search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் போராட்டம்"

    • அரியானா போலீசார் ரப்பர் குண்டுகளால் சுட்டு போராட்டக்காரர்களை கலைத்த போது பஞ்சாப்பை சேர்ந்த விவசாயி பலியானார்.
    • விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் பஞ்சாப் முதல்-மந்திரி தெரிவித்து உள்ளார்.

    டெல்லியை நோக்கி போராட்டம் நடத்தி வரும் பஞ்சாப் விவசாயிகள் அந்த மாநில எல்லையான கனவுரி நகரில் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் மீண்டும் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கிய போது அரியானா போலீசார் ரப்பர் குண்டுகளால் சுட்டு போராட்டக்காரர்களை கலைத்தனர். அப்போது பஞ்சாப்பை சேர்ந்த 21 வயது விவசாயி சுப்கரன் சிங் பலியானார். இதையொட்டி அரியானா போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்தநிலையில் உயிரிழந்த விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாக பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் அறிவித்துள்ளார். மேலும் விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

    • அரியானா போலீசார் பஞ்சாப் எல்லைக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
    • அரியானா முதல்வர் மீது 302 சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

    டெல்லியில் பேரணி நடத்துவதற்காக திரண்ட விவசாயிகள் பஞ்சாப், அரியானா எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்கள் முன்னேற முயன்று வருவதால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

    இந்த மோதலில் 21 வயது இளைஞரான சுப்கரன் சிங் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் இரண்டு நாட்கள் பேரணிக்கு செல்லும் திட்டத்தை விவசாயிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் மகா பஞ்சாயத்து நடைபெறும் என பாரதிய கிஷான் சிங் தலைவர் பல்பிர் சிங் ரஜேவால் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில் "அரியானா போலீசார் பஞ்சாப் மாநிலத்திற்குள் புகுந்து எங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். எங்களுடைய டிராக்டர்களை அடித்து நொறுக்கினார்கள். அரியானா முதல்வர், அரியானாவின் உள்துறை மந்திரி ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 302 பிரிவின் கீழ் (கொலை) வழக்குப்பதிவு செய்ய வேண்டும். விவசாயி மரணம் குறித்த நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். மார்ச் 14-ந்தேதி ராம் லீலா மைதானத்தில் விவசாயிகளின் மகா பஞ்சாயத்து நடைபெறும்" என்றார்.

    போராட்டம், பேரணி, கருப்பு தினம் மகா பஞ்சாயத்து என விவசாயிகள் எம்.எஸ்.பி.க்காக பல்வேறு கட்ட போராட்டங்களை அடுத்தடுத்து கையில் எடுக்க உள்ளனர்.

    • விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டால் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது
    • 144 தடை உத்தரவை அமல்படுத்துவது, இணையச் சேவைகளை தடை செய்வது, இதுதான் உங்களின் ஜனநாயகமா?

    விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு, X கணக்குகள் முடக்கம், இதுதான் ஜனநாயகமா: ராகுல்காந்தி ட்வீட்

    மோடி அவர்களே..! நீங்கள் ஜனநாயகத்தை கொலை செய்கிறீர்கள் என மக்களுக்கு தெரியும். அவர்கள் அதற்கு பதில் அளிப்பார்கள் என ராகுல்காந்தி தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டால் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது. இளைஞர்கள் வேலைவாய்ப்பு கேட்டால், அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பது கிடையாது. முன்னாள் ஆளுநர் உண்மையை கூறினால், அவரின் வீட்டிற்கு சி.பி.ஐயை அனுப்புவது. எதிர்க்கட்சியினரின் வங்கிக்கணக்கை முடக்குவது. 144 தடை உத்தரவை அமல்படுத்துவது, இணையச் சேவைகளை தடை செய்வது, இதுதான் உங்களின் ஜனநாயகமா?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு தொடர்புடைய 30 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. சி.ஆர்.பி.எப் வீரர்கள் செல்ல விமானம் கொடுத்திருந்தால் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடந்திருக்காது என தான் கூறியதற்கு வாயை மூடி அமைதியாக இருக்குமாறு மோடி சொன்னதாக மாலிக் பேட்டியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பல கணக்குகள், பதிவுகளை தற்காலிகமாக முடக்குவதாக X நிறுவனம் தெரிவித்துள்ளது.
    • முடக்கப்பட்ட பல கணக்குகள் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புடையவை

    இந்திய அரசின் உத்தரவுகளை ஏற்று, இந்தியாவிற்குள் அடையாளம் காணப்பட்ட குறிப்பிட்ட சில கணக்குகள், பதிவுகளை தற்காலிகமாக முடக்குவதாக X நிறுவனம் தெரிவித்துள்ளது.

