search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெங்கடேசன்"

    • மருத்துவரான நான் உங்களுக்கு தேவையான மருத்துவம் மற்றும் தேவையான உதவிகள் செய்வதற்கு தயாராக உள்ளேன்.
    • மக்கள் நலத்திட்டங்கள் கிடைக்க இரட்டை இலைக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள்.

    மேலூர்:

    மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சரவணன் மேலூர் அருகே வெள்ளலூர் நாட்டை சார்ந்த மட்டங்கி பட்டி, புலிமலைப் பட்டி, குறிஞ்சிப்பட்டி, அழகிச்சிபட்டி, கோட்டநத்தம்பட்டி, அம்பலகாரன்பட்டி, நயத்தான் பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    முன்னதாக வேட்பாளர் சரவணனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து குலவையிட்டு வரவேற்றனர். அப்போது சரவணன் பேசியதாவது:- கடந்த முறை வெற்றிப் பெற்ற வேட்பாளர் வெங்கடேசன் 4 ஆண்டுகளாக தொகுதி பக்கமே வராதவர். அவருக்கு சினிமாவிற்கு கதை எழுதுவதற்கு மட்டுமே நேரம் உள்ளது. மருத்துவரான நான் உங்களுக்கு தேவையான மருத்துவம் மற்றும் தேவையான உதவிகள் செய்வதற்கு தயாராக உள்ளேன்.

    அதிமுக அரசு கொண்டு வந்த தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு நிறுத்தி வைத்துள்ளது. மக்கள் நலத்திட்டங்கள் கிடைக்க இரட்டை இலைக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தில் பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன், யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மேலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன் ராஜேந்திரன், கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றிச்செழியன், பொருளாளர் அம்பலம் மற்றும் கட்சியினர் தீரளாக பங்கேற்றனர்.

    • மதுரைக்கு ரூ.7,000 கோடி அளவில் செய்யப்பட்ட திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.
    • வழியெங்கும் திரண்ட மக்கள் மேளதாளம் முழங்க பூக்களை தூவி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு வரவேற்பு அளித்தனர்.

    மதுரை:

    மதுரை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. பேட்பாளர் மக்களின் மருத்துவார் டாக்டர் பா.சரவணன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் தொகுதிக்கு உட்பட்ட பல்பேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறொர். அதன் ஒரு பகுதியாக மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சோலை அழகுபுரம், ஜெய்ஹிந்த்புரம், ஜீவாநகர், கோவலன் நகர், முத்துப்பட்டி, பழங்காநத்தம், திருவள்ளவர் நகர், மாடக்குளம் ஆகிய பகுதிகளில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்.

    வழியெங்கும் திரண்ட மக்கள் மேளதாளம் முழங்க பூக்களை தூவி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு வரவேற்பு அளித்தனர். மேலும் செல்லும் இடமெல்லாம் உற்சாக வரவேற்பு அளித்து ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு சரவணனை அவர்கள் வாழ்த்தினார்கள். அப்போது அவர் 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது மதுரைக்கு ரூ.7,000 கோடி அளவில் செய்யப்பட்ட திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.

    மதுரையில் நடைபெறுகிற மக்களவைத் தேர்தல் உண்மைக்கும் பொய்க்கும் நடைபெறும் தேர்தல் எனவும், சி.பி.எம். பாராளுமன்ற உறுப்பி்னுர் சு.வெங்கடேசன் கொண்டு வந்த திட்டங்கள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை எனவும் பேசினார்.

    பிரசாரத்தில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ். பாண்டியன், ஜெயவேல், பரவை ராஜா, கருப்பசாமி, முத்துவேல், எஸ்.எம்.டி.ரவி, செல்வக்குமார், மைதிலி, இஷிகா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தேமுதிக மாவட்ட செயலாளர் (தெற்கு) மணிகண்டன், அகில இந்திய பார்வர்டு பிளாக் சிவபாண்டி, பசும்பொன், எஸ்.டி.பி.ஐ. பிலால் மைதீன் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    • தமிழகத்தை பொறுத்த வரை அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மட்டுமே போட்டி.
    • கடந்த முறை எம்.பி.யாக இருந்த வெங்கடேசன் இந்த முறையும் போட்டியிடுகிறார்.

