search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்நாக்ஸ்"

    • டயட்டில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் இது.
    • குழந்தைகளுக்கு சத்தானது இந்த ஸ்நாக்ஸ்.

    தேவையான பொருட்கள்

    பீட்ரூட் - 2,

    பெரிய உருளைக்கிழங்கு - 1,

    கொண்டைக் கடலை - 1 கப்,

    வெங்காயம் - 1,

    பச்சை மிளகாய் - 2,

    இஞ்சி - சிறிய துண்டு,

    கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சோம்பு - தலா 1/2 டீஸ்பூன்,

    கொத்தமல்லித்தழை - சிறிது.

    உப்பு, எண்ணெய் - தேவைக்கு,

    செய்முறை

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

    கொண்டைக் கடலையை 8 மணிநேரம் ஊற வைத்து குழையாமல் பதமாக வேகவைக்கவும்.

    ப.மிளகாய், கொத்தமல்லித்தழை, இஞ்சி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பீட்ரூட்டை தோல் நீக்கி துருவி கடாயில் போட்டு லேசாக வதக்கவும்.

    மிக்சியில் கொண்டைக்கடலையை கரகரப்பாக அரைத்து அதனுடன் வதக்கிய பீட்ரூட்டை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரைத்த பீட்ரூட் கலவை, மசித்த உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய ப.மிளகாய், கொத்தமல்லித்தழை, இஞ்சி, வெங்காயம், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சோம்பு , உப்பு சேர்த்து நன்றாக கெட்டியாகப் பிசைந்து விருப்பமான வடிவத்தில் செய்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த டிக்கிகளை வைத்து மேலே சிறிது எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து, விரும்பினால் மேலே முந்திரி பதித்து, சாட் மசாலா தூவி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான பீட்ரூட் சென்னா டிக்கி ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு இந்த கேக்சிக்கில்ஸ் ரொம்ப பிடிக்கும்.
    • இந்த ரெசிபி செய்ய 30 நிமிடமே போதுமானது.

    தேவையான பொருட்கள்:

    கேக் (உங்களுக்கு விருப்பமானது) - 2 கப்

    பட்டர் கிரீம் - 3 டேபிள் ஸ்பூன்

    வெள்ளை சாக்லெட் - 1 கப்

    சிலிக்கான் மோல்டு - 1

    ஐஸ்கிரீம் குச்சிகள் - தேவைக்கேற்ப

    செய்முறை:

    ஒரு சிறிய பாத்திரத்தில் சாக்லெட்டை கொட்டவும்.

    அதைவிட சற்று பெரிய பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, அதில் சாக்லெட் இருக்கும் பாத்திரத்தை வைத்து தண்ணீரை சூடுப்படுத்தவும். தண்ணீரின் வெப்பத்தால் சாக்லெட் உருகியதும் அதை ஆறவைக்கவும்.

    சிலிக்கான் மோல்டை ஈரப்பதம் இல்லாமல் சுத்தமாக துடைக்கவும். பின்பு அதில் உருக்கிய வெள்ளை சாக்லெட்டை 3 டீஸ்பூன் ஊற்றி, எல்லா பக்கமும் படியுமாறு மெதுவாக சுழற்றவும்.

    பின்னர் ஐஸ்கிரீம் குச்சிகளை உருக்கிய சாக்லெட்டில் தோய்த்து மோல்டின் நடுப்பகுதியில் நுழைக்கவும். இது செட் ஆவதற்காக 10 முதல் 12 நிமிடங்கள் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

    இப்போது கேக்கை தூளாக உதிர்த்துக்கொள்ளவும். பின்பு அதனுடன் சிறிது சிறிதாக பட்டர் கிரீமை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவை சப்பாத்தி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.

    குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கும் மோல்டை வெளியே எடுக்கவும்.

    தயாரித்து வைத்திருக்கும் கேக் கலவையை, மோல்டில் இருக்கும் வெள்ளை சாக்லெட் மீது நிரப்பவும்.

    பின்னர் அதன் மீது சிறிதளவு உருக்கிய வெள்ளை சாக்லெட்டை ஊற்றவும். (சாக்லெட் இறுகி இருந்தால் சில நிமிடம் மறுபடியும் சுடுநீரில் வைக்கவும்.) மீண்டும் 12 முதல் 15 நிமிடங்கள் வரை மோல்டை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுக்கவும்.

