search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலையாட்கள்"

    வீடு மற்றும் கடையில் வேலை செய்ய இந்தோனேசியர்கள் விற்பனைக்கு என விளம்பரம் செய்த நிறுவனத்தின் அங்கீகாரத்தை தடை செய்துள்ள சிங்கப்பூர் அரசு, சட்ட ரீதியாகவும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. #Singapore
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் வீடு மற்றும் கடைகளில் வேலையாளாக பணியாற்றுவது இந்தோனேசியர்கள்தான். அங்கு நிலவும் வறுமை காரணமாக சிங்கப்பூரை அவர்கள் நாடி வருகின்றனர். மற்ற நாடுகளை போல இல்லாமல் கடுமையான தொழிலாளர் சட்டங்களை கொண்ட சிங்கப்பூர் அரசு, வேலையாட்களுக்கு தேவையான வசதிகள் மற்ற நாடுகளை விட அதிகமாகவே கிடைக்கும்.

    இந்நிலையில், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று ‘இந்தோனேசிய பணியாளர்கள் விற்பனைக்கு’ என சமீபத்தில் விளம்பரம் செய்துள்ளனர். இது தொடர்பான புகார் அரசுக்கு சென்ற நிலையில், அந்த நிறுவனத்தின் அங்கீகாரத்தை அரசு தடை செய்துள்ளது.

    மேலும், சட்ட ரீதியான நடவடிக்கையையும் சிங்கப்பூர் அரசு தொடங்கியுள்ளது. 
    ×