search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் அவதி"

    • விவசாய நிலத்தில் மழைநீர் தேங்குவதால் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர்.
    • கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியில் கீழ மட்டையான் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 200 ஏக்கர் பரப்பில் கண்மாய் உள்ளது. இதன் கிழக்கு பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாயம் நடைபெறு கிறது. இங்கு கன்மாய் கரையில் இருந்து மெயின் ரோடு செல்வதற்கு சிறிய பாலம் அமைக்கப்பட்டது இதன் அருகே உயரம் குறைவாக தடுப்பணை கட்டப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது அந்த தடுப்பணையின் உயரம் மேலும் 3 அடி உயர்த்தப்பட்டது. தற்போது பெய்த கனமழையில் கண்மாயில் தண்ணீர் பெருகியதால் தடுப்பணை வழியாக சிறிதளவே தண்ணீர் செல்கிறது. இதனால் தடுப்பணை பகுதியில் சேரும் தண்ணீர் நிரம்பி அருகில் உள்ள வயல்களுக்கு செல்கிறது. இதனால் வயல்கள் மழை தண்ணீரால் மூழ்கி இருக்கிறது. ஓரிரு நாட்கள் பெய்த மழைக்கே வயல்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டன.

    மேலும் தடுப்பணை பகுதியில் தண்ணீர் நிரம்பினால் மலைப்பட்டி கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்து விடக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் தென்கரை கழிவு நீர் வாய்க்காலில் இருந்தும் தண்ணீர் வந்தால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என இந்தப் பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

    அவர்கள் மேலும் கூறியதாவது:

    தடுப்பணையின் உயரத்தை அதிகப்படுத்த திட்டமிட்ட போதே வயல்களில் தண்ணீர் புகுந்து சேதம் ஏற்படும் என அதிகாரிகளிடம் முறையிடோம். ஆனால் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ள வில்லை என்றும். தற்போது வயல்களில் தண்ணீர் தேங்கி இருப்பது குறித்தும் அதிகாரிகளிடம் கூறியுள்ளோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    எனவே மாவட்ட கலெக்டர் இந்த தடுப்பணையையும், நீரில் மூழ்கிய விவசாய நிலங்களையும் நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பயிர் காப்பீடு தொகை கிடைக்காமல் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர்.
    • தியாகியின் பேரன் சிறுமடை நேரு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒன்றியத்தில் உள்ள விவசாயிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக பயிர் காப்பீடு வழங்காத காப்பீட்டு நிறுவனம் அதிகாரியின் அலட்சியத்தால் விவசாயி கள் வேதனை அடைந்துள்ள னர்.

    தேவகோட்டை ஒன்றி யத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி களில் அனைத்து கிராமங்க ளிலும் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். பெரும்பாலும் வானம் பார்த்த பூமியாகவே உள்ளதால் விவசாயிகள் பருவ காலங்களில் மட்டுமே விவசாயம் செய்து வருகின்ற னர். கடந்த சில ஆண்டுக ளாகவே பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் அதிக கடன் சுமையால் அவதிப்பட்டு வருகின்றனர்.

    காரை வருவாய் உள்ள டங்கிய 14 கிராமங்களில் விவசாயிகள் ஒவ்வொரு வருடமும் விவசாய பணி களை மேற்கொள்ளும்போது பயிர் காப்பீடு செய்து வரு கின்றனர். ஆனால் 4 ஆண்டுகளாகவே பருவ மழை பொய்த்ததால் விளை நிலங்கள் வறண்டு காணப் பட்டது.

    மோட்டார் பாசன மூலம் ஓரிரு இடங்களில் விளைச் சல் ஏற்பட்டுள்ளது. அதி காரிகள் கணக்கில் கொண்டு அந்த பகுதி முழுவதும் விளைச்சல் அடைந்துள்ள தாக கணக்கீடு செய்ததால் காப்பீடு தொகை மற்றும் நிவாரண தொகை கண்மாய் பாசன விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை.