    இப்போது சுவையான கேக்சிக்கில்ஸ் தயார்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • புடலங்காயில் கூட்டு, பொரியல் செய்து சாப்பிட்டிருப்பீர்கள்.
    • இன்று புடலங்காயில் சூப்பரான பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்

    புடலங்காய் - 1

    கடலை மாவு - 1 கப்

    அரிசி மாவு - 1/2 கப்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    செய்முறை:

    புடலங்காயின் தோலை நீக்கிவிட்டு, அதனை வட்ட வட்டமாக வெட்டி, அதனுள் உள்ள விதைகளை நீக்கி விட வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெட்டி வைத்த புடலங்காயை பஜ்ஜி மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், புடலங்காய் பஜ்ஜி ரெடி!!!

    கொத்தமல்லி அல்லது தக்காளி சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவிது.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • வீட்டில் மீந்து போன இட்லி மாவைக் கொண்டு குணுக்கு செய்யலாம்.
    • இந்த குணுக்கு போண்டா போன்று இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    இட்லி மாவு - 1 பெரிய கப்

    மைதா - 2 டேபிள் ஸ்பூன்

    சமையல் சோடா - 1 சிட்டிகை

    பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

    பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)

    கறிவேப்பிலை - சிறிது

    கடுகு - 1/2 டீஸ்பூன்

    பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு, மைதா சேர்த்து, அத்துடன் வேண்டுமானால் சிறிது தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

    அடுத்து அதில் சமையல் சோடா, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு சிறு கரண்டியில் மாவை எடுத்து, எண்ணெயில் ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

    இப்போது சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் குணுக்கு ரெடி!!!

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இதை கொடுக்கலாம்.
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்நாக்ஸ் இது.

    தேவையான பொருட்கள்

    பிரெட் டோஸ்ட் செய்ய

    பிரெட் துண்டுகள் - 5

    எண்ணெய் - 3 தேக்கரண்டி

    சில்லி பிரெட் செய்ய

    பூண்டு - 5 பல்

    இஞ்சி - சிறிய துண்டு

    பச்சை மிளகாய் - 2

    வெங்காயம் - 1

    குடைமிளகாய் - 1

    வெங்காயத்தாள் வெங்காயம் - 1 மேசைக்கரண்டி

    கொத்தமல்லி இலை -சிறிதளவு

    மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

    வினிகர் - 1 தேக்கரண்டி

    சோயா சாஸ் - 2 தேக்கரண்டி

    மிளகாய் விழுது - 1 மேசைக்கரண்டி

    தக்காளி கெட்சப் - 2 மேசைக்கரண்டி

    சோளமாவு - 1 1/2 தேக்கரண்டி

    தண்ணீர் - 1/4 கப்

    வெங்காயத்தாள் - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 3 தேக்கரண்டி

    செய்முறை:

    வெங்காயம், பூண்டு, ப.மிளகாய், இஞ்சி, குடைமிளகாய், வெங்காயத்தாள்,கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சில்லி பேஸ்ட் செய்ய மிளகாயை தண்ணீரில் வேகவைத்து, ஆறவிட்டு நன்கு விழுதாக அரைக்கவும்.

    பிரெட்டின் ஓரங்களை வெட்டி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கவும்.

    ஒரு பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பிரெட்டை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக டோஸ்ட் செய்யவும்.

    ஒரு பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    பிறகு நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

    பின்பு உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து விடவும்.

    அடுப்பை குறைந்த தீயில் வைத்து வினிகர், சோயா சாஸ், அரைத்த மிளகாய் விழுது, தக்காளி கெட்சப் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

    பிறகு நறுக்கிய வெங்காயத்தாள் வெங்காயம் சேர்த்து கலந்த பின்னர் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

    சோளமாவு, தண்ணீர் இரண்டையும் சேர்த்து கட்டியின்றி கரைத்து கடாயில் சேர்க்கவும்.

    அடுத்து டோஸ்ட் செய்த பிரெட்டை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

    இறுதியாக நறுக்கிய வெங்காயத்தாள், கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு உடனே பரிமாறவும்.

    காரமான சில்லி பிரெட் தயார்!

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • மீதமாகிய சப்பாத்தியை வைத்து ‘கப் பீட்சா’ செய்யலாம்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சப்பாத்தி - 4

    எண்ணெய் - 2 கப்

    மொசரில்லா சீஸ் (துருவியது) - 1 கப்

    சில்லி பிளேக்ஸ் - 2 டீஸ்பூன்

    பீட்சா சாஸ் - 4 டீஸ்பூன்

    ஓரிகானோ - 2 டீஸ்பூன்

    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

    ஆலிவ் பழம் - 5

    குடைமிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 2 டீஸ்பூன்

    வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 2 டீஸ்பூன்

    செய்முறை:

    ஒரு நீண்ட எவர்சில்வர் டம்ளரின் வெளிப்பகுதி முழுவதும் சிறிதளவு எண்ணெய் தடவி, அதன் மேல் சப்பாத்தியை நூல் கொண்டு கட்டுங்கள்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் டம்ளரை அதில் போட்டு, சப்பாத்தி பொன்னிறமாக மாறும்வரை பொரித்து எடுங்கள்.