    "இந்திய அரசின் உத்தரவில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஆனால் இந்திய அரசின் தடை உத்தரவுகளை எதிர்த்து நாங்கள் தாக்கல் செய்த ரிட் மனு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், விதிமுறைகளால் அரசின் உத்தரவை இங்கு வெளியிட முடியவில்லை என்றாலும், அதன் வெளிப்படைத்தன்மை தேவை என்பதால் இதனை பொதுவெளியில் தெரியப்படுத்துகிறோம்" என X நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

    X நிறுவனத்தால் முடக்கப்பட்ட பல கணக்குகள் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புடையவை என 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' தெரிவித்துள்ளது. 

    • டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் விவசாயிகள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • செல்போன் டவரில் விவசாயிகள் சண்முக சுந்தரம், வேலுமணி ஆகிய 2 பேர் செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரியலூர்:

    வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டுவர வேண்டும், வேளாண் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று நடந்த இந்த போராட்டத்தில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்தார்.

    டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் விவசாயிகள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த சேனாபதி கிராமத்தில் உள்ள செல்போன் டவரில் விவசாயிகள் சண்முக சுந்தரம், வேலுமணி ஆகிய 2 பேர் செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • கடந்த ஆண்டு கரும்பு கொள்முதல் விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ. 315 ஆக இருந்தது.

    இந்தியாவில் கரும்பு கொள்முதல் விலை 8 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை 2024-25 நிதியாண்டிற்கானது ஆகும். புதிய விலை உயர்வு அக்டோபர் மாதம் அமலுக்கு வரவிருக்கிறது.

    குறைந்தபட்ச ஆதார விலை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கரும்புக்கான கொள்முதல் விலை உயர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போதைய அறிவிப்பின் படி கரும்பு கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ. 315-இல் இருந்து ரூ. 340 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

     


    இது தொடர்பாக பேசிய மத்திய மந்திரி அனுராக் தாக்கூர், "விவசாயிகள் நலன் மற்றும் விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கத்திலேயே எங்களது அரசு இயங்கி வருகிறது. வரவிருக்கும் கரும்பு சீசன் அக்டோபர் 1, 2024 அன்று துவங்குகிறது. அதன்படி அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 30, 2025 ஆண்டுவரை புதிய விலை அமலில் இருக்கும்," என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "கடந்த ஆண்டு கரும்பு கொள்முதல் விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ. 315 ஆக இருந்த நிலையில், 2024-25 நிதியாண்டில் இந்த விலை ரூ. 340 ஆக உயர்த்தப்படுகிறது," என்று தெரிவித்தார்.

    • விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.
    • விவசாயிகளை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டன.

    வேளாண் விலை பொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், கடன் தள்ளுபடி, உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தை கடந்த 13-ந்தேதி தொடங்கினர்.

    பஞ்சாபில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் பஞ்சாப்-அரியானா இடையே ஷம்பு எல்லையிலும் கனாரி எல்லையிலும் தடுத்து நிறுத்தப்பட்டனர். விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. விவசாயிகளை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

    போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாய சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நான்கு முறை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அதன்படி விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆயத்தமாகினர்.

    டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை தொடங்கும் விதமாக ஹரியானா, பஞ்சாப் எல்லையில் ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் போலீசாரின் தடுப்புகளை அகற்ற விவசாயிகள் ஜே.சி.பி. இயந்திரங்களுடன் புறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையில் பயங்கர மோதல் நடந்தது. அதில் 3 விவசாயிகள் படுகாயம் அடைந்தனர். படுகாயமுற்ற விவசாயிகள் பாட்டியாலா ராஜிந்திரா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

    சிகிச்சை பலனின்றி ஒரு விவசாயி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவர் பஞ்சாப் மாநிலத்தின் பதிண்டா மாவட்டத்தை சேர்ந்த 21-வயகான சுப்கரன் சிங் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயி ஒருவர் உயிரிழந்த நிலையில், 5-ம் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள விவசாய சங்கங்களுக்கு மத்திய வேளாண் மந்திரி அர்ஜுன் முண்டா அழைப்பு விடுத்துள்ளார்.