    மதுரை:

    மதுரை பாராளுமன்ற தொகுதியல் அ.தி.மு.க. சார்பில் மக்களின் மருத்துவர் டாக்டர் சரவணன் போட்டியிடுகிறார். இதையொட்டி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வேட்பாளர் டாக்டர் சரவணன் பேசியதாவது:-

    தமிழகத்தை பொறுத்த வரை அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மட்டுமே போட்டி. எடப்பாடி பழனிசாமி மக்களுக்காக சேவையாற்றி வருகிறார். தி.மு.க.வுடன் கம்யூனிஸ்டு கட்சி கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கிறார்கள். கடந்த முறை எம்.பி.யாக இருந்த வெங்கடேசன் இந்த முறையும் போட்டியிடுகிறார். அவர் டுவிட்டர் அரசியல் வாதியாக செயல்பட்டு வருகிறார். மதுரை மக்களுக்காக எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.

    கடந்த 4 வருடங்களாக மக்களை சந்திக்காத அவர் தற்போது தேர்தல் நேரத்தில் மக்களை சந்திக்கிறார். அவரது சொத்து 10 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த தேர்தலின்போது சு.வெங்கடேசன் உள்ளிட்ட எண்ணற்ற 44 வாக்குறுதிகளை மதுரை மக்களுக்கு அளித்திருந்தார். ஆனால் அதை எதையும் நிறைவேற்றவில்லை. மோடி, மு.க.ஸ்டாலின் வாயால் வடை சுடுவது போல சு வெங்கடேசனும் 44 ஊசி போன வடைகளை சுட்டுள்ளார்.


    இது மதுரை மக்களுக்கு ஆரோக்கியமானதல்ல. கீழடிக்கு அவர் தன்னை முன்னிலை படுத்தி வருகிறார். கீழடி தொடர்பாக முதலில் வெளிப்படுத்தியவர் வரலாற்று ஆசிரியர் பாலசுப்பிரமணியன். ஆனால் வெங்கடேசன் உரிமை கொண்டாடி வருகிறார். இதன் மூலம் அவர் போலி விளம்பர அரசியல் செய்து வருகிறார்.

    அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு 26 வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. கடந்த 10 ஆண்டுகால ஆட்சியின் போது மதுரையில் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தியது அ.தி.மு.க. தான். குறிப்பாக மருத்துவ படிப்பில் அரசு பள்ளியில் படிப்பவர்களுக்கு உள் இடஒதுக்கீடு. குடிமராமத்து பணி, அம்மா கொண்டு வந்த மழைநீர் சேகரிப்பு திட்டம், மடிக்கணினி, பெண்களுக்கு இலவச கால்நடை திட்டம்

    திட்டங்களை அ.தி.மு.க. செயல்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியின்போது ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பில் வளர்ச்சிப்பணிகள் நிறைவேற்றப்பட்டன.

    தி.மு.க. அரசு கடந்த முறை தேர்தல் அறிக்கையின்போது கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.100 குறையும் என தெரிவித்தார்கள். ஆனால் அதனை நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல் விலையை ரூ.3 மட்டும் குறைத்தார்கள். தற்போது 75 ரூபாய்க்கு பெட்ரோல், டீசல் விலை கொண்டு வருவோம் என கூறுகிறார்கள். தி.மு.க. அரசு இதுபோன்ற பொய் வாக்குறுதிகளை அளித்து ஆசையை தூண்டுகிறார்கள். ஆனால் மக்கள் ஏமாற மாட்டர்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஏழுமலையானுக்கு தயிர்சாதம் மட்டுமே நைவேத்தியம் செய்யப்படுகிறது.
    • இதுதவிர வேறு எந்த பாத்திரமும் கருவறையின் குலசேகரபடியை தாண்டது.

    திருப்பதி பிரசாதம்!

    திருமலை வாசனுக்கு படைக்கும் பிரசாதங்கள் தாய் வகுளாதேவி முன்னிலையில் தயாரிக்கப்படுகிறது.

    இதற்காக மடப்பள்ளி முன்பு தாய் வகுளாதேவி சிலை உள்ளது.

