search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலூரில் பொதுமக்கள் மறியல்"

    வேலூர் கஸ்பாவில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    வேலூர்:

    வேலூர் கஸ்பா வ.உ.சி. தெருவில் 2 நாட்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அப்போது வ.உ.சி. தெருவிற்கு குடிநீர் கொண்டு செல்லும் பைப் லைன் உடைந்து விட்டது.

    இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் வந்து உடைந்த பைப் மீது ரப்பர் டியூப் சுற்றி விட்டு சென்று விட்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை வ.உ.சி. தெருவிற்கு மாநகராட்சி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.

    அப்போது கழிவுநீர் கலந்த குடிநீர் துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீரை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    குடிநீர் பைப் லைன் உடைந்து விட்டது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அலட்சியத்துடன் இருந்து விட்டனர். இதனால் குடிநீரில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது.

    மேலும் இந்த குடிநீரை பயன்படுத்தினால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் உடைந்த குடிநீர் குழாய் பைப் லைனை சரி செய்து மீண்டும் குடிநீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். நீண்ட நேரம் மறியலில் ஈடுபட்டும் அதிகாரிகள் யாரும் வராததால் பொதுமக்கள் தாங்களாகவே கலைந்து சென்றனர்.

    ×