search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் பாராட்டு"

    • 15 நாட்களுக்கு முதல் சிப்ட் முடிவடைந்த நிலையில் இரண்டாம் சுற்றுக்கு தண்ணீர் திறக்கபட்டுள்ளது
    • கால்வாயை சுத்தம் செய்திடவேண்டுமென விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    உடுமலை : 

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி., 4 ம் மண்டல பாசனத்திற்காக தண்ணீர் திறக்கபட்டு 15 நாட்களுக்கு முதல் சிப்ட் முடிவடைந்த நிலையில் இரண்டாம் சுற்றுக்கு தண்ணீர் திறக்கபட்டுள்ளது

    38 கிலோமீட்டர் நீளம் கொண்ட பி.ஏ.பி வாய்கால் எலையமுத்தூர் பிரிவிலிருந்து வெஞ்சமடைவரை சுமார் நான்கு கிலோமீட்டர் வரை நகர குடியிருப்பு பகுதிகளை ஒட்டி செல்கிறது. இதனால் குப்பைகள் ,இறந்தவிலங்குகளின் உடல்களை கால்வாயில் வீசுவது, கோழிகழிவுகள், காய்கறிகழிவுகளை போடுவது போன்ற சிலரின் செயல்களால் கால்வாய் அசுத்தம் நிறைந்து துர்நாற்றம் வீசி தண்ணீர் செல்ல தடையாக இருந்தது. எனவே கால்வாயை சுத்தம் செய்திடவேண்டுமென விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    தண்ணீர் திறந்துவிடப்படும் முன் செயற் பொறியாளர் மகேந்திரன் தலைமையில் போர்கால அடிப்படையில் களம் இறங்கிய உதவி பொறியாளர் பாபு சபரீஸ்வரன், இளம் பொறியாளர் விஜய்சேகர் உள்ளிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜேசிபி., மூலம் தூர்வாரி புதர்மண்டி கிடந்த செடி கொடிகளை வெட்டி அகற்றினர். மீண்டும் செடிகள் வளராமல் இருக்கும் வகையில் தீ வைத்தும் எரிக்கப்பட்டது.இதனால் உடுமலை கால்வாய் சுத்தமாகி பளிச் என காட்சி தந்ததோடு கடைமடை வரை தண்ணீர் தடையின்றி சென்று வருகிறது .இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் கடைமடை வரை தண்ணீர் தடையின்றி கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்த பி.ஏ.பி அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    ×