search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரியல்மி வாட்ச் 2"

    • 41 தோ்வு மையங்களில் பிளஸ் 2 தோ்வு நடந்தது.
    • 416 போ் தோ்வில் பங்கேற்கவில்லை

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வை அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் பயிலும் மொத்தம் 6,852 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். இதில் முதல்நாள் நடைபெற்ற தமிழ் மொழிப் பாடத் தோ்வை 6436 போ் எழுதினா். 416 போ் தோ்வு எழுத வரவில்லை.

    மலையாளப் பாடத்தில் மொத்தம் 175 பேரில் 170 போ் தோ்வு எழுதினா். பிரெஞ்சு பாடத்தில் மொத்தம் 324 பேரில், 303 போ் தோ்வு எழுதினா். ஹிந்திப் பாடத்தில் மொத்தம் 89 பேரில் 89 பேரும் தோ்வு எழுதினா். தனித்தோ்வா்களில் தமிழ் தோ்வில் மொத்தம் 46 பேரில் 43 போ் தோ்வு எழுதினா். 3 போ் வருகை புரியவில்லை. ஹிந்திப் பாடத்தில் மொத்தம் ஒருவா் தோ்வு எழுதினா். மாற்றுத்திறனாளி மாணவா்கள் மொத்தம் 52 போ் அரசுத் தோ்வுத் துறையால் வழங்கப்படும் கூடுதல் ஒரு மணி நேரம், மற்றும் சொல்வதை எழுதுபவா், மொழிப்பாட விலக்கு போன்ற சலுகைகளைப் பெற்று தோ்வு எழுதினா். நீலகிரி மாவட்டத்தில் 41 தோ்வு மையங்களில் பிளஸ் 2 தோ்வு எழுதத் தகுதியுடைய தனித்தோ்வா்கள், பள்ளி மாணவா்கள் என மொத்தம் 7,440 பேரில் 6998 போ் தோ்வு எழுதினா். 442 போ் வருகை புரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் மொழிப் பாடத் தோ்வை அதிகமானோா் எழுதாமல் உள்ளனா் என்று கல்லித்துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி ஆய்வு

    நாகர்கோவில், மார்ச்.14-

    தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொது தேர்வு இன்று தொடங்கி அடுத்த மாதம் 5-ந்தேதி வரை நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 10508 மாணவர்களும், 11572 மாணவிகளும் என மொத்தம் 22080 பேர் எழுதுகிறார்கள். இதை யடுத்து தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டது. 84 தேர்வு மையங்களில் இன்று தேர்வு நடந்தது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. இதையடுத்து காலையிலேயே மாணவ- மாணவிகள் பள்ளிக்கு தேர்வு எழுத வந்திருந்தனர். பள்ளி வளாகத்தில் அமர்ந்து தேர்வுக்கான இறுதிக்கட்ட படிப்பை மேற்கொண்டனர்.

    பின்னர் தேர்வு மையத்திற் குள் மாணவ-மாணவிகள் சென்றனர். அப்போது பள்ளி ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்துக்களை கூறி தேர்வு மையத்திற்குள் அனுப்பி வைத்தனர். மாணவ-மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு அறைகள் குறித்த விபரம் பள்ளி வளாகத்திற்குள் ஒட்டப்பட்டு இருந்தது. அந்த அடிப்படையில் மாணவ-மாணவிகள் தேர்வு மையத்திற்குள் சென்றனர். தேர்வு மையத்திற்குள் எலக்ட்ரானிக்கல் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேலும் தேர்வு எழுதுபவர்களை தவிர மற்றவர்கள் யாரையும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கவில்லை.

