப்டருடன், 200W வேகமான சார்ஜிங்கை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

     விவோ ஸ்மார்ட்போன்

    அந்நிறுவம் கடைசியாக வெளியிட்ட விவோ X80 pro எனும் ஃபிளாக்‌ஷிப் போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் மற்றும் குவாட் கேமரா அமைப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் 80W வேகமான சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் வந்தது.  மேலும் இது 4,700mAh பேட்டரியைக் கொண்டிருந்தது. 

    6.78 இன்ச் தொடுதிரை, முன்பக்கத்தில் 32MP செல்ஃபி கேமராவுடன் வந்தது. பின்புறத்தில், இது 50MP முதன்மை சென்சார், 48MP, 12MP சென்சார் மற்றும் 8MP ஷூட்டர் என 4 கேமராக்களை கொண்டிருந்தது. இது ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்துடன் வந்தது. இந்த போனின் விலை ரூ. 79 ஆயிரத்து 999 என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆப்பிள் வாட்ச் 7 தாமதமாக அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் ஆப்பிள் தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

    பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் பற்றிய கவலைகள் இருந்த போதிலும், குளோபல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் டிராக்கரின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உலகளாவிய ஸ்மார்ட்வாட்ச் ஏற்றுமதியில் 13 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து ஆப்பிள் நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆப்பிள் வாட்ச் 7 தாமதமாக அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் ஆப்பிள் தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

    அதேபோல் கேலக்ஸி வாட்ச் 4 சீரிஸ் பிரபலம் அடைந்ததன் காரணமாக சாம்சங் நிறுவனம் இரண்டாவது இடத்தை உறுதிப்படுத்தி உள்ளது. ஹவாய், சியோமி மற்றும் கார்மின் ஆகியவை முறையே 3, 4 மற்றும் 5 வது இடங்களை பெற்றுள்ளன. மற்ற ஸ்மார்ட்வாட்ச் நிறுவனங்களான அமேஸ்பிட் 4 சதவீத வளர்ச்சி உடன் 6-வது இடத்தில் உள்ளது.

     ஆப்பிள் வாட்ச்

    முதல் காலாண்டில் சாம்சங் நிறுவனம் அதிக வளர்ச்சி கண்டு ஆப்பிள் நிறுவனத்துக்கு போட்டியாக அமைந்ததற்கு முக்கிய காரணமாக கேலக்ஸி வாட்ச் 4 சீரிஸ் அமைந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் தென் கொரியாவை சேர்ந்த ஹவாய் நிறுவனம் சர்வதேச சந்தையில் 10.1 சதவீத வளர்ச்சியைக் கண்டதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் தாக்கம் இந்த முதல் காலாண்டில் தெரியவில்லை என்றும், அதன் பாதிப்பு இரண்டாம் காலாண்டில் எதிரொலிக்கும் என்பதால் பல நிறுவனங்கள் அடுத்த காலாண்டில் வீழ்ச்சியை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ஸ்டேட்டஸ் ரிப்ளை இன்டிகேட்டர் தவிர, டெஸ்க்டாப்பில் பிஸ்னஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் செயலியைப் பயன்படுத்தும் போது, கவர் புகைப்படத்தை அமைக்கும் திறனை வாட்ஸ்அப் கொண்டு வர உள்ளதாம்.


    வாட்ஸ்அப் நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு செயலியாக உருவெடுத்துள்ளது. அத்தகைய வாட்ஸ்அப்பில் பல்வேறு சிறப்பம்சங்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் விரைவில் புது அம்சம் ஒன்றை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

     வாட்ஸ்அப்
    Photo Courtesy: WABetaInfo

    வாட்ஸ்அப்பில் நாம் பதிவிடும் ஸ்டேட்டஸ்-க்கு பதில் வரும் போது அதனை பொதுவான மெசேஜ் போல் இன்றி தனியாக பிரித்துக் காட்டும் அம்சத்தை வாட்ஸ்அப் தற்போது உருவாக்கி வருகிறது. இந்த அம்சம் தற்போது உருவாக்கத்தில் இருப்பதாகவும், பீட்டா சோதனையாளர்களுக்குக் கூட இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 