    ஒவ்வொரு ஆண்டும் வங்கிகளில் நகை கடன் மற்றும் விவசாய கடன் பெற்று விவசாய பணிகளை மேற்கொண்டு வரும் சூழ லில் காப்பீடு தொகை கூட கிடைக்காததால் விவசாயி கள் மனவேதனை அடைந்துள்ளனர்.

    பயிர் காப்பீடு செய்யும் பொழுது அரசு அந்நிறுவ னத்தை ஏற்று நடத்த வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டனர். தமிழக அரசு விவசாயி களுக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக பயிர் காப்பீடு வழங்காத கிராமங்க ளுக்கு காப்பீடு வழங்க வேண்டும். இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக சுதந்திர போராட்ட தியாகி யின் பேரன் சிறுமடை நேரு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

    • நெடுஞ்சாலை பணிக்காக மூடப்பட்ட பாசன கால்வாயால் விவசாயிகள் அவதி அடைந்தனர்.
    • வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் வந்த சோதனை.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் எஸ். மாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் இங்குள்ள வாகை கண்மாயில் பருவ மழை காலங்க ளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி பல ஆண்டுகளாக விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் விவசாயி களின் விளைநிலங்கள் குறுக்கே கடந்த 3 ஆண்டுகளாக மதுரை-காரைக்குடி தேசிய நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் காலங்காலமாக ஏக்கர் கணக்கில் உள்ள விளை நிலங்களுக்கு பாசனத்திற்காக பயன்படுத்தி வந்த கால்வாயை அதிகாரிகள் சாலை பணிக்காக மூடி விட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் சாலையின் ஒரு புறம் சுமார் 20 ஏக்கர் பரப்பில் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியும், மறுபுறம் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பல ஏக்கர் நிலம் தரிசு நிலம் போல் காட்சி அளிக்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகை யில், சாலை பணி தொடங்கும் போது அதிகாரிகளிடத்தில் காலங்காலமாக விவசாயத்திற்கு நாங்கள் பயன்படுத்தி வந்த தூம்பு வாய்க்காலிலேயே புதி தாக கல்வெட்டு பாலத்தை ஏற்படுத்தி தாருங்கள் என்று கோரிக்கை விடுத்தோம்.

    ஆனால் அதிகாரிகள் எங்கள் பேச்சுக்கு செவி சாய்க்காமல் கண்மாயின் இருபுறமும் மேடாக உள்ள பகுதியில் பாலத்தை கட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கண் மாயிலில் உள்ள தண்ணீரை பாசனத்திற்கு மடை வழியாக திறக்கும்போது வயலின் ஒரு பகுதியில் கண்மாய் போல் தண்ணீர் தேங்கிய கார ணத்தினால் மறுப்பகுதிக்கு செல்ல முடியாத ஒரு சூழ்நிலை கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் நிலவி வருகிறது.

    இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடத்தில் தெரிவித்தும் இன்றளவும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை என்று கூறி வருகின்றனர். அதிகாரி களின் அலட்சியம் மற்றும் மெத்தனப்போக்கால் ஒரு கிராமமே விவசாயத்தை இழந்து தண்ணீர் இருந்தும் கண்ணீர் சிந்தும் சூழ்நிலையிக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 15 நாட்களாக நீர் பாசனம் செய்ய முடியாவில்லை
    • ஆலோசனை செய்த பிறகே நடவடிக்கை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், ஓட்டேரி அடுத்த வானியன்குளம் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. விவசாய நிலங்கள் அதிகம் காணப்படும் இந்த பகுதியில் நெல், சேம்பு, கருணை, மஞ்சள், கடலை, கத்தரி மற்றும் வெண்டை உள்ளிட்ட பயிர் வகைகள் விவசாயம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் இறுதி ஊர்வல பூ பல்லக்கு மின் கம்பியின் மீது உரசியது. இதனால் அந்த பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரின் மின்மாற்றியில் பழுது ஏற்பட்டுள்ளது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மின்வாரிய அதிகாரிகள், வீடுகளுக்கு மட்டும் மின் இணைப்பு கிடைக்கும்படி மின் மாற்றியை தற்காலிகமாக சரி செய்துள்ளனர்.

