search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெங்காய விலை வீழ்ச்சி"

    வெங்காய விலை வீழ்ச்சி மற்றும் கடன் பிரச்சினை காரணமாக மகாராஷ்டிராவில் விவசாயிகள் 2 பேர் தற்கொலை செய்தனர். #Onionfarmers #Suicide
    மும்பை:

    வடமாநிலங்களில் வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி காணப்படுகிறது.

    நாசிக் மாவட்டத்தில் உள்ள பதாளே கிராமத்தை சேர்ந்தவர் கைர்னார் (44). விவசாயியான இவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காததால் தனது நிலத்தில் விளைந்த 500 குவிண்டால் வெங்காயத்தை விற்க முடியாமல் அவர் கவலையுடன் இருந்தார். மேலும் வங்கியில் வாங்கிய ரூ.11 லட்சத்தை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக கைர்னார் தற்கொலை செய்து கொண்டார்.

    இதே போல அதே மாவட்டத்தை சேர்ந்த மனோஜ் தாண்டேஜ் (33) என்ற விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    அவர் வங்கியில் ரூ.21 லட்சம் கடன் வாங்கி இருந்தார். மேலும் மொத்த விலை சந்தையில் வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காமல் விரக்தியில் இருந்தார். இதனால் அவர் தற்கொலை செய்துள்ளார்.

    நாட்டின் மொத்த உற்பத்தியில் 50 சதவீத வெங்காயத்தை நாசிக் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் சாகுபடி செய்கிறார்கள். ஆனால் வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காததால் அவர்கள் தற்போது பரிதாப நிலையில் உள்ளனர். #Onionfarmers #Suicide

    ராசிபுரம் உழவர் சந்தையில் அவரைக்காய் 1 கிலோ அதிகப்பட்சமாக ரூ.40-க்கு விலை போனது. வெங்காய விலை வீழ்ச்சி அடைந்தது.

    ராசிபுரம்:

    இன்று பந்த் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ராசிபுரம் உழவர் சந்தைக்கு வழக்கம்போல் விவசாயிகள் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை கொண்டு வந்திருந்தனர். வழக்கமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவு காய்கறிகளை விவசாயிகள் கொண்டு வருவது வழக்கம்.

    இந்த நாட்களில் 20 டன் வரை காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். இன்று பந்த் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் விவசாயிகள் கத்தரிக்காய், பீர்க்கங்காய், சுரக்காய், வெண்டக்காய் மற்றும் பழ வகைகள், கீரை வகைகள் உள்பட 43 வகையான விளை பொருட்களை முள்ளுகுறிச்சி, மெட்டாலா, நாரைக்கிணறு, உரம்பு, ஓசக்காரன்புதூர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இன்று 14.835 டன் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு இருந்தன. 

    ராசிபுரம் உழவர் சந்தைக்கு வழக்கமாக 1 டன் வெண்டைக்காய் வரும். ஆனால் இன்று 400 கிலோ மட்டுமே கொண்டு வந்திருந்தனர். 1 கிலோ தக்காளி ரூ.10-க்கு விற்பனை ஆனது. புதிய இஞ்சி ரூ.40 முதல் 50-க்கும், பழைய இஞ்சி 1 கிலோ ரூ.100-க்கும் விற்பனை ஆனது. அவரைக்காய் 1 கிலோ அதிகப்பட்சமாக ரூ.40-க்கு விலை போனது. இது உச்ச கட்ட விலை ஆகும். அதேசமயத்தில் சின்ன வெங்காயம் 1 கிலோ ரூ.20-க்கு விற்றது. வெங்காய விலை வீழ்ச்சி அடைந்தது. மற்ற காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் வழக்கம்போல் விற்பனை செய்யப்பட்டன.

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வெங்காய விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட் தென்தமிழகத்தின் பெரிய மார்க்கெட்டாக உள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் காய்கறிகளை கொள்முதல் செய்து வருகின்றனர்.

    குறிப்பாக 60 சதவீத காய்கறிகள் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒட்டன்சத்திரம், இடைய கோட்டை, அம்பிளிக்கை, கள்ளிமந்தயம், மூலச்சத்திரம், கேதையெறும்பு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வெங்காய சாகுபடி செய்து வருகின்றனர்.

    இந்த வருடம் பருவமழை ஓரளவு கைகொடுத்ததால் ஆர்வமுடன் வெங்காயம் பயிரிட்டனர். தற்போது ஆடி மாதத்திற்கு அவை அனைத்தும் அறுவடையாகி வருகிறது. இதனால் மார்க்கெட்டுக்கு 60 கிலோ கொண்ட பை 5 ஆயிரம் வந்துள்ளது.

    அதிக அளவு வெங்காய வரத்து உள்ளதால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.10-ல் இருந்து ரூ.20 வரை மட்டுமே விலை கேட்கப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த 4 வருடங்களாக வறட்சியின் காரணமாக நஷ்டத்தை சந்தித்து வந்தனர்.

    இந்த ஆண்டு காய்கறிகள் வரத்து அதிகரித்தும் விலை கிடைக்கவில்லை. மற்ற காய்கறிகளின் விலையும் குறைவாகவே உள்ளதால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். இதனால் பெரும் அளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். எனவே அரசு தங்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    ×