    தேர்வு மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங் கியது. இதையடுத்து மாணவ-மாணவிகளுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டது. பின்னர் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதத் தொடங்கினார்கள். மதியம் தேர்வு முடிவடைந்தது. தேர்வை கண்காணிக்க முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படை அமைக்கப் பட்டிருந்தது. பறக்கும் படை அதிகாரிகள் தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

    தேர்வுகள் முடிவடைந்து தொடர்ந்து பலத்த பாது காப்புடன் விடைத்தாள்கள் பாதுகாப்பு மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது.நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்கான விடைத் தாள்கள் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளிக்கும், மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்திற்கான விடைத்தாள்கள் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் படந்தாலுமூடு சேகரட் கார்ட் மெர்டிக் மேல்நிலைப்பள்ளிக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. விடைத்தாள்கள் வைக்கப் பட்டுள்ள மையத்திற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    • தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இந்த தேர்வு அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 155 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இதில் 149 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காகவும், 6 தேர்வு மையங்கள் தனித் தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இந்த தேர்வு அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 155 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இதில் 149 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காகவும், 6 தேர்வு மையங்கள் தனித் தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.

    இத்தேர்வு மையங்களில் 18,830 மாணவர்கள், 20,443 மாணவிகள் என மொத்தம் 39,273 தேர்வர்கள் பிளஸ்-2 பொதுத் தேர்வினை எழுதுகின்றனர்.

    இத்தேர்வுகள் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் வகையில் 11 குழுக்களைக் கொண்ட 33 பறக்கும் படையினர், 215 நிலையான கண்காணிப்புக் குழுவினர் மற்றும் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துணை அலுவலர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள், தேர்வுப் பணியாளர்கள் என பல்வேறு நிலைகளிலும் தேர்வுப் பணிகளைக் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தேர்வுகள் அனைத்தும் காலையில் ெதாடங்கி மதியம் வரை நடை பெறுகின்றன.

    தமிழ் முதல்தாள்

    முதல் நாளான, இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. மொழிப்பாட தேர்வில் மாணவ- மாணவிகள் உற்சாகமாக பங்கேற்று தேர்வு எழுதினர்.

    தேர்வையொட்டி அதிகாலை முதலே மாணவ- மாணவிகள் பள்ளிகளுக்கு வந்து மும்முரமாக பாடங்களை படித்தனர். காலை 7 மணி அளவில் பள்ளி வளாகத்தில் நோட்டீசு போர்டில் பெயர் மற்றும் பதிவு எண், தேர்வு அறை எண் ஆகியவை கொண்ட பட்டியல் ஒட்டப்பட்டது. அவற்றை பார்த்து, மாணவ- மாணவிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வை அறையை தெரிந்து கொண்டனர்.

    பின்னர் காலை 9 மணி அளவில் இறை வழிபாடு நடைபெற்றது. அதில் மாணவ- மாணவிகள் பங்கேற்று விட்டு தங்களது தேர்வு அறைக்கு புறப்பட்டு சென்றனர்.

    பறக்கும் படையினர், தேர்வு மையங்களுக்கு திடீரென சென்று தேர்வுகள் நடைபெறுவதை கண்காணித்தனர். தேர்வையொட்டி பள்ளி களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    கலெக்டர் ஆய்வு

    சேலம் அரசு கோட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் கார்மேகம், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர், அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-

    பொதுத்தேர்வு நடத்தப்படுவது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    அந்தவகையில், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்கள், விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்கள் மற்றும் தேர்வு மையங்களுக்கு ஆயுதம் தாங்கிய பாதுகாவலர் வசதியினை ஏற்பாடு செய்திடவும், தேர்வர்கள் உரிய நேரத்தில் தேர்வு மையங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்திடவும், தடையில்லா மின்சார வசதிகள் வழங்கிடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக, மாணவர்கள் பொதுத்தேர்வை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். மனதை இயல்பான நிலையில் வைத்து, வினாக்களுக்கு ஏற்ற விடைகளை தெளிவாகவும், பொறுமையாகவும் எழுத வேண்டும். தலைமை ஆசிரியர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள் அன்றாடம் நம்பிக்கை அளித்து தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களை வாழ்த்தியும், ஊக்கப்படுத்தியும் அனுப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர்கள் ஒரு தேர்வு முடிந்த பின், அதைப்பற்றிய சிந்தனைகளைத் தவிர்த்து அடுத்தடுத்த தேர்வுகளுக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

