search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்மார்ட் சிட்டிதிட்ட பணி"

    • பணிகளை விரைவாக முடிக்கும் படி மேயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
    • கட்டிட பணிகளை மேயர் பார்வையிட்டார்.

    திருப்பூர் :

    திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏராளமான திட்டங்கள் மற்றும் பணிகள் நடந்து வருகிறது. மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்து வருகிறார். மேலும், பணிகளை விரைவாக முடிக்கும் படியும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வருகிறார்.

    இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் டவுன்ஹால், பூ மார்க்கெட், காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட கட்டிட பணிகளை மேயர் தினேஷ்குமார் பார்வையிட்டார் ஆய்வு செய்தார். மேலும், கட்டிட பணிகளையும் பார்வையி–ட்டார். இந்த நிகழ்ச்சியில் 3 வது மண்டல தலைவர் கோவிந்தசாமி, பகுதி கழக செயலாளர் மு.கே.உசேன், கவுன்சிலர்கள் செந்தூர் முத்து, கண்ணப்பன், திவாகரன் மற்றும் உதவி ஆணையர்கள் வாசுகுமார், கண்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×