search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாய கூலி"

    • சைக்கிளில் சென்று கொண்டிருந்த சின்னச்சாமி மீது நான்கு சக்கர வாகனம் ஒன்று மோதியது.
    • விபத்தில் தூக்கி வீசப்பட்ட சின்னசாமி தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    பவானி:

    பவானி தொட்டிபாளையம் கிராமம் ஓதுவார் தோட்டத்தில் வசிப்பவர் சின்னசாமி (60). விவசாய கூலி தொழிலாளி. சம்பவத்தன்று சின்னசாமி தனது சைக்கிளில் தொட்டி பாளையம் பகுதியில் இருந்து ஊராட்சி கோட்டைக்கு சென்று கொண்டிருந்துள்ளார்.

    அப்போது அவ்வழியாக வந்த நான்கு சக்கர வாகனம் ஒன்று சைக்கிளில் சென்று கொண்டிருந்த சின்னச்சாமி மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சின்னசாமி தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பவானி போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று இறந்த சின்னச்சாமி உடலை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    ேமலும் இது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • சம்பவத்தன்று விவசாய கூலி வேலைக்காக சண்முகம் வீட்டிலிருந்து சென்றார்.
    • சண்முகம் மனைவி மஞ்சுளாவை உறவினர் வீடு உட்பட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார். எங்கு தேடியும் மஞ்சுளா கிடைக்கவில்லை.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஆம்பூர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் விவசாயி. இவரது மனைவி மஞ்சுளா (வயது 27) இவர்கள் இருவருக்கும் 8 வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது ஒரு மகன் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று விவசாய கூலி வேலைக்காக சண்முகம் வீட்டிலிருந்து சென்றார். பின்னர் வேலை முடிந்து மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்த மனைவி மஞ்சுளாவை காணவில்லை.

    உடனே சண்முகம் மனைவி மஞ்சுளாவை உறவினர் வீடு உட்பட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார். எங்கு தேடியும் மஞ்சுளா கிடைக்கவில்லை. இது குறித்து சண்முகம் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் அதே பகுதியை சேர்ந்த அய்யனார் என்பவர் மீது சந்தேகத்தின் அடிப்படையில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மஞ்சுளா குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×