search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டோ வாட்ச் 100"

    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.


    மோட்டோ வாட்ச் 100 பெயரில் புது ஸ்மார்ட்வாட்ச் அறிமுகமாகி இருக்கிறது. இதனை இ-பை-நௌ எனும் நிறுவனம் உற்பத்தி செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மோட்டோ வாட்ச் ஓ.எஸ். கொண்டிருக்கிறது. 

    அம்சங்களை பொருத்தவரை புதிய மோட்டோ வாட்ச் 100 மாடலில் 1.3 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன், 42 எம்.எம். அலுமினியம் கேசிங், இதய துடிப்பு மற்றும் எஸ்.பி.ஓ.2 மாணிட்டரிங், 26 ஸ்போர்ட் மோட்கள் வழங்கப்பட்டு உள்ளன. 

     மோட்டோ வாட்ச் 100

    இத்துடன் 5 ஏ.டி.எம். தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் அக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப், ஜி.பி.எஸ்., பெய்டூ, ப்ளூடூத் 5 எல்.இ. போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மொத்த எடை 45.8 கிராம் ஆகும். முழுமையாக சார்ஜ் செய்தால் இந்த ஸ்மார்ட்வாட்ச் 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

    மோட்டோ வாட்ச் 100 மாடல் கிளேசியர் சில்வர் மற்றும் பேண்டம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 99.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 7,449 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் இந்த வாட்ச் மோட்டோவாட்ச் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கே.யு.வி. 100 காரின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Mahindra



    இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக மின்சாரத்தில் ஓடும் கார்களை தயாரிக்க கார் கம்பெனிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதை ஏற்று, மஹிந்திரா நிறுவனம் புதிய மின்சார காரை வடிவமைத்துள்ளது.

    மஹிந்திரா இ.கே.யு.வி. 100 என அழைக்கப்படும் இந்தக்கார் இந்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியானது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய எலெக்ட்ரிக் கார் அறிமுகம் மேலும் இரு மாதங்கள் தள்ளிப்போகும் என தெரிகிறது. 



    எலெக்ட்ரிக் கார் என்பதால் என்ஜினிற்கு மாற்றாக லித்தியம் அயன் பேட்டரி மூலம் இயங்கும் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்தக்காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 140 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என கூறப்படுகிறது. இந்த பேட்டரியை ஒரு மணி நேரத்தில் 80 சதவீதம் பேட்டரி சார்ஜ் ஆகி விடும் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இந்தியாவில் இ.கே.யு.வி. 100 மாடலை தொடர்ந்து மஹிந்திரா நிறுவனம்  எஸ்.யூ.வி., எக்ஸ்.யூ.வி. 300 உள்ளிட்ட மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    இந்தியாவில் வு டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் 100-இன்ச் 4K UHD எல்.இ.டி. டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #smarttv #androidoreo

     

    அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை சேர்ந்த ஆடம்பர தொலைகாட்சி மாடல்களை விற்பனை செய்து வரும் வு டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது.

    100-இன்ச் அளவு கொண்ட புதிய டிவி ஆன்ட்ராய்டு 4K UHD தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. புதியு வு100 டிவி மாடல் ஆன்ட்ராய்டு 8.0 ஒரியோ இயங்குதளம் மற்றும் முழுமையான மெட்டல் வடிவமைப்பு கொண்டுள்ளது. 4K HDR10 பேனல் கொண்டிருக்கும் புதிய டிவியில் 2.5 பில்லியன் கலர் மற்றும் வைடு கலர் கமுட், பில்ட்-இன் ஊஃபர் மற்றும் 2000 வாட் ஜெ.பி.எல். ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. 

    இத்துடன் வு ஆக்டிவாய்ஸ் ரிமோட் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, யூடியூப் மற்றும் கூகுள் பிளே போன்றவற்றுக்கு ஹாட்கீ உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூகுள் பிளே ஸ்டோர், ஹாட்ஸ்டார், ஆல்ட் பாலாஜி, சோனி லிவ் மற்றும் பல்வேறு இதர செயலிகளை கொண்டுள்ளது.