    பஞ்சாப்-அரியானா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்ததை தொடர்ந்து போராட்டம் இரண்டு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக விவசாய சங்க தலைவர்கள் அறிவித்தனர்.

    • அரியானா மற்றும் பஞ்சாப் எல்லையான சம்பு பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.
    • இரும்பு தடுப்புகளை கடக்க முயன்ற விவசாயிகளை தடுக்க முயற்சி செய்த காவல்துறையினர்.


    புதுடெல்லி:

    வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் பெற வேண்டும் என்று பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    மேலும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணைய பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்துள்ளனர்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் டெல்லி நோக்கி ஊர்வலம் செல்லும் போராட்டத்தை கடந்த

    13-ந்தேதி தொடங்கினார்கள். அவர்களை சமரசம் செய்ய கடந்த 8, 12, 15 மற்றும் 18-ந்தேதிகளில் 4 தடவை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.


    கடந்த 18-ந்தேதி நடந்த 4-வது கட்ட பேச்சுவார்த்தையின்போது 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் சோளம், பருத்தி உள்ளிட்ட விளைப் பொருட்களை கொள்முதல் செய்யும் புதிய திட்டத்தை மத்திய அரசு முன்வைத்தது.

    மத்திய அரசின் புதிய திட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர். இதன் காரணமாக விவசாயிகள் பிரச்சினையில் இதுவரை எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் இன்று (புதன்கிழமை) 9-வது நாளாக அவர்கள் போராட்டம் நீடித்தது.

    இன்று மீண்டும் டெல்லியை நோக்கி ஊர்வலத்தை தொடங்கப்போவதாக விவசாயிகள் அறிவித்தனர். இதற்காக நேற்று இரவு முதலே விவசாயிகள் டெல்லி அருகே உள்ள பஞ்சாப், அரியானா எல்லைகளில் குவிய தொடங்கினார்கள்.

    1200 டிராக்டர்களுடன் விவசாயிகள் பஞ்சாப் மாநில எல்லையான சம்பு நகரில் குவிந்துள்ளனர். மேலும் 300 கார்கள் மற்றும் 10 மினி பஸ்களில் விவசாயிகள் அந்த எல்லை பகுதிக்கு வந்துள்ளனர். இதனால் இன்று காலை சம்பு பகுதியில் கடும் பதட்டம் ஏற்பட்டது.

    பஞ்சாப் எல்லையில் மட்டும் சுமார் 14 ஆயிரம் விவசாயிகள் திரண்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இன்று பகல் 11 மணிக்கு அவர்கள் டெல்லி நோக்கிய பயணத்தை தொடங்கினார்கள். தங்களது பயணம் அமைதியான முறையில் நடைபெறும் என்று விவசாய சங்க பிரதிநிதிகள் இன்று காலை தெரிவித்தனர்.


    ஆனால் விவசாயிகள் தடை ஏற்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்துமீறி நுழையக்கூடும் என்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் சட்டம்-ஒழுங்கை சீர் குலைக்கும் வகையில் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் பணிகளை செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை உத்தரவிட்டு உள்ளது.

    டெல்லி புறநகர் பகுதிகளான நொய்டா, திக்ரி, சிங்கு, காசியாபூர் பகுதிகளிலும் விவசாயிகள் திரண்டு உள்ளனர். அவர்கள் டெல்லிக்குள் ஊடுருவி போராட்டம் நடத்தக்கூடாது என்பதற்காக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேச மாநில எல்லைகளில் இரும்பு ஆணி மற்றும் சிமெண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

    விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லி புறநகர் பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் இருந்து பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேச சாலைகளில் போக்கு வரத்து நெரிசல் காணப்படுகிறது.

    என்றாலும் விவசாயிகள் தடுப்புகளை உடைத்து விடக்கூடாது என்பதற்காக எல்லை பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். விவசாயிகளை விரட்டுவதற்கான வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. டெல்லிக்குள் வரும் சாலைகள் மூடி சீல் வைக்கப்பட்டு உள்ளன.