    இருப்பினும் இது எதிர்காலத்தில் ஆண்ட்ராய்டு, ஐ.ஒ.எஸ். மற்றும் டெஸ்க்டாப்பில் உள்ள பயனர்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டேட்டஸ் ரிப்ளை இன்டிகேட்டர் தவிர, டெஸ்க்டாப்பில் பிஸ்னஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் செயலியைப் பயன்படுத்தும் போது, கவர் புகைப்படத்தை அமைக்கும் வசதியினை வாட்ஸ்அப் கொண்டு வர உள்ளதாம். 
    நத்திங் போன் பிரத்யேகமாக பிளிப்கார்ட் தளத்தில் தான் வெளியிடப்படும் என்பது உறுதியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நத்திங் இயங்குதளத்தை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    ஸ்மார்ட்போன் பிரியர்கள் மிகவும் எதிர்பார்த்த நத்திங் போனின் வெளியீட்டு விவரத்தை அதன் நிறுவனர் கார்ல் பெய் கடந்த மாதம் வெளியிட்டு இருந்தார். இந்த போனின் வெளியீட்டு தேதி மற்றும் விலை விவரம் உள்ளிட்ட தகவல்களை ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது அதன் டிசைன் எப்படி இருக்கும் என்பது குறித்த புகைப்படங்கள் லீக் ஆகி உள்ளது.

    ஸ்லாஸ்லீக் என்கிற தளத்தில் இந்த போனின் தோற்றம் அடங்கிய புகைப்படம் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் ஸ்மார்ட்போனின் முன் பாகம் தெளிவாக தெரிகிறது. அதில் டாப் செண்டரில் முன்பக்க கேமரா இடம்பெற்றுள்ளது. பின் பக்கம் தெளிவாக தெரியவில்லை. இருந்தாலும் அது 3 கேமரா செட்-அப் உடன் உள்ளதை பார்க்க முடிகிறது.

     நத்திங் போன்
    Photo Courtesy: /Leaks

    இது ஸ்னாப்டிராகன் சிப்செட் மூலம் இயக்கப்படும் என்பதைத் தவிர வேறு எந்த தகவலும் இல்லை, பெரும்பாலும் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர், 90Hz டிஸ்ப்ளே, 50MP பிரைமரி சென்சாருடன், மூன்று கேமராக்கள் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றுடன் வரும் என்று கூறப்படுகிறது.

    நத்திங் போன் பிரத்யேகமாக பிளிப்கார்ட் தளத்தில் தான் வெளியிடப்படும் என்பது உறுதியாகி உள்ளது. நத்திங் இயங்குதளத்தை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் இதன் வெளியீட்டு விவரம் வெளியாக வாய்ப்புள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
    அமேஸ்பிட் GTS 2 நியூ வெர்ஷன் ஸ்மார்ட்வாட்ச், இந்தியாவில் ஜூன் 5ம்தேதி முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


    அமேஸ்பிட் GTS 2 மினி நியூ வெர்ஷனை கடந்த மாதம் அறிமுகம் செய்திருந்த அமேஸ்பிட் நிறுவனம், சில வாரங்களுக்கு முன் ஜிடிஆர் 2 நியூ வெர்ஷன் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் அந்நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகம் செய்ய தயாராகி உள்ளது. அந்த வகையில் GTS 2 நியூ வெர்ஷனை அடுத்த வாரம் இந்தியாவில் லாஞ்ச் செய்ய ஆயத்தமாகி வருகிறது.

    கடந்த 2020ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட GTS 2 மாடலைப் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும்GTS 2 நியூ வெர்ஷன், பல்வேறு நிறங்களில் கிடைக்கும் வண்ணம் உள்ளது. அமேஸ்பிட் GTS 2 நியூ வெர்ஷன் ஸ்பேஸ் பிளாக் மற்றும் பெட்டல் பிங்க் ஆகிய இரு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஜூன் 5ம்தேதி முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அமேஸ்பிட் GTS 2

    அம்சங்களை பொருத்தவரை அமேஸ்பிட் GTS 2 நியூ வெர்ஷனில் 1.65 இன்ச் AMOLED 341PPI ஸ்கிரீன் மற்றும் curved கிளாஸ் உடன் இதன் டிஸ்பிளே வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 5.0 அல்லது ஐ.ஒ.எஸ். 10.0 சப்போர்ட் மற்றும் 90க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடுகளை கொண்டுள்ளது. ஹார்ட் ரேட், ஸ்டெப் கவுண்ட், கலோரி கவுண்ட் கொண்ட இந்த ஸ்மார்ட்வாட்ச் ஸ்லீப் மற்றும் ஸ்டிரஸ் லெவலையும் கண்காணிக்கும்.