    வு 100 100-இன்ச் ஆன்ட்ராய்டு 4K UHD எல்இடி டிவி சிறப்பம்சங்கள்:

    - 100 இன்ச் 3480x2160 4K UHD A+ கிரேடு ஐ.பி.எஸ். பேனல்
    - குவாட்-கோர் பிராசஸர்
    - 2.5 ஜிபி ரேம்
    - 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - ஆன்ட்ராய்டு டிவி சார்ந்த ஆன்ட்ராய்டு 8.0
    - டூயல் பேன்ட் வைபை, ப்ளூடூத், 3 x HDMI, 2 x USB, ஈத்தர்நெட் போர்ட்
    - MPEG/H.264/H.265 டீகோடர்
    - 12 + 12 + 12 வாட் பில்ட்-இன் ஜெ.பி.எல். சவுன்ட்பார், ஊஃபர், DTS ட்ரு சரவுன்டு, டால்பி டிஜிட்டல்
    - வாய்ஸ் கன்ட்ரோல் ரிமோட், ஹாட்கீ

    வு 100 டிவி விலை இந்தியாவில் ரூ.20,00,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வு அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் கிடைக்கும் வு 100 டிவி விரைவில் மற்ற விற்பனையகங்களிலும் கிடைக்கச் செய்ய திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ஆதி நடிப்பில் ஆரா சினிமாஸ் நிறுவனர் மகேஷ் கோவிந்தராஜ் தயாரிப்பில் உருவாகும் ‘ஆர் எக்ஸ் 100’ படத்தின் முன்னோட்டம்.
    மிருகம் படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து ஈரம், அரவான், மரகத நாணயம் என் வெற்றி படங்களை தொடர்ந்து வழங்கிய ஆதி சமீப காலமாக தெலுங்கு திரை உலகில் தொடர் வெற்றி மூலமாக ஒரு முக்கிய அந்தஸ்தை அடைந்து இருக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இவர் படங்கள் வெற்றி பெறுவதால் இந்த இரு மாநிலங்களிலும் இவரது மார்க்கெட் உயர்ந்து கொண்டே போகிறது. 

    சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற "ஆர் எக்ஸ் 100" என்ற படத்தின் தமிழ் பதிப்பில் கதாநாயகனாக நடிக்க தற்போது ஆதி நடிக்க உள்ளார். இளைஞர்களை பெருமளவில் கவர்ந்த இந்த படம் தெலுங்கு திரை உலகில் பல்வேறு சாதனைகளை முறியடித்து இருக்கிறது என்பதுக் குறிப்பிடத்தக்கது.இந்த படத்தின் தமிழாக்கம் உரிமையை பலத்த போட்டிகிடையே பிரபல திரைப்பட விநியோக நிறுவனமும், அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா, அதர்வா ஹன்சிகா இணையாக நடிக்கும் 100 ஆகிய படங்களை தயாரிக்கும் நிறுவனமுமான ஆரா சினிமாஸ் நிறுவனர் மகேஷ் கோவிந்தராஜ் பெற்று உள்ளார்.

    "விநியோக துறையில் ஒரு நம்பகத்தன்மையான நிறுவனம் என்று பெயர் பெற்றாலும், திரைப்பட தயாரிப்பில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. ராஜ தந்திரம் வீரா நடிக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா, அதர்வா - ஹன்சிகா நடிப்பில் சாம் அன்டன் இயக்கும் 100 ஆகிய இரு படங்களும் படப்பிடிப்பு முடிந்து வெளிவரும் தருவாயில் உள்ளது. நடிகர் ஆதியுடன் எனக்கு நீண்ட நாட்களாக பழக்கம். நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற ஆசை எங்கள் இருவருக்கும் இருந்தது. ஆனால் அதற்கேற்ற கதை கிடைக்கவில்லை.இதே நேரத்தில் தெலுங்கில் ஆர் எக்ஸ் 100 என்ற படம் வெளி வந்து பல சாதனைகளை முறியடித்து ஓடிக் கொண்டு இருந்தது. ஆதி என்னை அழைத்து படம் பார்க்க சொன்னார்.