    இந்த தடுப்புகளை அகற்றும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை மத்திய-மாநில போலீசார் ஏற்க வில்லை. இதையடுத்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர். சட்டம்-ஒழுங்கு சீர் குலைந்தால் அதற்கு தாங்கள் பொறுப்பு அல்ல என்று கூறி உள்ளனர்.


    இதன் காரணமாக மீண்டும் டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் பதட்டமான சூழ்நிலை உருவாகி இருக்கிறது. விவசாயிகள் போராட்டத்தை எதிர்கொள்ள டெல்லி புறநகர் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக டெல்லி நகருக்குள்ளும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்து நின்று ஊர்ந்தபடி சென்றன.

    இத்தகைய சிக்கல்களில் இருந்து மீள்வதற்கு மத்திய அரசு மீண்டும் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். ஆனால் மத்திய அரசு தங்களது புதிய திட்டத்தை விவசாயிகள் ஏற்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இதன் காரணமாக மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே இழுபறி நீடிக்கிறது. விவசாயிகளை பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து தூண்டி விடுவதாகவும் பா.ஜனதா தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இந்நிலையில் டெல்லி எல்லை அருகே திரண்டுள்ள விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது.

    இச்சம்பவம் தொடர்ந்து அரியானா மற்றும் பஞ்சாப் எல்லையான சம்பு பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.

    5வது கட்டமாக விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.




    • விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.
    • நான்கு முறை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

    வேளாண் விலை பொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், கடன் தள்ளுபடி, உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தை கடந்த 13-ந்தேதி தொடங்கினர்.

    பஞ்சாபில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் பஞ்சாப்-அரியானா இடையே ஷம்பு எல்லையிலும் கனாரி எல்லையிலும் தடுத்து நிறுத்தப்பட்டனர். விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. விவசாயிகளை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

    போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாய சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நான்கு முறை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அதன்படி விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆயத்தமாகினர்.

    டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை இன்று தொடங்கும் விதமாக ஹரியானா, பஞ்சாப் எல்லையில் ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் போலீசாரின் தடுப்புகளை அகற்ற விவசாயிகள் ஜே.சி.பி. இயந்திரங்களுடன் புறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    விவசாயிகளை தடுக்கும் விதமாகவும், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் ஹரியானா மாநில எல்லை பகுதியில் வைத்து விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். 

    • தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் திருப்பூரில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
    • விவசாயிகள் போராட்டம் காரணமாக திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு பரபரப்பு நிலவியது.

    திருப்பூர்:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முறியடிக்க மத்திய அரசு கண்ணீர் புகை குண்டு வீச்சு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் விவசாயிகள் மீது தாக்குதலை கண்டித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் திருப்பூரில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் மறியலில் ஈடுபட வந்த விவசாயிகள் ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

    ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் கூறுகையில்,

    மத்திய பாஜக., அரசால் சமீபத்தில் பாரத ரத்னா விருது கொடுத்து கவுரவிக்கபட்ட எம்.எஸ். சுவாமி நாதன் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சலோ என்ற போராட்டத்தை பஞ்சாப் விவசாயிகள் அறிவித்தனர். இது ஏதோ வட இந்திய விவசாயிகளின் போராட்டம் போல இங்கு சித்தரிக்கபடுகிறது.

    ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான அடிப்படை உரிமை போராட்டம் என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். சிலர் கோரிக்கைகளின் நியாயத்தை திசை திருப்பி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி பொதுமக்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதை தொடர்ந்து செய்துவருகிறார்கள். ஜனநாயக வழியில் போராட வந்த விவசாயிகள் தலைநகர் டெல்லிக்குள் வந்து விடாதபடி சாலைகளில் பெரும் ஆணிகள் பதித்து, கான்கிரீட் தடுப்பரண்கள் அமைத்து, வண்டி வாகனம் செல்லமுடியாதபடி பள்ளங்களை உருவாக்கி உள்ளனர். ஆயிரக்கணக்கான போலீசாரையும் துணை ராணுவ படையினரையும் டெல்லி எல்லை பகுதிகள் முழுவதும் கண்காணிப்பில் ஈடுபடுத்தி உள்ளனர். மேலும் விவசாயிகள் மீது ஆளில்லா ட்ரோன் விமானங்கள் மூலம் கண்ணீர் புகை குண்டுகள் வீசி உள்ளனர். இது மிகவும் கண்டிக்க த்தக்கது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    விவசாயிகள் போராட்டம் காரணமாக திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு பரபரப்பு நிலவியது.

