search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹேக்கத்தான்"

    • 2 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத்துறையில் புதிய சகாப்தத்தை எட்டியுள்ளது.
    • படித்த இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு படிக்க செல்வதும், ஆய்வு மேற்கொள்ளவும் வழியாக அமைகிறது.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் மார்த்தாண்டம், இலவுவிளை பகுதியில் ஹேக்கத்தான் நிகழ்ச்சி கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    குமரி ஹேக்கத்தான் நிகழ்ச்சியின் நோக்கம் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவி கள் தற்போதைய சூழ்நிலை களில் நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நிகழ்வாக ஹேக்கத்தான் 2023 திகழ்ந்து வருகிறது.

    மேலும், கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் சுமார் 240 மாணவ, மாணவிகள் 48 குழுக்களாக பங்குபெற்று பல தீர்வுகளை சமர்ப்பித்துள்ளனர். இவற்றில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்வுகளுக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத்துறையில் புதிய சகாப்தத்தை எட்டியுள்ளது.

    தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இளம் தலைமுறையினர் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கும் உரிய யுக்திகளை உருவாக்குவதற்கும் இந்த ஹேக்கத்தான் நிகழ்வானது பேருதவியாக உள்ளதோடு, படித்த இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு படிக்க செல்வதும், ஆய்வு மேற்கொள்ளவும் வழியாக அமைகிறது.

    அதேபோன்று, வெளி நாட்டு முதலீட்டாளர்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர வழிவகை செய்வதோடு, இளைஞர்கள் புதுமை படைக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும் ஹேக்கத் தான் நிகழ்வு வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கலசலிங்கம் பல்கலை கழகத்தில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் தொடங்கியது.
    • பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களிடம் கலந்துரையாடி வாழ்த்தினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலை கழகத்தில் ஸ்மாட் இந்தியா ஹேக்கத்தான்-2022, மத்திய அரசின் கல்வி அமைச்சகம், மத்திய அரசு புதிய கண்டுபிடிப்புகள் குழுவும், ஏ.ஐ.சி.டி. ஆகியவற்றுடன் இணைந்து 5 நாள் நிகழ்ச்சியின் தொடக்க விழா பல்கலைக்கழக துணைத்தலைவர் சசிஆனந்த் தலைமையில் நடந்தது.

    சிறப்பு விருந்தினராக மல்ட்டிகோர்வேர் நிறுவனத்தின் துணைத்தலைவர் சுப்ரமணியம் பங்கேற்று பேசினார்.

    பதிவாளர் வாசுதேவன், ஆலோசகர் ஞானசேகரன் கலசலிங்க பல்கலைகழக புதிய கண்டுபிடிப்பு குழு தலைவர் டெனி கலசலிங்கம் ஆகியோர் பேசினர். பல்கலை சர்வதேச உறவு இயக்குநர் சரசு,கல்வித்துறை இயக்குநர் கோடீஸ்வரராவ் மற்றும் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களிடம் கலந்துரையாடி வாழ்த்தினார்.

    • அகில இந்திய அளவிலான ஹேக்கத்தான் இறுதிப்போட்டி நடந்தது.
    • இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு அகில இந்திய அளவில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

    சிவகாசி

    மத்திய அரசால் 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ''ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்'' போட்டியானது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் உள்ள புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான முயற்சியாக நடத்தப்ப–டுகிறது.

    மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் ஏ.ஐ.சி.டி.இ. இணைந்து இந்த போட்டியை வருடம் தோறும் ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் என இரு பிரிவுகளாக நடத்துகிறது. சாப்ட்வேர் பிரிவுக்கான இறுதிசுற்று சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் வருகிற 25-ந் தேதி மற்றும் 26 -ந் தேதிகளில் நடக்கிறது.

    இந்த போட்டியில் கலந்து கொள்ள பஞ்சாப், புதுடெல்லி, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கோவா, தெலுங்கானா, கர்நாடகா, பீகார் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்த நிகழ்ச்சிக்கு பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்குகிறார். கல்லூரியின் இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகிக்கிறார்.

    சிறப்பு விருந்தினராக சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் கருணாமூர்த்தி, ஏ.ஐ.சி.டி.இ.யை சேர்ந்த உத்யன் மவுரியா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிச்சாமி, பாலசுப்பிரமணியன் மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    இந்த போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுடன் பிரதமர் மோடி, வருகிற 25-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை ஆன்லைனில் கலந்துரையாடுகிறார். இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு அகில இந்திய அளவில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

    ×