    இதுதவிர வாட்டர் ரெசிஸ்டன்ட், புளுடூத் 5.0, அலெக்ஸா வாய்ஸ் அசிஸ்டன்ட், 6 நாட்கள் வரை நீடிக்கும் 246mAh பேட்டரி, ஜிபிஎஸ், புளுடூத் காலிங் உள்ளிட்ட சிறப்பம்சங்களை இந்த ஸ்மார்ட்வாட்ச் கொண்டுள்ளது. இதன் விலை jt. 11 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
    ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ள லி-டிவி Y1 Pro ஸ்மார்ட்போனில் ஐபோன் 13-ஐ போலவே கைரேகை சென்சார் இல்லை. ஆனால் ஃபேஸ் அன்லாக் பயோமெட்ரிக் அம்சத்துடன் வருகிறது.

    லி-டிவி Y1 Pro ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  ஐபோன் 13 போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ள, இந்த ஸ்மார்ட்போன், 6.5 இன்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது ஒரு எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் ஆகும், இது யுனிசாக் T310 பிராசஸருடன் வருகிறது, இதில் 4GB ரேம் மற்றும் 256GB இன்டர்ணல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு மற்றும் முன்பக்கம் சிங்கிள் கேமரா உள்ளது. ஐபோன் 13-ஐ போலவே, இதிலும் கைரேகை சென்சார் இல்லை, ஆனால் ஃபேஸ் அன்லாக் பயோமெட்ரிக் அம்சத்துடன் வருகிறது. லி-டிவி Y1 Pro மாடல் 4GB ரேம்+ 32GB மெமரி வேரியண்டில் கிடைக்கிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 5 ஆயிரத்து 800 என  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

     லி-டிவி Y1 ப்ரோ

    4GB ரேம் + 128GB மெமரி வேரியண்ட் விலை இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரத்து 510 என்றும் 4GB ரேம் + 256GB வேரியண்ட் இந்திய மதிப்பில் ரூ. 10 ஆயிரத்து 500-க்கு கிடைக்கிறது. இது மிட்நைட் பிளாக், ஸ்டார் ப்ளூ மற்றும் ஸ்டார் ஒயிட் ஆகிய நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது. லி-டிவி போன் அடுத்த மாதம் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க, இரட்டை பிரைமரி கேமரா அமைப்புடன் வருகிறது, இது AI கேமராவுடன் 8MP பிரைமரி கேமரா கொண்டுள்ளது. முன்புறம் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 5MP கேமரா உள்ளது. லி-டிவி Y1 Pro ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது. மேலும் டூயல் சிம் (நானோ) மற்றும் 6.5 இன்ச் எல்சிடி ஹெச்.டி பிளஸ் (720x1,560 பிக்சல்கள்) டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
    மோட்டோரோலா நிறுவனம் விரைவில் மோட்டோ e32s ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ e32s ஸ்மார்ட்போனை ஜூன் 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இதன் இந்திய வெளியீடு நடைபெற இருக்கிறது. மோட்டோ e32s ஸ்மார்ட்போன் ஸ்லேட் கிரே மற்றும் மிஸ்டி சில்வர் நிறங்களில் கிடைக்கும். 

    இந்தியாவில் புதிய மோட்டோ e32s ஸ்மார்ட்போனின் விலை ரூ. 9 ஆயிரத்து 299 இல் இருந்து துவங்கும் என மோட்டோரோலா நிறுவனம் அறிவித்து இருக்கிறது. மோட்டோ e32s ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ப்ளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் ஜியோமார்ட் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 

    அம்சங்களை பொருத்தவரை புதிய மோட்டோ e32s மாடலில் 6.5 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ G37 பிராசஸர், அதிகபட்சம் 4GB ரேம், 16MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா,  2MP மேக்ரோ கேமரா, 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

     மோட்டோ e32s

    மோட்டோ e32s அம்சங்கள்:

    - 6.5 இன்ச் HD+ 1600x720 பிக்சல் மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
    - ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G37 பிராசஸர்
    - IMG PowerVR GE 8320 GPU
    - 3GB ரேம், 32GB மெமரி
    - 4GB ரேம், 64GB மெமரி
    - ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். மற்றும் My UX
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 16MP பிரைமரி கேமரா
    - 2MP டெப்த் கேமரா
    - 2MP மேக்ரோ கேமரா
    - 8MP செல்பி கேமரா 
    - 5000mAh பேட்டரி 
    - 15W பாஸ்ட் சார்ஜிங் 
    - 3.5mm ஆடியோ ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac, ப்ளூடூத் 5
    - யு.எஸ்.பி. டைப் சி
    ஐகூ நிறுவனத்தின் முதல் நியோ பிராண்டு ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஐகூ நியோ 6 என அழைக்கப்படுகிறது.

    ஐகூ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் ஐகூ நியோ 6 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஐகூ நியோ 6 மாடலில் 6.62 இன்ச் FHD+ AMOLED பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார், குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், 8GB / 12GB LPDDR5 ரேம், 128GB / 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இத்துடன் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். மற்றும் பன்டச் ஓ.எஸ். 12 யு.ஐ., 64MP பிரைமரி கேமரா, OIS வசதி, 12MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP B&W போர்டிரெயிட் கேமரா, 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4700mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இந்தியாவில் 80W பாஸ்ட் சார்ஜிங் கொண்டு அறிமுகமாகி இருக்கும் முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும். 

     ஐகூ நியோ 6

    ஐகூ நியோ 6 அம்சங்கள்:

    - 6.62 இன்ச் FHD+ AMOLED பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர்
    - அட்ரினோ 650 GPU
    - 8GB / 12GB LPDDR5 ரேம்
    - 128GB / 256GB UFS 3.1 ஸ்டோரேஜ்
    - ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். மற்றும் பன்டச் ஓ.எஸ். 12 யு.ஐ.
    - இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார்
    - 64MP பிரைமரி கேமரா, OIS வசதி
    - 12MP அல்ட்ரா வைடு லென்ஸ்
    - 2MP போர்டிரெயிட் கேமரா
    - 16MP செல்பி கேமரா 
    - 4700mAh பேட்டரி 
    - 80W பாஸ்ட் சார்ஜிங் 
    - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யு.எஸ்.பி. டைப் சி

    ஐகூ நியோ 6 ஸ்மார்ட்போன் சைபர் ரேஜ் மற்றும் டார்க் நோவா போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8GB+128GB மெமரி மாடல் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என துவங்குகிறது. இதன் 12GB+256GB மெமரி மாடல் விலை ரூ. 33 ஆயிரத்து 999 ஆகும்.
    ஏர்டெல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் பயனர்களுக்கு புது சலுகையை அறிவித்து இருக்கிறது. இதனுடன் 17 ஒ.டி.டி. சேவைகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது.


    ஏர்டெல் நிறுவனம் மூன்று புது பிராட்பேண்ட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை ஜியோஃபைபர் சேவைக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளன. இன்றைய கனெக்டெட் வீடுகளுக்கான பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது என ஏர்டெல் தெரிவித்துள்ளது. 

    புதிய ஏர்டெல் பிராட்பேண்ட் சலுகைகள் விலை முறையே ரூ. 699, ரூ. 1099 மற்றும் ரூ. 1599 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவை முறையே 40Mbps, 200Mbps மற்றும் 300Mbps வேகத்தில் இணைய சேவை வழங்குகின்றன. இவற்றுடன் 14 பிரீமியம் ஒ.டி.டி. சேவைக்கான சந்தா வழங்கப்படுகிறது. ரூ. 699 சலுகையுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா, ரூ. 1099 சலுகையுடன் அமேசான் பிரைம் வீடியோ, ரூ. 1599 சலுகையுடன் நெட்ப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படுகிறது.