    இதனால் விவசாய நீர் பாசன மின் இணைப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதன்படி கடந்த 15 நாட்களாக அந்த பகுதியில் உள்ள விவசாயிகளில் நீர் பாசனம் செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் பயிர்கள் வாடி வதங்கி கருகிப்போக தொடங்கியுள்ளது.

    இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மின்மாற்றியில் கோளாறு ஏற்பட்டு உள்ளது. அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை செய்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறினர்.

    • வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணி கத்துறை விற்பனை குழு அலுவலகம் உள்ளது.
    • இங்கு ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலமாக வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை ஏலம் நடைபெறுகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வெங்கமேடு பகுதியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணி கத்துறை விற்பனை குழு அலுவலகம் உள்ளது. இங்கு ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலமாக வாரந்தோ றும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை ஏலம் நடைபெறுகிறது.

    செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலமும், வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறுவது வழக்கம். ஏல முறைகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக வர்த்தகம் செயல்ப டுகிறது. அதில் பொருட்க ளின் தரத்துக்கு ஏற்ப அதிகபட்ச விலை, குறைந்த பட்ச விலை, சராசரி விலையென நிர்ணயித்து பொருட்களைக் கொண்டு வரும் விவசாயிகளுக்கு அதற்குரிய தொகையை வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

    தற்போது கடத்த சில வாரங்களாக வியாழக்கி ழமை தோறும் தேங்காய் பருப்பு ஏலம் நடத்துவதில் குளறுபடி ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. தேங்காய் பருப்பு ஏலம் மதியம் நடந்து முடிந்தவுடன் மாலையில் தாங்கள் கொண்டு வந்த தேங்காய் பருப்பு என்ன விலைக்கு போனது என விவசாயிக ளுக்கு செல்போனுக்கு வரும் எஸ்.எம்.எஸ்.மூலம் தெரிந்து கொள்வார். வியாழக்கிழமை நடந்த ஏலத்தில் தாங்கள் கொண்டு வந்த பொருட்களின் ஏல விலை தெரியாமல் வெள்ளிக்கிழமை விவசாயி கள் விலையை தெரிந்து கொள்ள காலை 10.30 மணிக்கு நேரில் வந்தனர். விவசாயிகளுக்கு தகுந்த பதில் கூற அங்கு பணியில் ஆட்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    இது குறித்து விவசாயிகள் கூறும்போது, கடந்த சில மாதங்களாக இங்கு உரிய நேரத்தில் பணிக்கு பணி யாளர்கள் வருவதில்லை. இந்த அலுவலகம் பெயருக்கு மட்டுமே செயல்படுகிறது. வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே ஏலம் நடைபெறு கிறது. இங்கு விவசாயப் பொருட்கள் அழுகி போகா மல் இருக்க குளிர்சா தன வசதி கிடங்கு உள்ளது. விவ சாயிகள் மற்றும் வியாபாரி கள் தாங்கள் தேவைப்படும் நேரத்தில் குளிர்சாதன கிடங்கில் இருந்து பொருட் களை எடுக்க முடியா மல் போன தால் அதை விவசாயிகள் பயன்படுத்த முன் வருவ தில்லை.நேற்று முன்தினம் நடந்த தேங்காய் பருப்பு ஏல நிலவரம் வெள்ளிக்கிழமை வரை ஏல நிலவரம் தெரிய வில்லை. மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    இது குறித்து அங்கு இருந்த ஊழியரிடம் கேட்ட போது, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மின்சப்ளை அதிக வோல்டேஜ் வந்ததால் மின் இணைப்பில் இருந்த சாத னங்கள் பழுதாகியது. இது குறித்து மின்சார வாரியத்தி டம் புகார் அளிக்கப்பட் டுள்ளது. தேங்காய் பருப்பு ஏலம் நிலவரம் குறித்து விவசாயிகளுக்கு கூடிய விரைவில் ெதரிவிக்கப்படும், என்றார்.