    • ராமர் கோயில் கட்டுவதால் வறுமை ஒழியாது. பாஜகவின் அரசியல் நோக்கங்களுக்காக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது
    • ராமர் கோயில் காட்டுவதால் பாஜகவிற்கு என்ன லாபம்? அதனால் எங்கள் சகோதரிகளுக்கு என்ன லாபம்? ராமர் கோயிலை வைத்து பாஜக ஏன் ஓட்டு கேட்கிறது?

    ராமர் கோயில் கட்டுவதால் வறுமை ஒழியாது. பாஜகவின் அரசியல் நோக்கங்களுக்காக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது என்று கர்நாடக தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் லாட் தெரிவித்துள்ளார்

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை நாங்கள் எதிர்க்கவில்லை.ஆனால் உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த இடத்தில் கோயில் கட்டப்படவில்லை என்று சந்தோஷ் லாட் குற்றம் சாட்டியுள்ளார்.

    "ராமர் கோயில் கட்டுவதால் பாஜகவிற்கு என்ன லாபம்? அதனால் எங்கள் சகோதரிகளுக்கு என்ன லாபம்? ராமர் கோயிலை வைத்து பாஜக ஏன் ஓட்டு கேட்கிறது? இதன் மூலம் விவசாயிகள் பயன் பெற்றார்களா? அவர்கள் பயன் பெற்றிருந்தால் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள்? எதற்காக விவசாயிகளுக்கு எதிராக கண்ணீர்ப் புகை பயன்படுத்தப்படுகிறது" என அடுக்கடுக்கான கேள்விகளை சந்தோஷ் லாட் எழுப்பியுள்ளார்.

    கர்நாடக அமைச்சர் சந்தோஷ் லாட் கருத்துக்கு, கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் கர்நாடக முன்னாள் துணை முதல்வர் சி.என்.அஸ்வத் நாராயண் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    • மூன்று கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
    • நேற்றிரவு நடைபெற்ற 4-வது கட்ட பேச்சுவார்த்தையில் மத்திய அரசு, கருத்து ஒன்றை பரிந்துரை செய்துள்ளது.

    விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாய விலை நிர்ணயம் செய்வதற்கான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பேரணி நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர். கடந்த வாரம் டெல்லியை நோக்கி செல்ல முடிவு செய்தனர்.

    ஆனால் விவசாயிகள் அரியானா, பஞ்சாப் மாநிலத்திலேயே நிறுத்தப்பட்டனர். இதற்கிடையே விவசாயிகள் சங்கம் மற்றும் மத்திய அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

    மூன்று கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடியும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு 4-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரவு 8.15 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை நள்ளிரவு ஒரு மணி வரை நடைபெற்றதாக தெகவல் வெளியாகியுள்ளது.

    இந்த பேச்சுவார்த்தையின்போது, விவசாயிகளுடன் ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு, ஐந்து ஆண்டுகளுக்கு பருப்பு வகைகள், சோளம் மற்றும் கதர் விளைபொருட்கள் அரசாங்க ஏஜென்சிகளால் குறைந்தபட்ச ஆதாய விலைக்கு வாங்கப்படும். கொள்முதல் செய்வதற்கான அளவுகோல் எதுவும் கிடையாது என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பரிந்துரைத்துள்ளார்.

    ஆனால், விவசாயிகள் உடனடியாக அந்த பரிந்துரையை ஏற்றுக் கொள்ளவில்லை. தங்களுடைய விவசாயிகள் சங்கங்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த இரண்டு நாட்களில் முடிவை சொல்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.

    விவசாய சங்க தலைவர் சர்வான் சிங் பந்தேர் இதுகுறித்து கூறுகையில் "நாங்கள் இதுகுறித்து 19 மற்றும் 20-ந்தேதிகளில் வல்லுநர்களுடன் இணைந்து ஆலோசனை நடத்துவோம். அதன்பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்" என்றார்.

    ×