search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெனிசூலா அதிபர்"

    வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். #VenezuelaCrisis #Maduro #VenezuelaMutiny
    காரகாஸ்:

    வெனிசுலா நாட்டில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தில்லுமுல்லுகள் முறைகேடுகள் நடந்ததாக கூறி முக்கிய எதிர்க்கட்சி தேர்தலை புறக்கணித்தது. பிரதான எதிர்க்கட்சி புறக்கணித்ததால் தேர்தலில் 46.1 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகின. அதிபர் மதுரோ 58 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆனால் அவரது வெற்றியை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுத்துவிட்டன.

    அதேசமயம் பாராளுமன்றத்தில் முழுவதுமாக எதிர்க்கட்சியினர் ஆதிக்கம் செலுத்தி வருவதால், நிகோலஸ் மதுரோ 2-வது முறையாக அதிபர் ஆவதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். எனினும் அவர் கடந்த 10-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு முன்னிலையில் 2-வது முறையாக அந்நாட்டின் அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார்.
     
    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள் நிகோலஸ் மதுரோ பதவி விலக வேண்டும் என்றும், புதிய தேர்தலை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன. தொடர்ந்து போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், அதிபர் மதுரோவுக்கு எதிராக, ராணுவத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அத்துடன் மதுரோவுக்கு எதிரான தங்கள் போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தனர். இது தொடர்பாக நேற்று சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

    அதில் பேசிய ஒரு வீரர், ‘தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த நாங்கள் அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளோம். எனவே, உங்கள் உதவி தேவை. தெருவில் இறங்கி போராட்டம் நடத்துங்கள்’ என கேட்டுக்கொண்டார்.



    இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில், சம்பந்தப்பட்ட வீரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு காரகாசில் உள்ள கோட்டிசா பகுதியில் உள்ள முகாமில், கிளர்ச்சியில் ஈடுபட முயன்றபோது அவர்களை போலீசாரும் பாதுகாப்பு படையினரும் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். இத்தகவலை பாதுகாப்புத்துறை மந்திரி விளாடிமிர் பத்ரினோ தெரிவித்துள்ளார்.

    கைது செய்யப்பட்ட வீரர்களிடம் இருந்து திருட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், கிளர்ச்சியாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். ஆனால் எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

    கிளர்ச்சியாளர்கள் கோட்டிசா முகாமிற்கு செல்லும் முன்பு, பெட்டாரே பகுதியில் உள்ள முகாமில் இருந்து ஆயுதங்களை திருடிச் சென்றதாகவும், 4 வீரர்களை கடத்திச் சென்றதாகவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #VenezuelaCrisis #Maduro #VenezuelaMutiny
    தன்னை கொலை செய்யவும், வெனிசூலாவில் ஆட்சியை கவிழ்க்கவும் அமெரிக்கா சதி திட்டம் தீட்டுவதாக நிக்கோலஸ் மதுரோ பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளார். #Venuzuela #NicolasMaduro
    கராகஸ்:

    தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசூலாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு முதல் சுமார் 20 லட்சம் மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.

    ஆனால் அங்கு அதிபராக உள்ள நிக்கோலஸ் மதுரோ, நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும், மாறாக அவர் சர்வாதிகார ஆட்சியில் ஈடுபடுவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

    இதனை காரணம் காட்டி அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகம் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது.

    இந்த நிலையில், தன்னை கொலை செய்யவும், வெனிசூலாவில் ஆட்சியை கவிழ்க்கவும் அமெரிக்கா சதி திட்டம் தீட்டுவதாக நிக்கோலஸ் மதுரோ பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளார். அதிபர் மாளிகையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் கூறியதாவது:-

    என்னை படுகொலை செய்யவும், வெனிசூலாவில் அயல்நாட்டு படைகளை குவித்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவும் அமெரிக்கா சதி திட்டம் தீட்டி வருகிறது. இந்த பொறுப்பு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அதனை எதிர்கொள்ள நட்பு நாடுகளின் உதவியோடு வெனிசூலா மக்கள் தாயராக இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Venuzuela #NicolasMaduro
    ×