     ஏர்டெல் பிராட்பேண்ட் சலுகை

    ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பிரீமியம் சேவையில் சோனிலிவ், லயன்ஸ்கேட், ஹொய்சொய், மனோரமாமேக்ஸ், ஷீமாரூ, அல்ட்ரா, ஹங்காமாபிளே, டிவோடி.வி., க்ளிக், நம்மஃப்ளிக்ஸ், டாலிவுட் மற்றும் ஷார்ட்ஸ் டி.வி. சந்தா வழங்கப்படுகிறது. ஏர்டெல் 4K ஹைப்ரிட் டி.வி. பாக்ஸ்-இல் 350-க்கும் அதிக டி.வி. சேனல்களை ஒற்றை சாதனம் மற்றும் ரிமோட்டில் வழங்குகிறது. இந்த பாக்ஸ்-க்கான கட்டணம் ரூ. 2 ஆயிரம் என ஏர்டெல் தெரிவித்துள்ளது.

    பிராட்பேண்ட் சலுகைகளுடன் 3333GB டேட்டா வழங்கப்படும். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் முதல் மாதத்திற்கான வாடகையை மற்றும் இன்ஸ்டாலேஷனை இலவசமாக வழங்குகிறது.
    ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக ஜியோ கேம் கண்ட்ரோலரை அறிமுகம் செய்து இருக்கிறது. இது 10 மீட்டர்கள் வரையிலான வயர்லெஸ் ரேன்ஜ் கொண்டிருக்கிறது.

    ஜியோ நிறுவனம் முற்றிலும் புதிய ஜியோ கேம் கண்ட்ரோலரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது வயர்லெஸ் கேமிங் கண்ட்ரோலர் ஆகும். இதில் நீண்ட பேக்கப் வழங்கும் ரிசார்ஜ் செய்யக் கூடிய பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. கிளாசிக் தோற்றம் மற்றும் குறைந்த எடை கொண்டிருக்கிறது. 

    இதில் இரண்டு வைப்ரேஷன் மோட்டார்கள் மற்றும் இரண்டு பிரெஷர் பாயிண்ட் ட்ரிகர்கள் உள்ளன. இவை தலைசிறந்த கேமிங் அனுபவத்தை வழங்குகின்றன. ப்ளூடூத் வசதி கொண்ட ஏராளமான ஆண்ட்ராய்டு சாதனங்களுடன் இணைந்து செயல்படும் வகையில் ஜியோ கேமிங் கண்ட்ரோலர் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த வயர்லெஸ் கேமிங் கண்ட்ரோலர் 10 மீட்டர்கள் வரையிலான வயர்லெஸ் ரேன்ஜ் கொண்டுள்ளது.

     ஜியோ கேம் கண்ட்ரோலர்

    இந்த கேமிங் கணட்ரோலர் ஆண்ட்ராய்டு டேப்லெட், ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்களுடன் இணைந்து வேலை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், சிறப்பான கேமிங் அனுபவம் பெற இந்த கண்ட்ரோலரை ஜியோ செட் டாப் பாக்ஸ் கொண்டு பயன்படுத்த ஜியோ அறிவுறுத்துகிறது. ஜியோ செட் டாப் பாக்ஸ் 2019 ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ப்ளூடூத் 4.1 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ஜியோ கேம் கண்ட்ரோலர் தற்போது ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. இது மேட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. ஜியோ கேம் கண்ட்ரோலர் விலை ரூ. 3 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கேம் கண்ட்ரோலருக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. 

    ரெட்மி பிராண்டின் புது பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும். இத்துடன் 2K 120Hz OLED ஸ்கிரீன், டால்பி விஷன் சப்போர்ட், 120W பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.


    சியோமி நிறுவனத்தின் ரெட்மி பிராண்டு பிப்ரவரி மாத வாக்கில் ரெட்மி K50 கேமிங் எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அதன் பின் மார்ச் மாதத்தில் ரெட்மி K50 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வரிசையில், ரெட்மி K50 அல்ட்ரா பெயரில் புது ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ரெட்மி K50 சீரிசின் டாப் எண்ட் மாடல் என தெரிகிறது.

    தற்போதைய தகவல்களின் படி ரெட்மி K50 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. சியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போனிலும் இதே பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ரெட்மி K50 மாடலில் வழங்கப்பட்ட 2K 120Hz OLED ஸ்கிரீன், டால்பி விஷன் சப்போர்ட், 120W பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.

    புதிய ரெட்மி K50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இத்துடன் சியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போனும் இதே காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படலாம். எனினும், இது பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. 
    ×