    சூடு ஆறிய பிறகு டம்ளரில் இருந்து சப்பாத்தியை பிரித்து எடுக்கலாம்.

    கிண்ணம் போல இருக்கும் சப்பாத்தியின் உள்ளே சீஸ், குடைமிளகாய், வெங்காயம், பீட்சா சாஸ் என ஒவ்வொன்றாக நிரப்பவும்.

    அதன்மேல் மிளகுத்தூள், சில்லி பிளேக்ஸ், ஓரிகானோ ஆகியவற்றைத் தூவி ஆலிவ் பழம் கொண்டு அலங்கரிக்கவும்.

    அடுப்பில் தவாவை வைத்து சூடானதும், தயார் செய்த சப்பாத்தியை அதன் மேல் வைத்து மூடி 15 நிமிடங்கள் வரை 'பேக்' செய்தால் 'கப் பீட்சா' தயார்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • ஒட்ஸ் சாப்பிடுவதால் டைப்2 நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.
    • ஓட்ஸில் கெட்ட கொழுப்பை கரைக்கக்கூடிய வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளது.

    தேவையான பொருட்கள்

    ஓட்ஸ் - 1 கப்

    தண்ணீர் - 1 1/2 கப்

    அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 1

    இஞ்சி - சிறிய துண்டு

    கேரட் - 1

    முட்டைகோஸ் - சிறிய துண்டு

    சீரகம் - 1/2 தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    உப்பு - 1 தேக்கரண்டி

    நெய் - தேவையான அளவு

    செய்முறை:

    * கேரட், முட்டைகோஸை துருவிக்கொள்ளவும்.

    * வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஓட்ஸில் தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற வைத்த பின்னர் மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    * அரைத்த ஓட்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, துருவிய கேரட், துருவிய முட்டைகோஸ்,

    சீரகம், மஞ்சள் தூள், உப்பு, அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    * பின்பு நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    * பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் மாவை ஊற்றி 5 நிமிடம் வேகவிடவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி விட்டு 5 நிமிடம் வேகவிடவும்.

    * இப்போது சத்தான சுவையான ஓட்ஸ் குழிப்பணியாரம் தயார்!

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • வாழைக்காயில் பல ரெசிபிகளை செய்யலாம்.
    • வாழைக்காய் சிப்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள் :

    வாழைக்காய் - 1

    உப்பு - தேவையான அளவு

    மிளகுத் தூள்/மிளகாய் தூள் - தேவையான அளவு

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    செய்முறை :

    ஒரு கிண்ணத்தில் மிளகுத் தூள்/மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

    வாழைக்காயை நீரில் கழுவி, இரு முனைகளையும் வெட்டி தோலுரித்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அதனை மெல்லியதாக, வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

    ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடானதும், அதில் வாழைக்காய் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, ஒரு பௌலில் போட்டு, அதில் கலந்து வைத்த மிளகாய் தூளை சேர்த்து நன்றாக குலுக்கி எடுத்தால் வாழைக்காய் சிப்ஸ் ரெடி.

    இதனை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.

    சூப்பரான வாழைக்காய் சிப்ஸ் ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த போண்டாவை டீ, காபியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
    • இந்த போண்டா செய்ய 15 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்

    மைதா மாவு - 1 கப்

    பெரிய வெங்காயம் - 4

    பச்சை மிளகாய் - 3

    சோம்பு - 1 ஸ்பூன்

    தனி மிளகாய்தூள் - 1 ஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிதளவு

    கடலை மாவு - 4 ஸ்பூன்

    அரிசி மாவு - 2 ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயத்தை தோல் நீக்கி நீளமாக மெலிதாக நறுக்கிக் கொள்ளவும்.

    கறிவேப்பிலை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு இதனுடன் உப்பு, மிளகாய் தூள், ப.மிளகாய், கறிவேப்பிலை, சோம்பு போட்டு நன்றாக கலந்து இந்த கலவையை  10 நிமிடம் மூடி வைக்கவும்.

    10 நிமிடம் கழித்து பார்த்தால் வெங்காயம் மிருதுவாகி இருக்கும். இப்போது மைதா மாவு, கடலை மாவு, அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கலக்கவும். மாவு உருண்டை பிடிக்கிற அளவு பக்குவமாக இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை சிறிய உருண்டைகளாக உங்களுக்கு பிடித்த வடிவில் உருட்டி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேக வைத்து எடுக்கவும்.