    மேலும் தேர்வு நேரங்களில் பெற்றோர் தங்களது குழந்தைகளைப் போதிய நேரம் தூங்க வைத்து, சத்தான உணவுகளை வழங்கி, அவர்களை வாழ்த்தி, ஊக்கப்படுத்தி தேர்வு எழுத அனுப்பிட வேண்டும். பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவ, மாணவியர்கள் சிறப்பான முறையில் தேர்வுகளை எழுதி வெற்றிபெற எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின் போது உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் பிளஸ்-2 தேர்வை ஆர்வத்துடன் மாணவ-மாணவிகள் எழுதினர்.
    • பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்த மாதம் 3-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.



    மதுரை ஈ.வே.ரா. நாகம்மையார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய மாணவிகள்.

     பரமக்குடி

    தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு தொடங்கி யது. இந்த தேர்வை 8.75 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 7,920 மாணவர்கள், 8,147 மாணவிகள் என மொத்தம் 16,067 பேர் இன்று தேர்வு எழுதினர். 65 தேர்வு மையங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு எழுதி னர். காலை 10 மணிக்கு தமிழ் மொழி பாட தேர்வு தொடங்கியது.

    தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே மாணவ மாணவிகள் தேர்வு மையத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் புத்தகங்களுடன் கடைசி நேர தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு இருப்பதை காண முடிந்தது. மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்களும் தேர்வு குறித்து அறிவுரைகளை வழங்கினர்.

    தேர்வு மையங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பொருட்களை தவிர வேறு எந்த பொருட்களையும் கொண்டு செல்லக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்க ப்பட்டிருந்தது. எனவே மாணவ-மாணவிகள் தீவிர சோதனைக்குட்படுத்த ப்பட்ட பின்னர் 9.45 மணி யளவில் தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    முன்னதாக தேர்வு மையத்திற்கு மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் சென்று ஆய்வு செய்தார். தேர்வு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரிய-ஆசிரி யைகள் ஈடுபடுத்தப்பட்ட னர். மாவட்டத்தில் தொலை தூரங்களில் இருந்து மாணவ -மாணவிகள் தேர்வு மையங்களுக்கு வர அரசு பஸ் வசதிகள் செய்யப் பட்டிருந்தது.

    சிவகங்கை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 7,625 மாணவர்கள், 8,808 மாணவிகள என மொத்தம் 16 ஆயிரத்து 433 மாணவ மாணவிகள் இன்று பிளஸ்-2 தேர்வு எழுதினர். தேர்வை கண்காணிக்க 46 வினாத்தாள் கட்டுப் பாட்டா ளர்கள், 79 முதன்மை கண்காணிப்பா ளர்கள், துறை அலுவலர்கள் 1239 அறை கண் காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

    சிவகங்கையில் உள்ள மையத்திற்கு இன்று மாவட்ட கலெக்டர் மதுசுதன் ரெட்டி நேரடி ஆய்வு மேற்கொண்டார். அதேபோல் மாவட்ட முதன்மை கல்வி அலு வலர்கள் அதிகாரிகள் தேர்வு மையங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் இன்று 10,985 மாணவர்கள், 12,383 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 368 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆகியோர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.

    ஒவ்வொரு ஆண்டும் விருதுநகர் மாவட்டம், மாநில அளவில் பிளஸ்-2 தேர்வு சதவீதத்தில் முதலிடம் பெற்று வருகிறது. இந்த ஆண்டும் அதனை தக்க வைக்க மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் தேர்வுக்கு தீவிரமாக தயார்படுத்தினர்.

    3 மாவட்டங்களிலும் பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு தேர்வு மையங்களுக்கு அதிரடியாக சென்று சோதனை நடத்தி னர். தமிழ் மொழி பாட ேதர்வுடன் இன்று தொடங்கிய பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்த மாதம் 3-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.


    • நாகர்கோவில் 11 ஆயிரத்து 88 பேரும், மார்த்தாண்டம் 11 ஆயிரத்து 830 பேரும் தேர்வினை எழுதினர்.
    • தீயணைப்பு துறையினரும் தேர்வு மையங்களில் தயார் நிலையில் இருந்தனர்

    நாகர்கோவில் :

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (திங்கட்கிழமை) காலை தொடங்கியது.

    குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 22 ஆயிரத்து 918 மாணவ-மாணவிகள் எழுதினர். நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 88 பேரும், மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 830 பேரும் தேர்வினை எழுதினர்.

    இதற்காக 82 தேர்வு மையங்களும், கல்வி மாவட்டத்திற்கு தலா ஒரு தனித் தேர்வு மையமும் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வுக்காக மாணவ-மாணவிகள் இன்று காலை தங்களுக்கான தேர்வு மையத்திற்கு வந்தனர். அவர்களை ஆசிரிய-ஆசிரியைகள் வரவேற்று தேர்வு குறித்து விளக்கினர்.

    பிரார்த்தனை

    தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்காக பள்ளி களில் பிரார்த்தனை நடத்தப்பட்டது. தொடர்ந்து மாணவ-மாணவிகள் தங்கள் நண்பர்களுடன் தேர்வு பற்றி விவாதித்தனர். தேர்வு மையத்திற்குள் செல்லும் வரை சிலர் புத்தகங்களை எடுத்து பாடங்கள் படித்து நினைவூட்டிக் கொண்டனர்.

    ஏற்கனவே தேர்வு மையங்களில், மாணவ-மாணவிகளின் ஹால் டிக்கெட் எண்கள் இருக்கை களில் எழுதப்பட்டு இருந்தது. அதனை பார்த்து மாணவ-மாணவிகள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர். தொடர்ந்து வினாத்தாள்கள் வழங்கப்பட்டு தேர்வுகள் நடந்தன.

    குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை கண்காணிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் 160 பேர் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டு உள்ளது. மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் நிலையான பறக்கும் படையினர் 56 பேரும், பறக்கும் படையினர் 24 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்கும் பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.பறக்கும் படையினர் இன்று தேர்வு மையங்களுக்கு அதிரடியாக சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விபத்து அல்லது அசம்பாவிதம் நேர்ந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் தீயணைப்பு துறையினரும் தேர்வு மையங்களில் தயார் நிலையில் இருந்தனர். தேர்வு மையங்களில் முதலுதவி ஏற்பாடுகள், விடைத்தாள் பாதுகாக்கப்படும் பகுதி யில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு உள் ளிட்ட ஏற்பாடுகளும் செய் யப்பட்டு உள்ளன.

    அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி வரை தேர்வுகள் நடக்கிறது. மேலும் நாளை (14-ந் தேதி) பிளஸ்-1 தேர்வும் தொடங்குகிறது.

    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் -2.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.




    இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.




    இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் 30 நாட்கள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    • உடந்தையாக இருந்த தந்தையும் சிக்கினார்
    • திருமணத்தில் பங்கேற்றவர்களிடமும் விசாரிக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    கன்னியாகுமரி:

    களியக்காவிளையை அடுத்த நெடுமங்காடு பகுதியை சேர்ந்தவர் அல் அமீர் (வயது 23).

    இவர் அதே பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டதை அடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் அல் அமீர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பின்பு அவர் தன்மீது வழக்கு தொடர்ந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து சமரசம் பேசியுள்ளார்.

    அப்போது மாணவியை அவரே திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதையடுத்து அல்அமீருக்கும், மாண விக்கும் கடந்த 18-ந் தேதி திருமணம் நடந்துள்ளது.

    மைனர் பெண்ணை அல்அமீர் திருமணம் செய்த தகவல் குழந்தைகள் நல அலுவலர்களுக்கு தெரியவந்தது.அவர்கள் இதுபற்றி போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மைனர் பெண்ணை திருமணம் செய்ததாக அல்அமீரை கைது செய்தனர்.மேலும் இதற்கு உடந்தையாக இருந்ததாக சிறுமியின் தந்தை மற்றும் திருமணத்தை நடத்தி வைத்தவர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த திருமணத்தில் பங்கேற்றவர்களிடமும் சம்பவம் குறித்து விசாரிக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • ஒரு வீடியோவில் கே.ஜி.எப் 2 படத்தில் இடம்பெறும் பாடலை பின்னணியில் பயன்படுத்தி உள்ளனர்.
    • தங்களிடம் அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக எம்.ஆர்.டி மியூசிக் நிறுவனம் புகார்.