    • கூட்டுறவு சங்கத்தில் சுமார் 6,400-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.
    • அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கடத்தூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் சுமார் 6,400-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

    உறுப்பினர்களாக உள்ள விவசாயிகள் பயிர் கடன், மற்றும் பயிர் கடன் புதுப்பித்தல், புதிய நகை கடன், நகை கடன் புதுப்பித்தல் உள்ளிட்டவைகளுக்கு வங்கியில் கடன் பெற முடியாத நிலையில் இருந்து வருகின்றனர்.

    இந்த வங்கியில் ஏற்கனவே பணியாற்றி வந்த செயலாளர் பணி மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இதுவரை முறையாக அவர் கணக்குகளை ஒப்படைக்கா மல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகி ன்றது.

    இந்த நிலையை போக்க பல முறை அதிகாரிக ளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படா மல் உள்ளதாக தெரிகின்றது. நிலையை போக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    தற்போது விதைப்பு பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் நலனில் அக்கறை கொண்டு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்த்து ள்ளனர்.

    • உழவர் சந்தைக்கு காய்கறிகொண்டுவருவதை நிறுத்தி சாலை ஓரங்களில் கடை அமைத்துவிற்பனை செய்ய போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
    • சில்லரை விற்பனையாளர்கள் சாலையின் இரு புறமும் தற்காலிக கடை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

    உடுமலை:

    உடுமலைப்பேட்டை ெரயில் நிலையம் அருகே அமைந்துள்ள உழவர்சந்தையில் காய்கறி விற்பனை செய்ய உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் சுற்றுவட்டராப் பகுதி விவசாயிகள் தினந்தோறும் விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் இதேபோல் உழவர்சந்தையின் வெளிப்புறம் சில்லரை விற்பனையாளர்கள் சாலையின் இரு புறமும் தற்காலிக கடை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் விவாசாயிகளுக்கு மிகவும் நெருக்கடி ஏற்படுகிறது.

    மேலும் வாகனங்களை நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள் ஏற்படுகிறது .இதுகுறித்து விவசாயிகள் பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் பெரிதும் நஷ்டம் அடைவதாகவும் தெரிவித்தனர் .உடனடி நடவடிக்கை இல்லை என்றால் உழவர் சந்தைக்கு காய்கறிகொண்டுவருவதை நிறுத்தி சாலை ஓரங்களில் கடை அமைத்துவிற்பனை செய்ய போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்

    • தமிழக பகுதிகளின் மேல் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
    • விவசாயி பணிகள் பாதிப்படைந்து வருவதோடு, விவசாயிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    கடலூர்:

    தமிழக பகுதிகளின் மேல் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்திக உள்ளனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றன. இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் திருப்பாதிரிப்புலியூர் முதுநகர் செம்மண்டலம், காராமணிக் குப்பம், திருவந்திபுரம், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், நடுவீரப்பட்டு, தொழுதூர், வேப்பூர், கீழச்செருவாய், லால்பேட்டை, பரங்கிப்பேட்டை, புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம் ,காட்டுமன்னார்கோயில் அண்ணாமலைநகர், பண்ருட்டி, சிதம்பரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்து வந்தது. இதன் காரணமாக சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருந்தது காண முடிந்தது.