    எங்கள் இருவருக்கும் படம் மிகவும் பிடித்து இருந்தது. தமிழ் உரிமை வாங்க ஏகப்பட்ட போட்டி. தீவிர முயற்சியுடன் இந்தப் படத்தின் உரிமையை நான் பெற்றுக் கொண்டேன். இளைய சமுதாயத்தினருக்கு மிகவும் பிடிக்கும் கதை அம்சம் கொண்டு உள்ள படம் இது. ரசிகர்களின் நாடி துடிப்பை அறிந்த ஒருவர் தான் இந்த படத்தை இயக்க வேண்டும். அதற்கான தேடல் நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் கதாநாயகி பாத்திரம் மிகவும் சவாலானது. கதாநாயகி தேர்வு கூட நடைபெறவுள்ளது.இந்த மாத இறுதிக்குள் மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள், மற்ற நடிக நடிகையர் தேர்வு நடைபெறும். செப்டெம்பர் மாதம் இறுதியில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.. அதிவிரைவில் உருவாகி ரசிகர்களின் உள்ளத்தில் சீறி பாயும் " ஆர் எக்ஸ் 100" ஏன்று உற்சாகத்துடன் சொன்னார் ஆரா சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜ்.
    தமிழில் ஆடுகளம் படம் மூலம் பிரபலமான டாப்சி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய படத்தின் மூலம் தமிழுக்கு எண்ட்ரி கொடுக்க இருக்கிறார். #Taapsee
    வெற்றி மாறன் இயக்கிய ஆடுகளம் படம் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனவர் டாப்சி. அதன்பின்னர் வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 போன்ற படங்களில் தொடர்ந்து அவர் நடித்தபோதும் பெரிய அளவிலான இடத்தை தமிழில் அவரால் பிடிக்க முடியவில்லை. தமிழ் மட்டுமல்லாது சில தெலுங்குப் படங்களிலும் நடித்துவந்த டாப்சி திடீரென இந்திக்குத் தாவினார்.

    அமிதாப்பின் ‘பிங்க்’கால் இந்தியில் அவருக்கு நன்றாகவே வரவேற்புகள் கிடைக்க கிட்டத்தட்ட பாலிவுட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார். கைவசம் தற்போது நான்கு இந்திப்படங்களை வைத்துள்ள டாப்சி படங்களை தேர்ந்தெடுக்கும் விதத்தில் முன்னணி இந்தி நடிகைகளுக்கே சவாலாக இருந்துவருகிறார்.



    இந்நிலையில் தெலுங்கில் வெளியாகி ஹிட்டான ஆர்.எக்ஸ்100 படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆதிக்கு ஜோடியாக டாப்சியை நடிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. டாப்சி அதிக சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.
    மிருகம், ஈரம், அரவான், மரகத நாணயம் ஆகிய படங்களை தொடர்ந்து தெலுங்கில் இளைஞர்களை பெருமளவில் கவர்ந்த படத்தில் ஆதி நடிக்க இருக்கிறார். #Aadhi
    மிருகம் படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து ஈரம், அரவான், மரகத நாணயம் என் வெற்றி படங்களை தொடர்ந்து வழங்கிய ஆதி சமீப காலமாக தெலுங்கு திரை உலகில் தொடர் வெற்றி மூலமாக ஒரு முக்கிய அந்தஸ்தை அடைந்து இருக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இவர் படங்கள் வெற்றி பெறுவதால் இந்த இரு மாநிலங்களிலும் இவரது மார்க்கெட் உயர்ந்து கொண்டே போகிறது.

    சமீபத்தில் தெலுங்கில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற "ஆர் எக்ஸ் 100" என்ற படத்தின் தமிழ் பதிப்பில் கதாநாயகனாக நடிக்க தற்போது ஆதி ஒப்பந்தம் ஆகியுள்ளார். இளைஞர்களை பெருமளவில் கவர்ந்த இந்த படம் தெலுங்கு திரை உலகில் பல்வேறு சாதனைகளை முறியடித்து இருக்கிறது என்பதுக் குறிப்பிடத்தக்கது. 

    இந்த படத்தின் தமிழாக்கம் உரிமையை பலத்த போட்டிகிடையே பிரபல திரைப்பட விநியோக நிறுவனமும், அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா, அதர்வா ஹன்சிகா இணையாக நடிக்கும் ‘100’ ஆகிய படங்களை தயாரிக்கும் நிறுவனமுமான ஆரா சினிமாஸ் நிறுவனர் மகேஷ் கோவிந்தராஜ் பெற்று உள்ளார்.



    தற்போது இப்படத்தின் நடிகை மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாதம் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
    ×