search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹபீஸ் சையத்"

    • 2008-ம் ஆண்டில் நடந்த மும்பை தாக்குதலில் 161 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஹபீஸ் சயீத் முக்கிய பங்காற்றினார்.
    • அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

    நியூயார்க்:

    லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீத். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்தார் என்ற குற்றத்திற்காக அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    2008-ம் ஆண்டில் நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதலில் 161 பேர் உயிரிழந்த சம்பவத்தில் இவர் முக்கிய பங்காற்றினார் என்ற குற்றச்சாட்டுக்காக இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவரை அமெரிக்கா மற்றும் ஐ.நா.சபை சர்வதேச பயங்கரவாதி என அறிவித்தது.

    இதற்கிடையே, ஒரு குறிப்பிட்ட வழக்கில் விசாரணையை எதிர்கொள்ள தேவையான ஆதாரங்களுடன் அவரை நாடு கடத்துமாறு பாகிஸ்தான் அரசிடம் இந்தியா கோரிக்கை விடுத்தது. ஆனால் பாகிஸ்தான் அரசு அவரை நாடு கடத்தவில்லை.

    இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவின் திருத்தப்பட்ட பட்டியலின்படி, பிப்ரவரி 12, 2020 முதல் பாகிஸ்தான் அதிகாரிகளின் காவலில் ஹபீஸ் சயீத் உள்ளார். 7 பயங்கரவாத செயலுக்கு நிதியுதவி செய்த குற்றங்களில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின் அவருக்கு 78 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்தப் பட்டியலின் மாற்றங்களின் லஷ்கர்-இ-தொய்பாவின் நிறுவன உறுப்பினரும், சயீத் கூட்டாளியுமான ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவியின் மரணத்தையும் கமிட்டி சரிசெய்துள்ளது. 2008 மும்பை தாக்குதலில் பயங்கரவாதிகளை தயார்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய புத்தாவி கடந்த ஆண்டு மே மாதம் சிறையில் இறந்தார்.

    இவற்றுடன் சொத்து முடக்கம், பயணத் தடை மற்றும் ஆயுதக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட நபர்கள் மற்றும் வணிகங்களின் பட்டியலை பாதுகாப்பு கவுன்சில் குழு சமீபத்தில் புதுப்பித்திருகிறது.

    ×