    இப்போது சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் டீக்கடை வெங்காய போண்டா ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பருப்பு வடையை விட இந்த வடை சூப்பரான இருக்கும்.
    • இன்று இந்த வடை செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    காய்ந்த பச்சை பட்டாணி - 200 கிராம்,

    கடலைப் பருப்பு - 50 கிராம்,

    அரிசி - ஒரு டேபிள்ஸ்பூன்,

    பெரிய வெங்காயம் - ஒன்று,

    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,

    இஞ்சித் துண்டுகள் - சிறிய துண்டு

    பச்சை மிளகாய் - 2,

    உப்பு - தேவைக்கேற்ப,

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

    செய்முறை :

    * இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * காய்ந்த பச்சை பட்டாணி, கடலைப்பருப்பு, அரிசி மூன்றையும் 2 மணி நேரம் ஊறவைத்து, உப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக, கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    * அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பிசைந்த மாவை வடைகளாகத் தட்டி போட்டு பொரித்து எடுக்கவும்.

    * மாலை நேர ஸ்நாக்ஸ் பச்சை பட்டாணி வடை ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • டெல்லியில் மிகவும் பிரபலமான, சுவையான உணவுகளில் ஒன்று குல்லே கி சாட்.
    • இதை உங்களுக்கு விருப்பமான காய்கறிகள், பழங்களில் செய்து சாப்பிடலாம்.

    தேவையான பொருள்கள்:

    உருளைக்கிழங்கு - 2

    கொண்டைக்கடலை - கால் கப்

    இஞ்சி - சிறிய துண்டு

    பச்சை மிளகாய் - 1

    மாதுளை - சிறிதளவு

    எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி

    கல் உப்பு - தேவைக்கேற்ப

    பிளாக் சாட் மசாலா - தேவைக்கேற்ப

    செய்முறை :

    கொண்டைக்கடலையை வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

    இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து, அவற்றை தோல் உரித்து கொள்ளுங்கள். பின்னர் உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி ஸ்பூன் வைத்து நடுவில் குழி போல் வெட்டி எடுக்கவும். இப்போது பார்க்க கிண்ணம் போல் இருக்கும்.

    எடுத்த உருளைக்கிழகை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வேக வைத்த பின்னர் கொண்டைக்கடலை, பச்சை மிளகாய், மாதுளை, இஞ்சி, உப்பு, பிளாக் சாட் மசாலா மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.

    இப்போது கலந்த கலவையை உருளைக்கிழங்கு கிண்ணத்தில் போட்டு சாப்பிடுங்கள்.

    இது மிகவும் சுவையானது மட்டுமல்லாமல் மிகவும் ஆரோக்கியமானது.

    இதோ போல் உங்களுக்கு விருப்பமான காய்கறிகள், பழங்களில் செய்து சாப்பிடலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் இதை செய்து கொடுக்கலாம்.
    • உருளைக்கிழங்கில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - கால் கிலோ

    மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்

    எண்ணெய், உப்பு - தேவைக்கு

    செடார் சீஸ் - 2 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    பிரெட் தூள் - 3 டீஸ்பூன்

    கார்ன் ஃப்ளார் - 3 டீஸ்பூன்

    உப்பு - தேவைக்கு

    செய்முறை :

    உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து மசித்து கொள்ள கொள்ள வேண்டும்.

    மசித்த உருளைக்கிழங்கு, கார்ன்ஃப்ளார், மஞ்சள் தூள், பிரெட் தூள், உப்பு, சீஸ், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். பின் இதனை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

    பிளாஸ்டிக் பேப்பரில் சிறிது எண்ணெய் தேய்த்து நடுவில் பிசைந்த மாவை பெரிய உருண்டையாக உருட்டி வைத்து மூடி சப்பாத்தி கட்டையால் சப்பாத்தி போல தேய்க்க வேண்டும்.

    பின்னர் ரவுண்ட் கட்டர் வைத்து வெட்டி ஸ்ட்ரா கொண்டு கண்கள் போல் இரண்டு ஓட்டை போட வேண்டும்.

    வாய்க்கு ஸ்பூன் வைத்து வரைய வேண்டும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து ஸ்மைலிகளை போட்டு பொரித்தெடுத்து டொமேட்டோ கெட்சப் உடன் சாப்பிடவும்.

    ஸ்மைலிகளை பாக்ஸில் போட்டு ஃப்ரீசரில் வைத்து தேவைப்படும் பொழுது எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து கொள்ளலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    ×