    இங்கு ஏழுமலையானுக்கு பிடித்த லட்டு பிரசாதத்துடன் பொங்கல், தயிர்சாதம், புளிசாதம், சித்தரன்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரி பருப்பு கேசரி ஆகியவை பெருமளவு தயார் செய்யப்படுகிறது.

    ஆனால் ஏழுமலையானுக்கு தயிர்சாதம் மட்டுமே நைவேத்தியம் செய்யப்படுகிறது. அதுவும் மண்சட்டியில் வைத்து படைக்கப்படுகிறது.

    இதுதவிர வேறு எந்த பாத்திரமும் கருவறையின் குலசேகரபடியை தாண்டது.

    பெருமாளுக்கு நைவேத்யம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர் சாதமும் ஒரு பக்தனுக்கு கிடைத்தால் அது அவன் செய்த பெரும் பாக்கியமாக கருதப்படுகிறது.

    • மூலவர் “சிலா தோரணம்” என்ற அபூர்வ கற்களில் வடிக்கப்பட்டு உள்ளது.
    • ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் இருக்கிறது.

    திருமலை அதிசயம்

    ஆஜானுபாகுவாய் சுமார் 9 அடிக்கு மேல் உயர்ந்து கமலபீடத்தின் மீது எழுந்து நிற்கும் ஏழுமலையானுக்கு வெள்ளிக்கிழமை மட்டுமே அபிஷேகம் நடக்கும்.

    மற்ற நாட்களில் எல்லாம் பச்சை கற்பூரம், புனுகுதைலம், வாசனை திரவியங்கள் சாத்தப்பட்டு தங்க, வைர, வைடூரிய நகைகளால் அலங்கரிக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது.

    மூலவர் "சிலா தோரணம்" என்ற அபூர்வ கற்களில் வடிக்கப்பட்டு உள்ளது.

    மூலவருக்கு தினமும் பச்சை கற்பூரம் சாத்தப்படுகிறது. இது அரிப்பை ஏற்படுத்தும் ஒருவகை அமிலம்.

    இதனை சாதாரண கருங்கல்லில் தடவினால் அது வெடித்துவிடும்.

    ஆனால் 365 நாளும் பச்சை கற்பூரம் சாத்தப்படும் ஏழுமலையான் மூலவர் சிலை வெடிப்பேதும் இல்லாமல் உள்ளது அதிசயமாக கருதப்படுகிறது.

    ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் இருக்கிறது.

    திருமலை 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம்.

    அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள்.

    அபிஷேகம் முடிந்ததும் ஏழுமலையானுக்கு வியர்க்கும்.

    இதனால் பீதாம்பரத்தால் வியர்வையை வேதபண்டிதர்கள் ஒற்றி எடுக்கிறார்கள்.

    • ஏழுமலையானை திருமலை ஏறி நேரடியாக அவரை தரிசிக்க கூடாது.
    • அலமேல் மங்காபுரத்தில் உள்ள பத்மாவதி தாயாரை தரிசிக்க வேண்டும்.

    ஏழுமலையானை தரிசிக்கும் முறை!

    ஏழுமலையானை திருமலை ஏறி நேரடியாக அவரை தரிசிக்க கூடாது.

    அதற்கு ஒரு மரபு உண்டு.

    முதலில் கீழ் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ பெருமானை சேவிக்க வேண்டும்.

    ஏன் முதலில் கோவிந்தராஜனை தரிசனம் செய்ய வேண்டும் என்றால் இவர் வேங்கடவனின் அண்ணன்.

    சிதம்பரம் கோவிலில் திருச்சித்திரகூடத்தில் எழுந்தருளி உள்ள கோவிந்தராஜனே இவர் என்று புராண வரலாறு கூறுகிறது.

    தில்லை கோவிந்தராஜன் இந்த பகுதிக்கு வந்ததாகவும், திருப்பதியின் எழிலில் மனதை பறிகொடுத்து இங்கேயே தங்கி விட்டதாகவும், அவருக்காக இங்கு கோவில் எழுப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    வேங்கடவன் கோவில் கொள்வதற்கு முன்பே இவர் இங்கே எழுந்தருளியதால் இவரை ஏழுமலையானின் அண்ணன் என்கிறார்கள்.