    பெங்களூரு:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கினார். கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் வழியாக கடந்த மாதம் 23-ம் தேதி தெலுங்கானாவை அடைந்தார். ராகுல் காந்தியின் பாத யாத்திரை தெலுங்கானாவில் நேற்றுடன் முடிந்தது.

    இதற்கிடையே, பாத யாத்திரையின் போது காங்கிரஸ் கட்சி கே.ஜி.எப்-2 படப்பாடலை அனுமதியின்றி பயன்படுத்தி வீடியோவாக தயாரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியது. இதுதொடர்பாக எம்ஆர்டி மியூசிக் நிறுவனம் தங்கள் அனுமதியின்றி படப் பாடலை பயன்படுத்தியதாக ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் மீது அளித்த புகாரில் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ன் கீழ் 403, 565, 120 ஆகிய பிரிவுகளின் கீழும், 1957-ம் ஆண்டு காப்புரிமை சட்டம் 63ன் கீழும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கர்நாடகா ஐகோர்ட்டில் நேற்று நடந்த விசாரணையில், காங்கிரஸ் கட்சி, பாரத் ஜோடோ யாத்திரை ஆகிய இரு டுவிட்டர் கணக்குகளை தற்காலிகமாக முடக்கி வைக்க வேண்டும் என டுவிட்டர் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

    • கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது
    • இக்கல்வி ஆண்டில் உயர்கல்வி தொடராத மாணவர்கள் 14 பேர் கண்டறியப்பட்டனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில் மாவட்டத்தில் 2021-2022-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக உயர்கல்வியை தொடர முடியாத மாணவர்களுக்கான வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.

    இக்கல்வி ஆண்டில் உயர்கல்வி தொடராத மாணவர்கள் 14 பேர் கண்டறியப்பட்டனர். மாணவர்கள் உயர்கல்வியை தொடரும் பொருட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்,தேசிய சுகாதார பணிகள், உயர்கல்வித்துறை முதலான துறையினர்கள் இணைந்து வழிகாட்டுதல் வழங்கினர்.

    முகாமில் உயர்கல்வி தொடராத 11 மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். இணையதள பதிவேற்றத்தில் 9 மாணவர்களுடைய விபரம் பதிவேற்றம் செய்யப்பட்டது.

    5 மாணவர்களில் 2 மாணவர்கள் வேறு மாநிலத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர். 2 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வை எழுதவில்லை. ஒருவர் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. ஆகையால் 5 மாணவர்களின் விபரம் பதிவேற்றம் செய்யப்படவில்லை. மேலும் புதிதாக 5 மாணவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    முகாமில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் பாபு, உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பிராங்கிளின் ஜேக்கப், உதவி திட்ட அலுவலர்துரைராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
    • நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி நாகர்கோவில் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் ஜெயராம் (வயது 26). இவர் மாணவியை காதலிப்பதாக கூறி அவருக்கு அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்தார். மாணவி பள்ளிக்கு செல்லும்போதும் பின் தொடர்ந்து வந்து தொந்தரவு செய்தார். தன்னை காதலிக்க மறுத்ததால் மாணவியை தாக்கியதாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் மாணவி யின் ஆபாச படத்தை சமூக வலைதளங்களில் வெளி யிடுவதாக ஜெயராம் மிரட்டி னார். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுது உள்ளார்.

    இதையடுத்து நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் செய்த னர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஜெயராம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட ஜெயராமிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஒவ்வொரு மாணவரையும் தொடர்பு கொண்டு தற்போதைய நிலையும் அறியப்பட்டது.
    • தொடர்பு கொண்டதன் விளைவாக 1,531 மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்தனர்.

