search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீணை"

    • பஞ்சரத்ன கீர்த்தனை விழா கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது.
    • வெங்கடேஷ், சுபாஷினி ஆகியோரின் வீணை நிகழ்ச்சி நடந்தது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் மடத்து தெருவில் உள்ள சங்கர மடத்தில் வளரும் இசை கலைஞர்கள் மன்றம் மற்றும் சிட்டி யூனியன் வங்கி சார்பில் 37-ம் ஆண்டு தியாகபிரம்ம இசை விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு பஞ்சரத்ன கீர்த்தனை விழா கடந்த 2 நாட்களாக நடந்தது.

    நிகழ்ச்சிக்கு இசைக்கலை ஞர்கள் மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தீபக்ரமேஷ் முன்னிலை வகித்தார்.

    விழாவில் திருப்பனந்தாள் மோகன்தாஸ் குழுவினரின் மங்கள இசை விழா மற்றும் கும்பகோணம் இசை வாத்திய கலைஞர்கள் சார்பில் கச்சேரி ஆகியவை நடந்தது.

    தொடர்ந்து, உற்சவ சம்பிரதாய கீர்த்தனைகளும், ஸ்ரீநிதி ரக்சனாராய், சுசித்ரா பார்த்தசாரதி, பிரியா பிரதீப் குமார், வெங்கடேஷ், சுபாஷினி ஆகியோரின் வீணை நிகழ்ச்சியும் நடந்தது.

    அதனைத் தொடர்ந்து, மதுரிமா ராமகிருஷ்ணன், ஸ்ரீமதி நித்யஸ்ரீ மகாதேவன் ஆகியோரின் பாட்டு கச்சேரியும், கிருஷ்ணசாமியின் வயலின், தியாக பிரம்ம இசை விழா, ஸ்கந்த சுப்பிரமணியன் மிருதங்கம், கிருஷ்ணசாமி கடம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    இதனையடுத்து ஆஞ்சநேயர் உற்சவம் நடந்தது.

    விழா ஏற்பாடுகளை குடந்தை வளரும் இசை கலைஞர்கள் மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் வீணை, சுவாமிமலை ஐம்பொன் சிலை உள்ளிட்ட 10 பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றதாகும்.
    • தஞ்சை மாவட்டத்தின் புகழ் உலக நாடுகளுக்கு பரவட்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில்

    கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சி யம் மட்டுமல்லபல்வேறு கலைகளின் வாழ்விட மாகவும், பிறப்பிடமாகவும் உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

    அதாவது தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் பெயிண்ட்ஸ், கருப்பூர் பெயிண்ட், கலைத்தட்டு, திருபுவனம் பட்டு, சுவாமிமலை ஐம்பொன் சிலை, நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம், நாச்சியார் கோவில் குத்துவிளக்கு, நெட்டி வேலைபாடுகள் ஆகிய 10 பொருட்கள் புவிசார் குறியீடுபெற்றது ஆகும்.

    இந்த நிலையில் இந்த கலை களையும், கலைஞர்களை ஊக்குவி க்கவும், அவர்க ளை உலகம் அறியும் வகையில் செய்யவும் சென்னை அண்ணா நகர் வி .ஆர் .மாலில் முதல் கட்டமாக வருகிற 19, 20 மற்றும் 21 ஆகிய 3 நாட்களில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் விற்பனையகம்- கண்காட்சி நடைபெற உள்ளது.

    இந்த தகவலை சென்னையில் உள்ள உங்கள் உறவினர்களுக்கு தெரிவியுங்கள். தஞ்சை மாவட்டத்தின் புகழ் உலக நாடுகளுக்கு பரவட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • யாழை பழித்த மொழியம்மை என்று அழைக்கப்படும் வேதநாயகி அம்மன் அருள்பாலித்து வருகிறார்.
    • வீணையின் ஒலியைவிட அம்மனின் குரலோசை இனிமையாக இருந்ததால் சரஸ்வதி வீணை இல்லாமல் தனி சன்னதி கொண்டுள்ளார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும் வரலாற்று சிறப்புடையது.இந்த கோவிலில் யாழைப் பழித்த மொழியம்மை என்று அழைக்கப்படும் வேதநாயகி அம்மன் அருள்பாலித்து வருகிறார். சரஸ்வதிக்கும் இந்த அம்மனுக்கும் வீட்டின் ஒளி சிறந்ததா அல்லது அம்மனின் குரலோசை சிறந்ததா என போட்டி ஏற்பட்டு வீணையின் ஒலியைவிட அம்மனின் குரலோசை இனிமையாக இருந்ததால் சரஸ்வதி வீணை இல்லாமல் தனி சன்னதி கொண்டுள்ளார்.

    வேத நாயகி அம்மனுக்கு ஆடி மாதத்தில் ஆடிப்பூர திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதற்காக நேற்று பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்தி நாத பண்டார சன்னதி, சமஸ்தார்கள் கயிலைமணி வேதரத்தினம் ,கேடிலியப்பன், உபயதாரர்கள் தேவி, பாலு, ராஜேந்திரன், ஓதுவார் மூர்த்தி, பரஞ்சோதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×