search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "‘செஸ்’"

    • விக்கிரமராஜா குற்றச்சாட்டு
    • மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரம ராஜா மார்த்தாண்டத்தில் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    தமிழகம் முழுவதும் 'செஸ்' வரி புதிதாக விதிக்க ப்பட்டதால் வியா பாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை ரத்து செய்வதற்காக விரைவில் தமிழக முதல் வரை சந்திக்க உள்ளோம். வணிக வரித்துறை சார்பில் 'டெஸ்ட் பர்ச்சஸ்' என்ற பெய ரில் உணவுப் பொரு ட்கள் கொண்டு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்து வருகின்றனர்.

    வியாபாரிகள் ஏற்கனவே வரிகளை சரியாக முறை யாக செலுத்தி வருகின்றனர் இதனால் தமிழகம் அதிக வரி வசூல் செய்யும் மாநில ங்களின் வரிசையில் முன்னி லையில் உள்ளது. பரிசோதனை செய்து 'டெஸ்ட் பர்ச்சஸ்' என்ற பெயரில் அபராதம் விதிப்பதை முழுமையாக நிறுத்த வேண்டும்.

    மார்த்தாண்டத்தைப் பொறுத்தவரை போக்கு வரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மேம்பாலம் அமைக்கப்பட்டது. தற்போது அனைத்து வாகனங்களும் மேம்பாலம் வழியாக செல்வதால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளன. மேலும் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளது. எனவே மார்த்தாண்டம் வளர்ச்சி பாதையில் மீண்டும் கொண்டு செல்வதற்காக டவுன் பஸ், விரைவு பஸ் உட்பட அனைத்து பஸ்க ளும் மார்த்தாண்டம் மேம்பா லத்தின் கீழ்பகுதி வழியாக வந்து செல்ல வேண்டும்.

    அப்போது தான் பொது மக்களுக்கும் முழுமையாக பயன்படும். மேம்பாலத்தின் கீழ்பகுதி வருவதற்கு ஒரே ஒரு இடத்தில் அதாவது பம்மத்தில் மட்டுமே குறுகலான ரோடு உள்ளது.

    அந்தப் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கட்டிடத்தை மாற்ற வேண்டும். அப்பொழுது அனைத்து வாகனங்களும் கீழ் பகுதி வழியாக வந்து செல்ல வாய்ப்பு உள்ளது. இதற்கு மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்கத் தலைவர் அல் அமீன், தென்காசி மாவட்ட தலைவர் வைகுண்ட ராஜா, பொருளா ளர் கலை வாணன், திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவர் சின்னத்துரை, குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசைத்தம்பி ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×