    முதலில் இவரை தரிசித்து விட்டு பின்னர் அலமேல் மங்காபுரத்தில் உள்ள பத்மாவதி தாயாரை தரிசிக்க வேண்டும்.

    இவரை தரிசித்து திருமலை ஏற அனுமதி பெற வேண்டும்.

    திருமலையில் வராக தீர்த்தகரையில் உள்ள வராகமூர்த்தியை தரிசித்த பின்னரே திருவேங்கடனை தரிசிக்க செல்ல வேண்டும்.

    • “வேங்”என்றால் பாவம்., “கடா” என்றால் தீர்த்து வைக்கும் சக்தியுள்ளவன் என்று பொருள்.
    • அஞ்சனாதேவி தவம் புரிந்து ஆஞ்சநேயரை பெற்ற காரணத்தினால் அஞ்சனாத்திரி.

    திருப்பதி திருமலை!

    ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 ஆலயங்களையும் "திருப்பதி" என்றுதான் அழைக்கின்றனர்.

    ஆனால் ஊரை சொல்லாமல் திருப்பதி என்று சொன்ன மாத்திரத்திலேயே அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய தலம் வேங்கடவன் கோவில் கொண்டுள்ள திருப்பதிதான்.

    "வேங்"என்றால் பாவம்., "கடா" என்றால் தீர்த்து வைக்கும் சக்தியுள்ளவன் என்று பொருள். அதனால்தான் வேங்கடேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

    கலியுக கடவுளாக பக்தர்களின் கஷ்டங்களை தீர்த்து வைக்கும் இஷ்ட தெய்வமாக திகழும் வேங்கடேஸ்வரரை பக்தர்கள் திருமலைவாசா, ஸ்ரீனிவாசா, ஏழுமலையான், ஏழுகொண்டலவாடு, பாலாஜி, கோவிந்தா, மலையப்பான் என்று பலவாறு உள்ளம் உருகி அழைத்து வழிபடுகிறார்கள்.

    அவரது பெயரை போல திருமலைக்கும் ஏழு பெயர்கள் உண்டு.

    ஆதிசேஷன் உருவத்தை ஒத்திருப்பதால் சேஷாசலம்.

    வேதங்கள் நிலை கொண்டு இருப்பதால் வேதாசலம்.

    கருடனால் பூலோகத்தை அடைந்த காரணத்தினால் கருடாசலம்.

    விருஷன் எனும் அரக்கன் மரணம் அடைந்து மோட்சம் பெற்றதால் விருஷபாத்திரி.

    அஞ்சனாதேவி தவம் புரிந்து ஆஞ்சநேயரை பெற்ற காரணத்தினால் அஞ்சனாத்திரி.

    வாயுதேவனுக்கும், ஆதிசேஷனுக்கும் உண்டான சண்டையால் ஆனந்தகிரி.

    பாவங்கள் தீர்க்கும் காரணத்தினால் வேங்கடாசலம் என அழைக்கப்படுகிறது.

    • செம்மொழி தமிழாய்வு மையத்தின் குறள்பீட விருது 2012 முதல் எவருக்கும் அறிவிக்கப்படவில்லை
    • வேத சமஸ்கிருத வாரியத்தின் பிராந்திய மையம் ராமேசுவரத்தில் அமைக்கப்படும் என மத்திய மந்திரி தகவல்

    கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பத்ரிநாத், துவார்கா, ஜெகனாத், ராமேசுவரம் மற்றும் கவுகாத்தி ஆகிய ஐந்து இடங்களில் வேத சமஸ்கிருத வாரியத்தின் பிராந்திய மையம் அமைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில், மதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் தனது டுவிட்டர் பகுதியில் ''செம்மொழி தமிழாய்வு மையத்தின் குறள்பீட விருது 2012 முதல் எவருக்கும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், வேத சமஸ்கிருத வாரியத்தின் பிராந்திய மையம் ராமேசுவரத்தில் அமைக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவிப்பு'' என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்றத்தில் பல்வேறு எம்.பி.க்கள் கேட்ட கேள்விக்கு, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் அளித்த பதிலைத் தொடர்ந்து சு.வெங்கடேசன் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

    ×