    சென்னை :

    2021-22-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதி, அடுத்ததாக 2022-23-ம் கல்வியாண்டில் (நடப்பு கல்வியாண்டு) உயர்கல்வியை தொடராத மாணவ-மாணவிகளின் விவரங்களை கல்வித் துறை சேகரித்தது. அதன்படி, 8 ஆயிரத்து 249 பேர் இந்த ஆண்டு உயர்கல்வியை தொடராதது கண்டறியப்பட்டது. அதில் ஒவ்வொரு மாணவரையும் தொடர்பு கொண்டு தற்போதைய நிலையும் அறியப்பட்டது. இவ்வாறு தொடர்பு கொண்டதன் விளைவாக 1,531 மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்தனர்.

    மீதமுள்ள 6 ஆயிரத்து 718 மாணவ-மாணவிகள் வறுமை, குடும்ப சூழல், நிதி பற்றாக்குறை, தேர்வில் தோல்வி, உயர்படிப்பில் ஆர்வமின்மை, பணியில் சேர்ந்தது, பெற்றோர் அனுமதிக் காதது, தேர்வு எழுதாதது, உடல் நலமின்மை, தொழில் புரிதல், கல்லூரியில் விரும்பிய பாடத்தில் சேர்க்கை கிடைக்காதது, அருகாமையில் கல்லூரி இல்லாதது, மறுதேர்வு எழுதி தேர்ச்சி பெற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறைவடைந்தது போன்ற காரணங்களினால் உயர்கல்வியை தொடர இயலாத நிலை இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.

    இதுதவிர, 4 ஆயிரத்து 7 மாணவர்களை தொலைபேசி இணைப்பு பெறாததாலும், சில காரணங்களினாலும் தொடர்பு கொள்ள இயலவில்லை என்று கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது. அந்தவகையில் மொத்தம் 10 ஆயிரத்து 725 பேர் உயர்கல்வியை தொடர முடியாமல் போய் இருக்கின்றனர்.

    இவர்களில் 2 ஆயிரத்து 711 பேருக்கு மாவட்ட கலெக்டர் தலைமையின் கீழ் உள்ள பிற துறையினருடன் இணைந்து உயர்கல்வி தொடர்ந்து படிக்க சில நடவடிக்கைகளை கல்வித்துறை மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறது. அந்தவகையில், வருகிற 20-ந்தேதி காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் முகாம் நடத்தப்பட வேண்டும்.

    அந்த முகாமில் சம்பந்தப்பட்ட மாணவர்களை தலைமை ஆசிரியர்கள் வாயிலாக 2 நாட்களுக்கு முன்னதாக அழைத்து பெற்றோருடன் தவறாமல் கலந்து கொள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதில் கலெக்டர் அலுவலகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தேசிய சுகாதார பணிகள், உயர்கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளையும் பங்கேற்க செய்து, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி, அவர்களை உயர்கல்வி தொடர வழிவகை செய்ய வேண்டும் என்றும், பிற துறையின் ஒத்துழைப்பு தேவை ஏற்பட்டால், அவர்களையும் அழைத்து மாணவர்கள் பயன்பெற மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    • ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.
    • இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    1993-ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் 'ஜென்டில்மேன்'. இப்படத்தில் அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில், மனோரம்மா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதையடுத்து சமீபத்தில் 'ஜென்டில்மேன்-2' படத்தை அடுத்ததாக தயாரிக்கவுள்ளதாக தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தெரிவித்திருந்தார். இயக்குனர் கோகுல் கிருஷ்ணா இயக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் மூலம் நயன்தாரா சக்ரவர்த்தி தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.


    ஜென்டில்மேன்-2

    மேலும், இந்த படத்தில் கலை இயக்குனராக தோட்டா தரணி இணைந்துள்ளார். மேலும் தோட்டா தரணியோடு அவரது மகள் ரோகிணி தரணியும் இப்படத்தில் பணியாற்றவுள்ளதாக அண்மையில் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    அதன்படி, 'ஜென்டில்மேன்-2' படத்தில் நடிகர் சேத்தன் சீனு கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. நடிகர் சேத்தன் சீனு இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×