    மேலும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயி பணிகள் பாதிப்படைந்து வருவதோடு, விவசாயிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.கடலூர் மாவட்டத்தில் மழை அளவு பின்வருமாறு தொழுதூர் - 34.0, வேப்பூர் - 27.0, கீழச்செருவாய் - 25.0, லால்பேட்டை - 18.0, காட்டுமயிலூர் - 15.0,பரங்கிப்பேட்டை - 14.4, புவனகிரி - 13.0, ஸ்ரீமுஷ்ணம் - 11.2, காட்டுமன்னார்கோயில் - 11.0, அண்ணாமலைநகர் - 10.0, பண்ருட்டி - 8.5, சிதம்பரம் - 7.4, கடலூர் - 5.8, கலெக்டர் அலுவலகம் - 5.4, கொத்தவாச்சேரி - 5.0, மீ-மாத்தூர் - 5.0, எஸ்ஆர்சி குடிதாங்கி - 3.75, வானமாதேவி - 3.0,ஆக மொத்தம் 222.45 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது .

    • தை மாத அறுவடைக்கு தயாராகி வருகின்றனர்
    • இயந்திரத்தில் நெல் நாற்று நடப்பட்டது

    நெமிலி:

    நெமிலி தாலுகாவில் தை மாத அறுவடைக்கு தயாராகும் விவசாயிகள் , கூலி ஆட்கள் பற்றாக்குறையால் இயந்தி ரத்தில் நெல் நாற்று நடும் பணியில் மும்முரமாக ஈடு பட்டுள்ளனர் . இதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் , நெமிலி தாலு காவுக்கு உட்பட்ட பகு திகளில் கூலி ஆட்கள் பற்றாக்குறையால் , பெரும் பாலான விவசாயிகள் தங் களது விளை நிலங்களில் இயந்திரங்கள் மூலம் நெல் 55 நாற்று நடும் பணியில் ஈடு பட்டுள்ளனர். இதன் மூலம் தை மாத அறுவடைக்கு தயாராகி வருவதாகவும் , அதிக லாபம் கிடைக்கும் என்றும் விவசாயிகள் தெரி வித்தனர்.

    இதுகுறித்து விவசாயி கள் கூறியதாவது:-

    ஆடி மாதத்தில் விதை விதைத்து விவசாயம் செய் தால் , தை மாதத்தில் அறு வடை செய்யலாம் பயிர் களுக்கு தேவையான சூரிய ஒளியும் , பிராண வாயுவும் , நல்ல மழையும் கிடைத்து , விவசாயிகளுக்கு சிறப் பான கொடுக்கும் . கடுமையான கோடைக்காலங்களைச் சந்தித்த மண் . இறுகி கடின மாக மாறியிருக்கும் .

    ஆனி மழையில் இறுக்கங்கள் தளர்ந்து இதமாக இளக தொடங்கும் . இதனால் ஆடி மாதத் தில் விதைத்த நெல்மணி கள் முளைத்துள்ள நிலை யில் , நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ளோம் . ஆனால் 100 நாள் வேலை உட்பட பல்வேறு பணிகளுக்கு பலர் சென்றுவிடுவதால் , விவசாய பணிகளுக்கு போதிய கூலி ஆட்கள் கிடைப்பதில்லை .

    இதனால் விவசாயத்தில் இயந் திரபயன்பாடு என்பது மிக அவசியமாகி விட்டது . அதற்கேற்ப நவீன இயந் திரங்கள் வருகையால் வேலையாட்கள் தேவை குறைவதோடு , வேலையை விரைவாக முடிக்கவும் முடிகிறது . இயந்திரங்கள் மூலம் குறைந்த நேரத்தில் அதிக பரப்பிலான சாகுபடியும் மேற்கொள்ள முடிகிறது .

    இதன் மூலம் அதிக லாபம் கிடைக்கிறது . மேலும் அரசு சார்பிலும் மானியம் வழங் கப்படுகிறது . இதனால் இயந்திரங்கள் மூலம் நடவு பணியில் ஈடுபட்டு வருகி றோம்.இவ்வாறு அவர்கள் கூறினர் .

    ×